Sunday, 29 October 2017
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
Tuesday, 24 October 2017
கெக்கிராவ பட்டினி மாணவி ! இப்போதும் அந்தக்குடும்பத்துக்கு உணவில்லை
Esther Nathaniel : வறுமையும் வாழ்வும்.
கெக்கிராவ மாடாட்டுகம பகுதியில் உள்ள சிங்கள பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி கற்ற மாணவி திடீரென்று வாந்தி எடுத்துள்ளார் காரணம் தொடர்ந்து மூன்று நாள் உணவு உண்ணவில்லை ஒரு நாள் ஒரு தடவை உணவு உட்கொண்டுள்ளார். அதனால் பசி மயக்கத்தால் வாந்தி எடுத்துள்ளார். பின்னர் அதிபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவி தொடர்ந்து மூன்று நாள் வாந்தி எடுத்துள்ளார் இதனை அவதானித்த அதிபர் மாணவி கர்ப்பமாக இருப்பதாக எண்ணி வைத்திய பரிசோதனைகள் இன்றி அவரை பாடசாலையை விட்டு உடனடியாக விலக்கயுள்ளார் விடுகை பத்திரத்தையும் வழங்கி.பின்னர் பெற்றோர்கள் அவரை வைத்தியசாலையில் சேர்த்து பரிசோதித்தப்பின்பு அவர் கர்ப்பம் இல்லையென்றும் தொடர்ச்சியான பட்டினியும் உணவு இன்மையும் காரணமாகவே வாந்தி எடுத்துள்ளதாக வைத்திய அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளது.அதிபரின் முட்டாள்த்தனமான பிழையான அவதானத்தால் மாணவிக்கு கெட்டப்பெயர் ஏற்பட்டதாகவும் பாடசாலைக்கும் சமூகத்துக்கும் முகம்கொடுக்க இயலாமல் வெட்கப்பட்டு பிள்ளை தற்கொலைக்கு முயற்சித்துள்ளமையும் மிகவும் வேதனைக்குரியதே இப்போது அவர் தம்புள்ள வைத்தியசாலையில் மேலதிக
சிகிச்சை பெறுகிறார் இப்போதும் அந்தக்குடும்பத்துக்கு உணவில்லை
என்பதும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
சிகிச்சை பெறுகிறார் இப்போதும் அந்தக்குடும்பத்துக்கு உணவில்லை
என்பதும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
Saturday, 7 October 2017
வடக்கு, கிழக்கு இணைந்ததாக இருக்க வேண்டும் :விநாயகமூர்த்தி முரளீதரன்
veerakesari : வடக்கிலும், கிழக்கிலும் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும் தெரியாது" என கருணாம்மான் என்றழைக்கப்படும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மத்தியகுழு கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு கல்லடியில் உள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்
விநாயகமூர்த்தி முரளீதரன் தொடர்ந்து தெரிவிக்கையில்,
"இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்காக எமது கட்சி குரல் கொடுத்துக் கொண்டே இருக்கும், அது போன்று எமது மக்களின் விடுதலைக்காகவும் ஆணித்தரமாக செயற்படும் என்பதுடன், 20 ஆவது திருத்த சட்டம் தற்ப்பொழுது பாராளுமனறத்தில் அமுலாக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்துள்ளது ஆனால் எமது கட்சி இதை முற்று முழுதாக எதிர்க்கின்றது.
Friday, 22 September 2017
கமல் அவர்களே கருப்புக்குள் காவியை மறைக்க முயற்சிக்கிறீர்கள் .தோற்கடிக்கப்படுவீர்கள்.
Damodaran :
தமிழர்களை ஏமாற்ற முயன்றால் ஏமாந்து போவீர்கள்.
தற்போது தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினை ....
ஊழல் ஒழிப்பு அல்ல.
மாறாக ..
எங்கள் மொழி உரிமை...கல்வி உரிமை ...நீர் உரிமை ...நில உரிமை தொழில் உரிமை ..தன்மானம் தன்னாட்சி உரிமை ...பண்பாட்டு கலாச்சார உரிமை என பற்பல சிக்கல்கள் எதிர்நோக்கி உள்ளோம்
69 % இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து
காவேரி தண்ணீர் மறுப்பு ..
இந்தி சமஸ்கிருதம் திணிப்பு ...
நீட் தேர்வு சி பி எஸ் சி நவோதய பள்ளிகள் ,ராணுவ பள்ளிகள் கேந்திரிய வித்யாலயாக்கள் ஒருபுறம்
நெடுவாசல் கதிராமங்கலம் கூடங்குளம் ஓ என் ஜி சி எண்ணெய் எரிவாயு நிலக்கரி மண்டலங்கள் ஒரு புறம்...
ஜி எஸ் டி வரி
கீழடி அகழ்வாராய்வு மோசடி
உதய மின் திட்டம் உணவு பாதுகாப்பு திட்டம் என வித விதமான சுரண்டல்கள் ...... என எண்ணற்ற சிக்கல்களில் சிக்கி தவிக்கின்றது தமிழகம்
ஒரு வார்த்தையில் சொல்லப்போனால் ...மோடி பாஜக அரசு தமிழ்நாட்டின் மீது ஆதிக்க போர் தொடுத்துள்ளது
எனவே நீங்கள் உண்மையாகவே தமிழ் நாட்டுக்கு தொண்டு செய்ய நினைத்தால் ....
நீங்கள் போராடவேண்டியது ஊழலை எதிர்த்து அல்ல ...துணிவிருந்தால்...தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்து தமிழர்களை பழிவாங்கிக்கொண்டு இருக்கின்ற மோடி அரசை எதிர்த்து போராடுங்கள்
தமிழர்களை ஏமாற்ற முயன்றால் ஏமாந்து போவீர்கள்.
தற்போது தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினை ....
ஊழல் ஒழிப்பு அல்ல.
மாறாக ..
எங்கள் மொழி உரிமை...கல்வி உரிமை ...நீர் உரிமை ...நில உரிமை தொழில் உரிமை ..தன்மானம் தன்னாட்சி உரிமை ...பண்பாட்டு கலாச்சார உரிமை என பற்பல சிக்கல்கள் எதிர்நோக்கி உள்ளோம்
69 % இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து
காவேரி தண்ணீர் மறுப்பு ..
இந்தி சமஸ்கிருதம் திணிப்பு ...
நீட் தேர்வு சி பி எஸ் சி நவோதய பள்ளிகள் ,ராணுவ பள்ளிகள் கேந்திரிய வித்யாலயாக்கள் ஒருபுறம்
நெடுவாசல் கதிராமங்கலம் கூடங்குளம் ஓ என் ஜி சி எண்ணெய் எரிவாயு நிலக்கரி மண்டலங்கள் ஒரு புறம்...
ஜி எஸ் டி வரி
கீழடி அகழ்வாராய்வு மோசடி
உதய மின் திட்டம் உணவு பாதுகாப்பு திட்டம் என வித விதமான சுரண்டல்கள் ...... என எண்ணற்ற சிக்கல்களில் சிக்கி தவிக்கின்றது தமிழகம்
ஒரு வார்த்தையில் சொல்லப்போனால் ...மோடி பாஜக அரசு தமிழ்நாட்டின் மீது ஆதிக்க போர் தொடுத்துள்ளது
எனவே நீங்கள் உண்மையாகவே தமிழ் நாட்டுக்கு தொண்டு செய்ய நினைத்தால் ....
நீங்கள் போராடவேண்டியது ஊழலை எதிர்த்து அல்ல ...துணிவிருந்தால்...தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்து தமிழர்களை பழிவாங்கிக்கொண்டு இருக்கின்ற மோடி அரசை எதிர்த்து போராடுங்கள்
மோடி அரசை எதிர்க்க துணிவோ விருப்பமோ இல்லை என்றால் பாஜகவில் சேர்ந்து விடுங்கள்
Wednesday, 20 September 2017
புனிதத்தை தீட்டாக்கிய ஆண்கள் ...வெளிநாடுகளில் இருந்து கற்றுக்கொள்ளுவோம் ..ஷாலின் மரியா லாரன்ஸ்
Shalin Maria Lawrence : சுதந்திரத்தின் நிறம் சிவப்பு
நன்றி குமுதம் : Dated : 6-09 -2017
16 வயதிலிருந்தே எனக்கு தாயாகும் ஆசை இருந்தது .மற்றவர்கள் காதலனை
தேடும் அந்த காலத்தில் எனக்கு தாய்மை உணர்வு மேலோங்கி இருந்தது
.இன்று வரை குழந்தை பெற்றுக்கொள்ளவிட்டாலும் குழந்தைகளுக்கான அந்த
அதீத அன்பும் நேசமும் மனம் முழுதும் பரவி கிடக்கிறது . ஆனால் சில
நாட்களுக்கு முன் நடந்த அந்த விஷயத்தை கேள்வி பட்டபொழுது என் அடி
வயிற்றில் கூர் வாளை கொண்டு கிழித்ததை போல் ஒரு கோர உணர்வு . ஆம்
பாளையம்கோட்டையை சேர்ந்த சாஃரின் ஹாஜிரா என்கிற 12 வயதே ஆனா
ஒரு பெண் குழந்தையின் தற்கொலை செய்திதான் அது .மன்னிக்கவும்
....தற்கொலையல்ல கொலை செய்தி அது . பெண் உடலில் நிகழும்
இயற்கையின் அழகிய மாற்றங்களை தீட்டு ,அசிங்கம் என்று கூறி இழிவு
படுத்தி ஒரு சின்னஞ்சிறு குழந்தையை தற்கொலை என்கிற விஷயத்தை
செய்யவைத்த இந்த சமூகமும் இந்த சமூகத்தின் போலி கோட்பாடுகளும்
செய்த படுகொலை அது .
இரண்டு மாதத்திற்கு முன்பு தான் வயதிற்கு வந்த அந்த சிறுமியின் யூனிபார்ம்
உதிரப்போக்கில் கறைபட்டத்திற்காக அந்த சிறுமியை அவரின் ஆசிரியையை
எல்லார்முன் கடுமையாக திட்டி இருக்கிறார் ,அவருக்கு ஒரு நாப்கினுக்கு கூட ஏற்பாடு செய்யாமல் அவரை தலைமை ஆசிரியரிடம் கொண்டுபோய் நிறுத்தி அவரும் சிறுமியை திட்டி இருக்கிறார் . அந்த விஷயங்கள் தாங்காமல் அந்த குழந்தை சரியாக எழுதக்கூட தெரியாமல் ஒரு கடிதத்தை எழுதி
வைத்துவிட்டு பக்கத்துவீட்டு மாடியில் இருந்து குதித்து தன் உயிரை
மாய்த்திருக்கிறது .
சாரு நிவேதா : வேதம் முழுக்கவும் நிரம்பியிருப்பது எதிரிகள் மீதான துவேஷம் , காமவெறி . சோமபான போதை .
பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது"-எழுத்தாளர் சாரு நிவேதிதா..
பெரியார்மீது எனக்குக் கொஞ்சம் மனஸ்தாபம் இருந்தது. மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நடத்திய போராட்டத்தில் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பல செழுமையான பகுதிகளும் அடித்துக் கொண்டு போய் விட்டனவே என்பதுதான் என் மனஸ்தாபத்திற்குக் காரணம். உதாரணமாக, பிராமணீயத்தை எதிர்ப்பதற்காக சமஸ்கிருத மொழியை எதிர்த்தார். அதனால் காளிதாசன் எழுதிய அதி அற்புத காவியங்களை நாம் படிக்க முடியாமல் போயிற்று. வருணபேதத்தை முன்னிறுத்துகின்றன என்பதால் புராணங்களையும் இதிகாசங்களையும் எதிர்த்தார். அதனால் உலக இலக்கியங்களிலேயே தலைசிறந்த காவியம் என்று உலக எழுத்தாளர்களால் போற்றப்படும் மகாபாரதத்தைப் படிக்காமல் விட்டோம். இப்படியெல்லாம் இவ்வளவு காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால் சமஸ்கிருதத்தில் உள்ள முக்கிய நூல்களை நானே படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது.
சாதாரண தரத்தில் தோற்றவர்களும் இனி உயர்தரம் படிக்கலாம்!
Kumaran : க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தத் தவறிய மாணவர்கள், உயர்தரக் கல்வியைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் மாற்றம் ஒன்றைக் கொண்டுவர கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், எதிர்வரும் காலங்களில் மனித வளத்தை அபிவிருத்தி செய்து, அதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், மாணவர்களின் கல்வியுரிமையை அவர்களுக்கு வழங்கி, அவர்களது ஆளுமைத் திறனை மேம்படுத்தி அவர்களை வேலை செய்யும் வர்க்கத்தினுள் கொண்டுவருவது இன்றியமையாதது என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் முன்னோடித் திட்டத்தை அடுத்த மாதம் 42 பாடசாலைகளில் அறிமுகப்படுத்தவும் கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது. வீரகேசரி
மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்
Kumaran
மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றில் சற்று முன் நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டமூலத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் பதிவாகின.
மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின்போதே இது நிறைவேற்றப்பட்டது. வீரகேசரி
Tuesday, 19 September 2017
மெக்சிகோவில் அதிசக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி 7.1 ரிச்டர் அளவில்
மெக்சிகோவில் நேற்று ஏற்பட்ட அதிசக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடி ஒளிந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெக்சிகோவின் தலைநகரில் இருந்து சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பூஎப்லா பகுதிக்கு அருகாமையில் நேற்று குறித்த சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவில் நேற்று ஏற்பட்ட பூமியதிர்ச்சி 7.1 ரிச்டராக பதிவாகியுள்ளதாக, அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்திய இலங்கை நிதியில் மலையக பாடசால அபிவிருத்தி 895 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி!
மலைய குருவி :இந்தியாவின் 395 மில்லியின் நிதி உதவியுடன் மலையகத்தில் 31 பாடசாலைகளும் கல்வி அமைச்சின் 500 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 60 பாடசாலைகளும் மொத்தமாக 895 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி!
- பா.திருஞானம்
மலையகத்தில் இந்தியாவின் 395 மில்லியின் நிதி உதவியுடன்; 31 பாடசாலைகளும் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்ட 25 கணித விஞ்ஞான பாடசாலைகளும் 2017 ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் 250 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 35 பாடசாலைகளும் மொத்தமாக 895 மில்லியன் ரூபா செலவில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு மலையக பாடசாலைகளின் அபிவிருத்திக்கு மேலும் 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கபடவுள்ளது.
Saturday, 16 September 2017
மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு
மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு...பெருந்திரளாக கூடிய
இளைஞர்கள்! நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன் மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு இன்று (16.09.2017) கொட்டகலை சித்தி விநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. காலை 11.00 மணியளவில் கொட்டகலை ரொசிட்டா சந்தியில் இருந்து மலையக கலை கலாச்சார நிகழ்வுகளுடன் ஊர்வலம் ஆரம்பமாகி பிரதான மண்டபத்தை வந்தடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதல் நிகழ்வாக மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமான அமரர் சந்திரசேகரன் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது. மலையக குருவி
இளைஞர்கள்! நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன் மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு இன்று (16.09.2017) கொட்டகலை சித்தி விநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. காலை 11.00 மணியளவில் கொட்டகலை ரொசிட்டா சந்தியில் இருந்து மலையக கலை கலாச்சார நிகழ்வுகளுடன் ஊர்வலம் ஆரம்பமாகி பிரதான மண்டபத்தை வந்தடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதல் நிகழ்வாக மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமான அமரர் சந்திரசேகரன் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது. மலையக குருவி
Friday, 15 September 2017
தனுஷ்கோடி மக்கள் வாழ தகுதியான நகரமா?
1964ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழகத்தின் முக்கிய வணிகப்பகுதியாகவும்,
துறைமுக பகுதியாகவும் இருந்த தனுஷ்கோடி பயங்கர புயல் காரணமாக மொத்தமாக சிதைந்தது. தற்போது எஞ்சியிருப்பது பழைய ரயில் நிலையம், சிதைந்துப் போன தேவாலயம், பள்ளிக்கூடம், வீடுகள் என இடிந்த கட்டிட கூடுகள் மட்டுமே இந்த பகுதி அரசாலும், பொதுமக்களாலும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கைவிடப்பட்ட நிலையில் கடந்த ஜூலை 27 முதல் மிச்சமிருக்கும் நிலப்பரப்பும் தார் சாலை மூலம் இணைக்கப்பட்டது. சிறப்புப் பேருந்துகள் வசதியுடன் பழைய தனுஷ்கோடி நகரும் அரிச்சல் முனையும் சுற்றுலாத் தலமாக தற்போது உருப்பெற்றிருக்கிறது. இருப்பினும் இந்த பகுதி மனிதர்கள் வாழ தகுதியுடையதா என்று ஆராய பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்த நிலையில் தனுஷ்கோடி நகரம் மக்கள் வாழத் தகுதியானதா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேர் வருகிற செப்டம்பர் 17-ம் திகதி தனுஷ்கோடிக்குச் செல்ல உள்ளனர். அவர்கள் கொடுக்கும் அறிக்கையை பொறுத்தே தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகி தினகரன்
துறைமுக பகுதியாகவும் இருந்த தனுஷ்கோடி பயங்கர புயல் காரணமாக மொத்தமாக சிதைந்தது. தற்போது எஞ்சியிருப்பது பழைய ரயில் நிலையம், சிதைந்துப் போன தேவாலயம், பள்ளிக்கூடம், வீடுகள் என இடிந்த கட்டிட கூடுகள் மட்டுமே இந்த பகுதி அரசாலும், பொதுமக்களாலும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கைவிடப்பட்ட நிலையில் கடந்த ஜூலை 27 முதல் மிச்சமிருக்கும் நிலப்பரப்பும் தார் சாலை மூலம் இணைக்கப்பட்டது. சிறப்புப் பேருந்துகள் வசதியுடன் பழைய தனுஷ்கோடி நகரும் அரிச்சல் முனையும் சுற்றுலாத் தலமாக தற்போது உருப்பெற்றிருக்கிறது. இருப்பினும் இந்த பகுதி மனிதர்கள் வாழ தகுதியுடையதா என்று ஆராய பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்த நிலையில் தனுஷ்கோடி நகரம் மக்கள் வாழத் தகுதியானதா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேர் வருகிற செப்டம்பர் 17-ம் திகதி தனுஷ்கோடிக்குச் செல்ல உள்ளனர். அவர்கள் கொடுக்கும் அறிக்கையை பொறுத்தே தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகி தினகரன்
அமைச்சர் திகாம்பரத்திற்கு எதிரான வழக்கு; தொழிலாளர்கள் வெற்றி
Malayaga Kuruviமலையக குருவி : யாபார்க் போராட்டத்தில் பங்கேற்றதாலேயே
வீடுகள் வழங்கப்படவில்லை" - தொழிலாளர்கள் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சினால் வீடுகள் வழங்க மறுக்கப்பட்ட மஸ்கெலிய பிரவுன்ஸ்விக் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகள் கிடைத்தமையானது தொழிலாளர்களுக்கு சட்ட ரீதியாக கிடைத்த வெற்றியென பயனாளர்கள் தெரிவிக்கின்றனர். மஸ்கெலிய பிரவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த லயன் வீடுகளின் 16 காம்பிராக்கள், 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி மின்சார கோளாறினால் தீக்கிரையாக்கப்பட்டது. 16 லயன் வீடுகளில் வாழ்ந்த, 21 குடும்பங்கள் அப்பகுதி பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சு இத்தொழிலாளர்களுக்கு 23 வீடுகளை அமைத்ததோடு, 2017 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி அமைச்சினால் வீடுகள் தொழிலாளர்களுக்கு கையளிக்கப்பட்டன. செங்கடி சங்கத்தின் தோட்டத் தலைவர் உள்ளிட்ட இரு தொழிலாளர்களுக்கு வீடுகளை வழங்க அமைச்சு மறுப்புத் தெரிவித்திருந்தது. இது தொடர்பில் அமைச்சிடம் தொழிலாளர்கள் வினவியபோது “எயாபார்க் போராட்டத்தில் பங்கேற்றதாலேயே வீடுகள் வழங்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
வீடுகள் வழங்கப்படவில்லை" - தொழிலாளர்கள் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சினால் வீடுகள் வழங்க மறுக்கப்பட்ட மஸ்கெலிய பிரவுன்ஸ்விக் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகள் கிடைத்தமையானது தொழிலாளர்களுக்கு சட்ட ரீதியாக கிடைத்த வெற்றியென பயனாளர்கள் தெரிவிக்கின்றனர். மஸ்கெலிய பிரவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த லயன் வீடுகளின் 16 காம்பிராக்கள், 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி மின்சார கோளாறினால் தீக்கிரையாக்கப்பட்டது. 16 லயன் வீடுகளில் வாழ்ந்த, 21 குடும்பங்கள் அப்பகுதி பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சு இத்தொழிலாளர்களுக்கு 23 வீடுகளை அமைத்ததோடு, 2017 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி அமைச்சினால் வீடுகள் தொழிலாளர்களுக்கு கையளிக்கப்பட்டன. செங்கடி சங்கத்தின் தோட்டத் தலைவர் உள்ளிட்ட இரு தொழிலாளர்களுக்கு வீடுகளை வழங்க அமைச்சு மறுப்புத் தெரிவித்திருந்தது. இது தொடர்பில் அமைச்சிடம் தொழிலாளர்கள் வினவியபோது “எயாபார்க் போராட்டத்தில் பங்கேற்றதாலேயே வீடுகள் வழங்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
04.04.1922- தென்னிந்தியாவில் இருந்து மலையகத்துக்கு கூலியாக அழைத்து வரும்போது கொடுத்த வாக்குறுகள்
Wednesday, 13 September 2017
ஏழு எதிரிகளின் குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு அப்பால் நிரூபணம்
தினகரன்: புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் 1ஆம் எதிரி மற்றும் 7 ஆம் எதிரிகள் சார்பாக சாட்சியங்கள் எதுவுமில்லை. 2, 3, 4,5,6,8,9 ஆம் எதிரிகளின் குற்றச்சாட்டுக்கள், சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக, ரயல் அட் பார் நீதிபதிகள் முன்னிலையில் பிரதி சொலிசிட்டர் குமார் ரட்ணம் தெரிவித்தார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கூட்டுவன்புணர்வு படுகொலை வழக்கின் விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய ரயல் அட் பார் முன்னிலையில் கடந்த 3 மாதங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.விசாரணையின் இறுதியாக சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக ரயல் அட்பார் நேற்று (12) கூடியது.
முதலில் வழக்குத் தொடுநர் சார்பாக பிரதி சொலிசிட்டர் குமார் ரட்ணம் தனது சமர்பணத்தினை ஆரம்பித்தார்.
மலையக பெருந்தோட்டங்களின் 30 வருட அநீதி இல்லாதொழிக்கப்பட்டது!
பெருந்தோட்ட பிரதேசங்களின் அபிவிருத்திகளுக்கு, பிரதேச சபைகள்
நிதியுதவி வழங்க முடியாதென்ற 1987ஆம் ஆண்டின் பிரதேச சபை சட்டத்தில், திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதியுதவி வழங்க முடியாதென்ற 1987ஆம் ஆண்டின் பிரதேச சபை சட்டத்தில், திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் வலியுறுத்தலின்படி உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதற்கான ஆலோசனையை நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.
இதன் மூலம் 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 33ஆம் பிரிவு திருத்தப்படுவதுடன், வர்த்தமானியில் இது அறிவிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியதாவது,
நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கொழும்பு, காலி, மாத்தறை, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெருந்தோட்ட புறங்களில் வாழும் மலையக தமிழ் மக்கள் பிரதேச சபை தேர்தல்களில் வாக்களித்து உறுப்பினர்களை தெரிவு செய்யலாம். எனினும் பெருந்தோட்டங்களின் அபிவிருத்திகளுக்கு பிரதேச சபைகள் நிதியொதுக்க முடியாதவாறு 1987 ஆம் ஆண்டின் சட்டம் தடுத்தி ருந்தது.
Mano Ganesan: நான் கையில் தூக்கி வைத்திருக்கும் மட்டக்களப்பு குழந்தைக்கும் என்னை பிடிக்குதே!
Mano Ganesan :கிழக்கு
மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் இன
உறவுகள் சீரற்றுள்ளன. குறிப்பாக தமிழ் மக்கள் தம்மை அரசியல் அனாதைகளாக உணர்கின்றனர். இது நல்லதல்ல. இதை பாராளுமன்ற, மாகாணசபை பொறுப்புகளிலுள்ள அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டும்” என சமீபத்தில் மட்டக்களப்புக்கு வந்தபோது நான் சொன்னேன்.
இப்போது, கிருஷ்ணபிள்ளை என்ற ஒரு கிழக்கு மாகாணசபை உறுப்பினர், “மனோ கணேசன், தமிழ் எழுத்து பிழைகளை கவனித்துக்கொண்டு கொழும்பிலேயே இருக்க வேண்டும். மட்டக்களப்பு பக்கம் வரக்கூடாது” என்ற அர்த்தத்தில் சொன்னதை ஒரு ஊடகத்தில் கேட்டேன்.
உறவுகள் சீரற்றுள்ளன. குறிப்பாக தமிழ் மக்கள் தம்மை அரசியல் அனாதைகளாக உணர்கின்றனர். இது நல்லதல்ல. இதை பாராளுமன்ற, மாகாணசபை பொறுப்புகளிலுள்ள அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டும்” என சமீபத்தில் மட்டக்களப்புக்கு வந்தபோது நான் சொன்னேன்.
இப்போது, கிருஷ்ணபிள்ளை என்ற ஒரு கிழக்கு மாகாணசபை உறுப்பினர், “மனோ கணேசன், தமிழ் எழுத்து பிழைகளை கவனித்துக்கொண்டு கொழும்பிலேயே இருக்க வேண்டும். மட்டக்களப்பு பக்கம் வரக்கூடாது” என்ற அர்த்தத்தில் சொன்னதை ஒரு ஊடகத்தில் கேட்டேன்.
இந்த “சிரிப்பு பிள்ளை” கொஞ்ச நாள் எம்பியாகவும் இருந்தபோது, அவரை நான்
தனிப்பட்ட முறையில் அறிவேன். ஆகவேதான் இக்குறிப்பை எழுதுகிறேன். (1) நான்
ஒரு கபினட் அமைச்சர். நாடு முழுக்க பொறுப்பும், அதிகாரமும் எனக்குண்டு. (2)
இவர் ஒருமுறை தன் சொந்த ஊரோ எதுவோ, காணிக்கு போக முடியாமல், (2007ம்
ஆண்டு) கோட்டாபயவின் ராணுவத்துக்கு அஞ்சி தவித்திருந்த போது, நான்தான்
கொழும்பில் இருந்து அங்கு போய் அவரை அழைத்து சென்றேன்.
Tuesday, 12 September 2017
ஒலிரூட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
-Tamil Mirror : எஸ்.கணேசன், ஆ.ரமேஷ், எஸ்.சுஜிதா<
தலவாக்கலை ஒலிரூட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக 150 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று(12) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட நிர்வாகம் 18 கிலோவுக்கு அதிகமான தேயிலை கொழுந்தினை பறிக்குமாறும் வழியுறுத்துவதனால் ஏற்பட்ட முறுகள் நிலை காரணமாக இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேயிலை மலைகள் காடுகளாக காணப்படுகின்றமையால் கொழுந்து பறிப்பதில் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தேயிலைக்காணிகள் பல நல்ல தேயிலை விளைச்சலை தரக்கூடியவையாக உள்ளப்போதிலும், தோட்ட நிர்வாகம் இந்த தேயிலை மலைகளை சுத்தம் செய்து கொடுபதில் அக்கரை காட்டுவதில்லை என தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Monday, 11 September 2017
இங்கிருந்து ..மலையக மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு வெளிவருகிறது
Malayaga Kuruvi
மலையக மக்களின் யதார்த்தங்களை நேர்மையுடன் எடுத்துக்காட்டும் திரைப்படம் என்ற கருவுடன் சுமதியின் ''இங்கிருந்து''
மலையக மக்களின் வாழ்வியலை மையப்படுத்தும் கதையாக இருக்கின்றது.
மலையக மக்களின் வாழ்வியலை நேர்மையாக காட்டுகிறதா என்பதை நீங்களும் பார்க்கலாம்!
டிசம்பர் 20ஆம் திகதி முதல் ஹட்டன் - விஜித, கொழும்பு - சினிசிற்றி திரையரங்குகளில்...
- Shaan Sathees
இலங்கை மலையகத்தமிழ் இலக்கியமும் கலைபண்பாட்டு வடிவங்களும் " - பன்னாட்டு் கருத்தரங்க நிகழ்வு
Thavamudhalvan Davan :
காந்திகிராம பல்கலைக்கழகம்
ஆஸ்திரேலியா தமிழ்
சங்கம் மலையக எழுத்தாளர் மன்றம் ஆகியவை இணைந்து மிகவும் பொருத்தமான வேளையில் நடத்திய "இலங்கை மலையகத்தமிழ் இலக்கியமும் கலைபண்பாட்டு வடிவங்களும் " - பன்னாட்டு் கருத்தரங்க நிகழ்வு மிகவும் மகிழ்வான நிகழ்வுகளிலொன்று! ஆயிரத்து எண்ணூற்று பதினைந்து ஆண்டுகளில் தொடங்கிய மலையகத்தமிழர் புலம்பெயர்வின் இருநூறு ஆண்டுகளைக் கடக்கும் நடப்பாண்டுகளில் இந்த நிகழ்வு வளமானதாகவும், உழைக்கும் மக்களுக்கு நெருக்கமானதாகவும், பாசாங்குகளற்ற மக்கள் இலக்கியமாக திகழும் மலையக இலக்கியத்தின் செழுமைகளைப் பேசவும் , இனியும் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்தும் பரிசீலிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த நிகழ்வை ஒழுங்கு செய்த அனைவருக்கும் நாம் நன்றிசொல்ல கடமை பட்டுள்ளோம் முடிந்தவரை நிகழ்வுகளை எல்லோருக்கும் பயனுள்ளதாக்க படங்களாக, ஒளிப்படங்களாக, ஒலிக்குரலாக பதிவு செய்திருக்கிறேன்.ஒவ்வொன்றாக பதிவிடுகிறேன். மகிழ்ச்சி அன்பின் உறவுகளே!
சங்கம் மலையக எழுத்தாளர் மன்றம் ஆகியவை இணைந்து மிகவும் பொருத்தமான வேளையில் நடத்திய "இலங்கை மலையகத்தமிழ் இலக்கியமும் கலைபண்பாட்டு வடிவங்களும் " - பன்னாட்டு் கருத்தரங்க நிகழ்வு மிகவும் மகிழ்வான நிகழ்வுகளிலொன்று! ஆயிரத்து எண்ணூற்று பதினைந்து ஆண்டுகளில் தொடங்கிய மலையகத்தமிழர் புலம்பெயர்வின் இருநூறு ஆண்டுகளைக் கடக்கும் நடப்பாண்டுகளில் இந்த நிகழ்வு வளமானதாகவும், உழைக்கும் மக்களுக்கு நெருக்கமானதாகவும், பாசாங்குகளற்ற மக்கள் இலக்கியமாக திகழும் மலையக இலக்கியத்தின் செழுமைகளைப் பேசவும் , இனியும் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்தும் பரிசீலிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த நிகழ்வை ஒழுங்கு செய்த அனைவருக்கும் நாம் நன்றிசொல்ல கடமை பட்டுள்ளோம் முடிந்தவரை நிகழ்வுகளை எல்லோருக்கும் பயனுள்ளதாக்க படங்களாக, ஒளிப்படங்களாக, ஒலிக்குரலாக பதிவு செய்திருக்கிறேன்.ஒவ்வொன்றாக பதிவிடுகிறேன். மகிழ்ச்சி அன்பின் உறவுகளே!
மனோ கணேசன்: தமிழ் முற்போக்கு கூட்டணியின் இன்னொரு வெற்றி>
தமிழ் முற்போக்கு கூட்டணியின் இன்னொரு வெற்றி>
பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள், பிரதேச சபைகளுக்கு வாக்களிக்க முடியும்; ஆனால், பிரதேச சபைகளால், தோட்ட பிரதேசங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணியாற்ற முடியாது என்ற 30 வருட பழமை சட்டம், திருத்தப்படுகிறது.
நமது வலியுறுத்தலின்படி மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சர் நண்பர் பைசர் முஸ்தபா இதற்கான பத்திரத்தை நாளை (12/09/17) அமைச்சரவையில் சமர்பிக்கின்றார். 1987ம் வருடத்தின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 33ம் பிரிவு இதன் மூலம் திருத்தப்படுகிறது. இதையடுத்து இது வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி. முத்துலிங்கம் குழுவினரால் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு, இன்று கூட்டணியினால் அரசியல்ரீதியாக ஆளுமையுடன் முன்னேடுக்கப்பட்டுள்ள இவ்விவகாரம் எமது காத்திரமான முன்னெடுப்புகளில் ஒன்றாகும்.
Saturday, 9 September 2017
வாகரை ... ஆதிவாசிகள் என்பதில் நாம் பெருமை கொள்கிறோம் ,,, ஆதிவாசிகள் தலைவர் வேலாயுதம்!
வாகரையிலிருந்து குஞ்ஞான் குளத்துக்கு செல்லும் பயணம் மிகவும் ஆபத்து நிறைந்தது. பாதையின் இருபுறமும் அடர்ந்த காடு இருட்டில் காட்டின் தன்மை என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை. மழைக்காலத்தில் இப் பாதையில் பயணம் செய்வது எவ்வளவு சிரமம் என்பதை எமது வாகனத்தின் ஒளியில் முன்னே உள்ள குழிகளின் நீள அகலத்தை காண முடியாததிலிருந்து புரிந்து கொண்டோம். பல மாதங்களாக மழை காணாத பூமி வரண்டு கிடந்தது. அந்த இரவிலும் மேலெழும்பிய புழுதி எம்மை மூச்சு முட்டச் செய்தது. எப்போது எமது பாதையில் யானைகள் குறுக்கீடு செய்யும் என்ற பயத்துடனேயே பயணம் செய்தோம். ஆனால்,அந்த இரவிலும் அங்கு பயணம் செய்யும் இராணுவ வீரர்கள் எம்மை தைரியப்படுத்தினார்கள்.
யானைகளைக் கண்டால் நாம் உடனடியாக வாகனங்களை நிறுத்தி விட்டு அவை அவ்விடத்தி லிருந்து அகலும் வரை நாம் அமைதியாக காத்திருப்போம். அவற்றிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை யென தெரிந்தவுடன் அவை அவ்விடத்தை விட்டு அகன்று விடும். இவ்வாறு யானைகளைப் பற்றி மட்டுமல்ல பலவித மிருகங்களைப் பற்றிய விபரங்களை செவிமடுத்துக் கொண்டே எமது பயணத்தை தொடர்ந்தோம்.
நாங்கள் வாகரையிலிருந்து இருபது கிலோ மீற்றர் பயணித்திருந்தோம். இறுதியில் நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைந்தோம். தலைவரின் வீடு இங்குதான் இருக்கின்றது. எனக் கூறிக் கொண்டு ஒரு பெரிய மரத்தின் கீழ் வாகனத்தை நிறுத்தினார். இருட்டில் எதுவும் தெரியவில்லை. தீடிரென காட்டைக் கிழித்துக் கொண்டு பெரிய சத்தமொன்று கேட்டது. அதனோடு மேள சத்தமும் கேட்கக் தொடங்கியது.
நாங்கள் வாகரையிலிருந்து இருபது கிலோ மீற்றர் பயணித்திருந்தோம். இறுதியில் நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைந்தோம். தலைவரின் வீடு இங்குதான் இருக்கின்றது. எனக் கூறிக் கொண்டு ஒரு பெரிய மரத்தின் கீழ் வாகனத்தை நிறுத்தினார். இருட்டில் எதுவும் தெரியவில்லை. தீடிரென காட்டைக் கிழித்துக் கொண்டு பெரிய சத்தமொன்று கேட்டது. அதனோடு மேள சத்தமும் கேட்கக் தொடங்கியது.
'இன்று இங்கு சங்கதி பூஜை' என்று கூறியவாறு எம்மை ஆதி வாசிகளின் தலைவர் வேலாயுதம் வரவேற்றார்.
மத்திய அதிவேக பாதை பணிகள் சட்ட திட்டங்களுடன் முன்னெடுப்பு
25 பில்லியன் ரூபா செலவை குறைத்ததையிட்டு இந்த ஊடக வலையமைப்புக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு 25 ஆயிரம் பில்லியன் ரூபா என்ற தொகையை சேமித்துக் கொடுத்தமைக்காக இந்த நிறுவனம் எமக்கு அவமதிப்புக்களை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்லாது இதன் நிமித்தம் அவர்கள் பொய்யான பல்வேறு தகவல்களையும் கூறுகின்றனர். இந்த நிர்மாண ஒப்பந்தம் வழங்கப்பட்ட டயிசேயி நிறுவனம் ஆரம்பத்தில் 159 பில்லியன் ரூபாவிலான விலை கோரலையே முன்வைத்திருந்தது.
"உடைத்து எறிய சொன்னேன்" அதிரடி பணியில் அமைச்சர் மனோ கணேசன்!
கொழும்பு - அளுத்மாவத வீதி 854ஆம் தோட்டத்திலுள்ள மக்கள் பிரச்சினைக்குத் தீர்வுகாண அமைச்சர் மனோ கணேசன் அதிரடியாக களமிறங்கி எடுத்த நடவடிக்கையினால் அந்தப் பிரதேச மக்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர். இதுகுறித்து அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ''கொழும்பு - அளுத்மாவத வீதி 854ஆம் தோட்டத்தை அடுத்த காணியில் தொழிற்சாலை அமைத்துள்ள தொழில் அதிபர், சட்ட விரோதமாக கழிவு நீர் கால்வாயை அடைத்து விட, அப்பாவி குழந்தைகள் உட்பட ஏழை பாமர மக்கள் பல நாட்களாக அழுக்கு நீரில் மூழ்கியுள்ள வீடுகளில் பரிதவிப்பதை அறிந்து ஸ்தலத்துக்கு விரைந்தேன். பணக்கார செல்வாக்கு விளையாடியுள்ள விபரங்களை அறிந்தேன். மாநகர முதன்மை பொறியியலாளர், பிரதேச பொறியியலாளர், முகத்துவார பொலிஸ் பொறுப்பதிகாரி, வலய கிராமசேவகர் ஆகியோரை ஸ்தலத்துக்கு அழைத்தேன். சட்டவிரோத கட்டுமானத்தை உடைத்தெறிய பணிப்புரை வழங்கினேன். ஏழை பிள்ளைகள் வாழ்த்தினார்கள். இன்னும் பகலுணவு சாப்பிடவில்லை. ஆனாலும் மனது நிறைந்தது.'' முதல்ல சாப்பிடுங்க அமைச்சரே! அப்போ தான் அடுத்த வேட்டைக்கு தெம்பா தயாராகலாம்.
தமிழகத்தில் பூவரசி விருது பெற்ற மலையக ஊடகவியலாளர் ஜீவா சதாசிவம்!
தமிழக பூவரசி விருதைப் பெற்றுக்கொண்ட மலையக ஊடகவியலாளர் ஜீவா சதாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
தமிழகத்தில் ஆண்டு தோறும் பூவசரி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு வரும் சிறந்த ஆளுமைகளுக்கான விருதுகளில் இம்முறை இலங்கை ஊடகத்துறையில் 2016/2017 ஆம் ஆண்டுக்கான பெண் ஆளுமை விருது ஜீவா சதாசிவத்திற்கு வழங்கப்பட்டது.
கடந்த 6ஆம் திகதி சென்னையில் நடந்த
நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது. மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜீவா சதாசிவம் 2007ஆம் ஆண்டு முதல் தேசிய பத்திரிகையான தினக்குரல் பத்திரிகையின் உதவி பயிற்சி ஆசிரியராக அறிமுகமானவர். தற்போது வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றிவரும் இவர், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளராகவும் இருந்து வருகிறார். வீரகேசரி பத்திரிகையில் நீண்டகாலமாக பணியாற்றிவரும் ஜீவா சதாசிவம்
நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது. மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜீவா சதாசிவம் 2007ஆம் ஆண்டு முதல் தேசிய பத்திரிகையான தினக்குரல் பத்திரிகையின் உதவி பயிற்சி ஆசிரியராக அறிமுகமானவர். தற்போது வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றிவரும் இவர், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளராகவும் இருந்து வருகிறார். வீரகேசரி பத்திரிகையில் நீண்டகாலமாக பணியாற்றிவரும் ஜீவா சதாசிவம்
இயக்குனர் ரஞ்சித் பேச்சு .... பல அபத்தங்களை கொண்டிருக்கிறது .. சாதி சங்கங்களிடம் கேட்க வேண்டியதை ....
Vallialagappan Alagappan : இயக்குநர் பா.ரஞ்சித்தின் உணர்வுகளோடு ஒன்றுபடுகிறேன். ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்தவர் என்கிற அடிப்படையில் அவர் ஒடுக்கப்படுவதாக உணரும் அதே தன்மையை என்னால் முழுமையாக உணரமுடியாவிட்டாலும், பல்வேறு களங்களில் வெவ்வேறு விதமான ஒடுக்குமுறைகளை சந்தித்திருப்பவன்/சந்தித்துக் கொண்டிருப்பவன் என்கிற முறையில் ரஞ்சித்தின் குமுறல்களை புரிந்துக்கொள்ள இயலுகிறது.
அதே நேரம், அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசிய இந்த பதினைந்து நிமிடப் பேச்சு எவ்வளவு அபத்தமான வெளிப்பாடு கொண்டிருக்கிறது என்பதையும் அவர் புரிந்துக்கொள்ள வேண்டும். அவரது இந்தப் பேச்சை கேட்டுவிட்டுதான் அவருக்கான ஏகோபித்த ஆதரவுக்குரல் இணையத்தில் எழுந்திருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. யாரோ கோர்வையாக பத்து நிமிடம் ‘சித்தாந்தம்’ மாதிரி பேசிவிட்டால் சிந்திக்காமலேயே கைத்தட்டும் போக்குதான் இது. முன்பு ஈழப்பிரச்சினையில் சீமான், தமிழருவி போன்ற அரைவேக்காடுகளை ஊடகங்கள் தேவதூதர்களாக சித்தரித்ததும் இதேமாதிரி சூழலில்தான்.
1. தமிழகத்தில் சாதி இருக்கிறது என்பது ரஞ்சித்தின் கண்டுப்பிடிப்பு அல்ல. அது அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனால்- அந்த சாதிமுறையை எதிர்ப்பவர்களும் இந்தியாவிலேயே கணிசமாக தமிழகத்தில்தான் இருக்கிறார்கள்.
Friday, 8 September 2017
இரத்தினபுரி மாவட்டத்தில் 1,911 குடும்பங்களை சேர்ந்த 7,590 பேர் பாதிப்பு
சிவாணி ஸ்ரீ:
இரத்தினபுரி மாவட்டத்தில், கடந்த புதன்கிழமை(6) முதல்
தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால், வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக, இதுவரை 1911 குடும்பங்களை சேர்ந்த 7,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.< மேற்படி மாவட்டத்தில் இரத்தினபுரி, கிரியெல்ல, எஹலியகொடை, அயகம, எலபாத்த, குருவிட்ட, நிவித்திகல ஆகிய ஏழு பிரதேச செயலகப்பிரிவுகளிளேயே இவ்வாறு வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக 1911 குடும்பங்களை சோந்த 7,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 196 குடும்பங்களை சேர்ந்த 721 பேர் 18 பொது இடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 304 குடும்பங்களை சேர்ந்த 1420 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று பொது இடங்களில் 22 குடும்பங்களை சேர்ந்த 88 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால், வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக, இதுவரை 1911 குடும்பங்களை சேர்ந்த 7,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.< மேற்படி மாவட்டத்தில் இரத்தினபுரி, கிரியெல்ல, எஹலியகொடை, அயகம, எலபாத்த, குருவிட்ட, நிவித்திகல ஆகிய ஏழு பிரதேச செயலகப்பிரிவுகளிளேயே இவ்வாறு வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக 1911 குடும்பங்களை சோந்த 7,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 196 குடும்பங்களை சேர்ந்த 721 பேர் 18 பொது இடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 304 குடும்பங்களை சேர்ந்த 1420 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று பொது இடங்களில் 22 குடும்பங்களை சேர்ந்த 88 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கிரியெல்ல பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 596 குடும்பங்களை சேர்ந்த 2,425 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று பொது இடங்களில் 11 குடும்பங்களை சேர்ந்த 48 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
எஹலியகொடை பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 531 குடும்பங்களை சேர்ந்த 2119 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன,; ஆறு பொது இடங்களில் 90 குடும்பங்களை சேர்ந்த 343 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
Thursday, 7 September 2017
படப்பிடிப்புக்கென பொய் கூறி ஆடுகள் திருட்டு .. வவனியாவில் கைவரிசை
virakesari.lk
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் சூட்சுமமான முறையில் ஆட்டுப்பண்ணை உரிமயாளரை ஏமாற்றி 15 ஆடுகள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியா பொலிஸில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
ஹயஸ் ரக வாகனமொன்றில் வந்த நபரொருவர் படப்பிடிப்பு நடாத்துவதற்கு ஆடுகளை தருமாறு கேட்க ஆட்டுப்பண்ணை உரிமையாளரும் சம்மதித்துள்ளார்.
உரிமையாளரிடம் இருபதினாயிரம் ரூபாவை கொடுத்துவிட்டு படப்பிடிப்பு நடக்கும் ஸ்தலத்திற்கு ஆடுகளை கொண்டு செல்ல வேண்டும் எனக் கூறி உரிமையாளரையும் தன்னோடு அழைத்துக்கொண்டு வவுனியா நோக்கி சென்றுள்ளார்.
செல்லும் வழியில் பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு அருகிலுள்ள இராணுவ உணவுச் சாலைக்கு முன்னால் வாகனத்தை நிறுத்திய குறித்த நபர் உரிமையாளரிடம் 200 ரூபாவை கொடுத்து தனக்கு குளிர்பானம் வாங்கி வருமாறு கூறி வாகனத்தை விட்டு இறக்கியுள்ளார்.
மண்சரிவு, வெள்ளம் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, மண்சரிவு மற்றும் வெள்ள நிலைமைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம் கோரியுள்ளது.
குறிப்பாக, தேசிய கட்டட ஆய்வு மையம் மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ள பகுதிகளிலுள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட, அயகம, கிரிஉல்ல மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், காலி மாவட்டத்தின் நாகொடை பிரதேச செயலாளர் பிரிவிலும் களுத்துறை மாவட்டத்தின் பாலின்தனுவர, வலல்லாவிட மற்றும் அகலவத்தை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. dhinakural
Wednesday, 6 September 2017
காலியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின
ந.ஜெயகாந்தன்
தெற்கில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையால்
காலி மாவட்டத்தில் தாழ் நில பிரதேசங்கள் பலவும் வெள்ளத்தில மூழ்கியுள்ளன. நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு முதல் தென்மாகாணத்தில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவிவருகிறது. இதன்படி நேற்று அதிகாலை வரை அந்த மாகாணத்தின் பல இடங்களிலும் 100 முதல் 200 மில்லி மீற்றர் வரையான மழை பெய்துள்ளதாக வானிலை அவதான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, காலி மாவட்டத்தில் நாகொட மற்றும் யட்டலமத்த ஆகிய பிரதேசங்களில் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் காலி மாவட்டத்தில் தாழ்நில பிரதேசங்களும் வீதிகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன. இவ்வாறாக காலி நகரம் , கராபிட்டிய , மாபலாகம, பத்தேகம, நெலுவ , தங்கெதர உள்ளிட்ட பிரதேசங்களில் தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை இந்தப் பிரசேங்களில் வீடுகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளதுடன், இந்த வீடுகளில் வசித்தோரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த பிரதேசங்களில் பிரதான வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் இந்த வீதிகளினூடான வாகனப் போக்குவரத்துகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இந்தப் பிரதேசங்களில் ஆறுகளும் ஓடைகளும் பெருக்கெடுத்தமையினாலேயே அங்கு வெள்ள நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
காலி மாவட்டத்தில் தாழ் நில பிரதேசங்கள் பலவும் வெள்ளத்தில மூழ்கியுள்ளன. நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு முதல் தென்மாகாணத்தில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவிவருகிறது. இதன்படி நேற்று அதிகாலை வரை அந்த மாகாணத்தின் பல இடங்களிலும் 100 முதல் 200 மில்லி மீற்றர் வரையான மழை பெய்துள்ளதாக வானிலை அவதான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, காலி மாவட்டத்தில் நாகொட மற்றும் யட்டலமத்த ஆகிய பிரதேசங்களில் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் காலி மாவட்டத்தில் தாழ்நில பிரதேசங்களும் வீதிகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன. இவ்வாறாக காலி நகரம் , கராபிட்டிய , மாபலாகம, பத்தேகம, நெலுவ , தங்கெதர உள்ளிட்ட பிரதேசங்களில் தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை இந்தப் பிரசேங்களில் வீடுகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளதுடன், இந்த வீடுகளில் வசித்தோரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த பிரதேசங்களில் பிரதான வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் இந்த வீதிகளினூடான வாகனப் போக்குவரத்துகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இந்தப் பிரதேசங்களில் ஆறுகளும் ஓடைகளும் பெருக்கெடுத்தமையினாலேயே அங்கு வெள்ள நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
Tuesday, 5 September 2017
எந்திரன் 2.0 கருப்பு பண நடிகனும் கருப்பு பண இயக்குனரும் கருப்பு பணத்தில் கருப்பு பணத்துக்கு எதிராக படம் எடுக்கிராக
vinavu.com :ஷங்கரின் இயக்கத்தில் வெளியான எந்திரனின் இரண்டாவது பாகம் 2017 தீபாவளி
அன்று வெளியாக இருக்கிறது. இது 2.0 என்ற பெயரில் அழைக்கப்படும்
அத்திரைப்படத்தின் முதல் பார்வை விழா. எந்திரனுக்கு சன் குழுமத்தின்
கலாநிதி மாறன் சுமார் 130 கோடி ரூபாய் செலவழித்தார். இரண்டாவது பாகத்திற்கு
இலண்டன் வாழ் லைக்கா மொபைலின் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா சுமார் 350
கோடி ரூபாயை செலவழிக்கிறார்.
எந்திரனில் எழுந்த ரோபாவான சிட்டி, இரண்டாவது பாகத்தில் இன்னும் அதிக வீரியத்துடன் செதுக்கப்பட்டு ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மானுடன் இந்தி நடிகர் அக்ஷய் குமாருடன் 3 டி படமாக வெளிவருகிறது. முதல் பாகத்தின் இரு பரிமாணத்தை விட இரண்டாம் பாகத்தின் முப்பரிமாணம் தரத்திலும், செலவிலும், நுட்பத்திலும் பிரம்மாண்டமாகத்தான் இருந்தாக வேண்டும். அதிகம் குவிந்திருப்பதால் மட்டுமே பணம் தனது பளபளப்பை பராமரிக்க இயலாது. மேலும் மேலும் தன்னைப் பெருக்கிக் கொள்வதே நிதிக்கலையால் மிளிரும் பணத்தின் ஆகச்சிறந்த அழகு.
முதல் பாகத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் சிரமம் இருந்தது என்றால் இரண்டாம் பாகத்தில் தோளில் எவரெஸ்ட் சிகரத்தை சுமந்து கொண்டு உச்சியில் ஏறும் மீப்பெரும் சிரமமும் பொறுப்பும் இருப்பதாக இயக்குநர் ஷங்கர் விழாவில் தெரிவித்தார். வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் பாமரருக்கு விருப்பப்பட்டு பாரம் சுமக்கும் திரைக்கலைஞனின் வலி தெரியாதாம்.
எந்திரனில் எழுந்த ரோபாவான சிட்டி, இரண்டாவது பாகத்தில் இன்னும் அதிக வீரியத்துடன் செதுக்கப்பட்டு ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மானுடன் இந்தி நடிகர் அக்ஷய் குமாருடன் 3 டி படமாக வெளிவருகிறது. முதல் பாகத்தின் இரு பரிமாணத்தை விட இரண்டாம் பாகத்தின் முப்பரிமாணம் தரத்திலும், செலவிலும், நுட்பத்திலும் பிரம்மாண்டமாகத்தான் இருந்தாக வேண்டும். அதிகம் குவிந்திருப்பதால் மட்டுமே பணம் தனது பளபளப்பை பராமரிக்க இயலாது. மேலும் மேலும் தன்னைப் பெருக்கிக் கொள்வதே நிதிக்கலையால் மிளிரும் பணத்தின் ஆகச்சிறந்த அழகு.
முதல் பாகத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் சிரமம் இருந்தது என்றால் இரண்டாம் பாகத்தில் தோளில் எவரெஸ்ட் சிகரத்தை சுமந்து கொண்டு உச்சியில் ஏறும் மீப்பெரும் சிரமமும் பொறுப்பும் இருப்பதாக இயக்குநர் ஷங்கர் விழாவில் தெரிவித்தார். வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் பாமரருக்கு விருப்பப்பட்டு பாரம் சுமக்கும் திரைக்கலைஞனின் வலி தெரியாதாம்.
கடவுளும் மருந்தும் விலை உயர்ந்த பிராண்டுகள்....? இந்த இரண்டையும் விட நீங்கள் உயர்ந்தவர் ! நிமிர்ந்து நில்லுங்கள் !
இந்த பய உணர்வு மனிதர்களின் இயல்பான ஆனந்தத்தை விழுங்கியே விட்டது.
இந்த வாழ்வு ரசித்து ரசித்து அனுபவிக்க வேண்டிய ஒன்றல்லவா?
அடிமனதில் தோன்றிய பயத்தின் காரணமாக மனதளவில் ஒழித்து வாழ்ந்து பழகி விட்டார்கள்.;
எதுவித காணரங்களும் இன்றியே பயந்து பயந்து ஒழிக்க இடம் தேடுகின்றனர்.
பயத்தின் காரணமாக சுயமாக சிந்திக்கும் பழக்கத்தை மனிதர்கள் பெரிதும் இழந்து விட்டார்கள். பயம் சிந்திக்கும் ஆற்றலை கிள்ளி எறிந்துவிட்டது
இந்த உலகை நேருக்கு நேர் பார்க்க பயந்து போய் ஒழித்து வாழ கண்டுபிடித்த முதல் பங்கர் குகைதான் சமயங்கள் அல்லது கடவுள்கள் என்பது.
அந்த குகைகள் தங்களது பாதுகாப்பு தொட்டில் என்று கருதுகின்றனர்.
அது தரும் தாலாட்டில் கண்ணை மூடிக்கொண்டு வாழ முயற்சிக்கின்றனர். இது சரியான வழி அல்லது பிழையான வழி என்று ஒருவித அபிப்பிராயத்தையும் நான் திணிக்க வரவில்லை. அது என் வேலை அல்ல.
மனதளவில் அந்த நிலக்கீழ் குகை வாழ்க்கையில் இருந்து பழகி விட்டார்கள்.
அதை விட்டு வெளியே வந்து பார்க்க பயந்த சமுதாயமாகி விட்டது.
கற்பனைக்கு எட்டாத அற்புதங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபஞ்சம் பற்றிய எந்தவித கருத்தும் இல்லாமல் பெருவாரியான மனிதர்கள் வெறும் அடியவர்கள் ஆகிவிட்டனர்,
ஒரு போதும் உண்மையை பார்க்க முடியாத அளவு எங்கோ ஒரு தூரத்தில் இருக்கிறார்கள் .
மனதில் எந்த விதமான சந்தேகம் தோன்றினாலும் கைவசம் பதில் வைத்திருக்கும் போலி மருந்துகள் சமய வியாபாரத்தில் தாராளமாக உண்டு.
அவற்றை மீண்டும் மீண்டும் உருப்போட்டு மனனம் செய்து ஒருவித போதையில் அல்லது அடிக்சனில் காலத்தை விரயம் செய்கின்றனர்.
சமயம் கடவுள் போன்ற போதைகளைத்தான் மருந்து வைத்தியம் ஆரோக்கியம் போன்றவையும் தருகிறது.
கடவுள் வியாபாரம் போன்றே வைத்திய வியாபாரமும் விபரீத வளர்ச்சி அடைந்து மனிதர்களை இருட்டு அறையில் அடைத்து விட்டது.
வைத்திய துறையும் ஏறக்குறைய சமயத்துறை போலவே மக்களை பயங்காட்டி பணம் பறிக்கும் காரியத்தையே செய்கிறது.
மனித உடலின் அற்புத சக்திகளை பற்றி ஆய்வதை விடுத்து சதா எதாவது ஒரு மருந்து மாத்திரைகளை வாங்குங்கள் காசை அள்ளி வீசுங்கள் என்பதே இன்றைய மருத்துவமாகி விட்டது.
ஏராளமான உடல் நோய்கள் மனிதர்களின் தவறான வாழ்க்கை முறையினால் உண்டாகுபவையே. மருத்துவ வியாபாரம் அதைபற்றி அவ்வளவாக அலட்டி கொள்வதில்லை.
வந்து விட்ட நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் காட்டப்படும் அக்கறை நோய்வராமல் வாழும் வாழ்க்கை முறைக்கு அளிக்க்கப்படுவதில்லை. அதில் பணம் வராதே?
இந்த இரண்டு வியாபாரிகளிடமும் நாம் வாடிக்கையாளர்களாக இல்லாவிடில் எமக்கு வாழ்வே இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டது மனித சமுதாயம்.
இந்த நிலை பல நூற்றண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. இப்போது திடீரென்று ஞானோதயம் பெற்று வெளியே எப்படி வரமுடியும் என்று நீங்கள் எண்ணக்கூடும்.
முதலில் உங்கள் சிந்தனைகள் பங்கர் குகைகளில் இருந்து வெளியே வரவேண்டும்.
பிரபஞ்சத்தையும் இந்த உயிர்த்துடிப்புள்ள வாழ்க்கையையும் உங்கள் சொந்த கண்களால் பார்க்கவேண்டும்.
கடவுளின் கண்கொண்டும் நிபுணர்களின் கண்கொண்டும் இந்த உலகை பார்த்தது போதும்.சொந்த கண்களால் பாருங்கள்.
உங்களை விட சிறந்த கடவுளோ சிறந்த நிபுணரோ கிடையாது.
தமிழகமெங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம் ... ஓயாது ஓயாது ஒடித்து எறியும்வரை ஓயாது
பெரும் கனவுடன் மருத்துவப்
படிப்புக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ம்
தேதி தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு தடை
விதிக்க வேண்டும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் வேண்டும் என
தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு
நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள்
போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இன்று காலை திடீரென லயோலா கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து
கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். நடிகை ரோகிணி, திரைப்பட
இயக்குநர்கள் வெற்றிமாறன், கவுதமன் ஆகியோர் மாணவர்களின் போராட்டத்திற்கு
ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.
நந்தனம் ஆடவர் கலைக் கல்லுரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநில கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள், தியாகராயா கலைக்கல்லூரி மாணவர்கள், மீனம்பாக்கம் ஏஎம் ஜெயின் கலைக் கல்லூரி மாணவர்கள், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் என சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நந்தனம் ஆடவர் கலைக் கல்லுரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநில கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள், தியாகராயா கலைக்கல்லூரி மாணவர்கள், மீனம்பாக்கம் ஏஎம் ஜெயின் கலைக் கல்லூரி மாணவர்கள், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் என சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வை தமிழகம் மட்டும் இவ்வளவு கடுமையாக எதிர்ப்பது ஏன் தெரியுமா?….
எந்த மாநிலமும் எதிர்க்காத ’நீட்’ தேர்வினை தமிழ்நாடு மட்டும் தனியாக
எதிர்ப்பதும்-விலக்கு கோருவதும் ஏன்? என்பது முதல் கேள்வி. மற்ற
கல்விமுறைகளுடன் போட்டியிடும் வகையில் மாநிலக் கல்விமுறை தரமாக உள்ளதா?
நீட் தேர்வில் ஒரு முறை தோற்றாலும் மூன்று முறை எழுத முடியுமே? மருத்துவக்
கல்வியைத் தவிர வேறு படிப்பே இல்லையா? உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய
அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது சரிதானா? என்று அடுத்தடுத்த
கேள்விகளும் பாய்கின்றன. முதல் கேள்விக்கான விடையை விரிவாகத் தேடினால்
அடுத்தடுத்த கேள்விகளுக்கான விடைகள் அதற்குள்ளேயே கிடைக்கும்.
சமூக நீதியில்-கல்வி முறையில்-சமூக நலத்திட்டங்களில் தமிழகம் எப்போதுமே முன்னோடியாக விளங்கி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் சுதந்திரத்திற்குப் பிறகும்கூட இம்மூன்றும் சரியாகக் கிடைக்காத நிலை உள்ளது. தமிழகத்திலோ, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வாய்த்த, குறைந்த அதிகாரம் கொண்ட-இரட்டை ஆட்சி முறையில் 1920ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தை ஆளும் வாய்ப்பு பெற்ற நீதிக்கட்சி இந்த மூன்று துறையிலும் தனித்துவமான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
சமூக நீதியில்-கல்வி முறையில்-சமூக நலத்திட்டங்களில் தமிழகம் எப்போதுமே முன்னோடியாக விளங்கி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் சுதந்திரத்திற்குப் பிறகும்கூட இம்மூன்றும் சரியாகக் கிடைக்காத நிலை உள்ளது. தமிழகத்திலோ, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வாய்த்த, குறைந்த அதிகாரம் கொண்ட-இரட்டை ஆட்சி முறையில் 1920ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தை ஆளும் வாய்ப்பு பெற்ற நீதிக்கட்சி இந்த மூன்று துறையிலும் தனித்துவமான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
Monday, 4 September 2017
கடன்பட்டு திணறிக்கொண்டிருக்கும் தொழிலாளர்கள் காப்பற்றப்படுவார்களா? தோட்டங்களில் இடை தரகர்கள் ..
“கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” அஞ்சா நெஞ்சமும் மலையையே அசைக்கும் உடல் வலிமையும் கொண்ட இராவணனின் மனம் கடன்பட்டவர் போல காயப்பட்டதை அறிந்துள்ளோம். கடன் என்பது வலிமையான மனிதனையும் வலுவிழக்க செய்யும் ஒன்று என்பதனை இதன் மூலம் புரிகிறது. கடன் வாங்குவதும் கொடுப்பதும் எல்லா சமூகத்திற்கும் பொதுவான ஓர் விடயமாக இருந்தாலும், மலையகத்தில் இன்று அன்றாட பசியை போக்குவதற்கும், ஜீவனோ பாயத்திற்கும் கடனுக்கு மேல் கடன் வாங்கும் நிலை உருவாகியுள்ளதை தாராளமாக காணலாம்.
கடன் பெற்று வாழ்வை வளமாக்கும் ஒரு தரப்பினர் இருக்க, இவர்கள் கடன் பெற்று தமது வாழ்வை அன்றாடம் கேள்விக் குறியாக்கி வருகின்றனர். தோட்டத்தொழில்களில் எதிர்பார்த்த ஊதியம் கிடைக்காத நிலையில், பெறும் சிறு தொகை சம்பளத்தையும் வாசலிலேயே கடன் கொடுத்தோர் பிடுங்கி செல்லும் நிலை தொடர்கிறது. சுமார் 2 வருடங்களாக தமது அன்றாட சாதாரண தேவைகளை பூர்த்தி செய்யக்கூட மாதச்சம்பளம் கிடைக்காமல் போனமையும், இதனை ஈடுசெய்ய வேறு வருமான வழிகள் இன்று காணப்படாமையுமே கடன் எனும் கடலுக்குள் இவர்கள் மூழ்க முக்கிய காரணமாய் அமைந்தது எனலாம்.
வடஇந்திய மாநிலங்களில் பரீட்சைகள் நேர்மையாக நடப்பதில்லை ...?
பொதுவாக வடஇந்திய மாநிலங்களில் பள்ளி இறுதித்தேர்வுகள் நியாயமாகவும்
நேர்மையாகவும் நடப்பதில்லை.. காப்பியடிக்க உதவுவது ஒரு மாபியா போல..
பெற்றோர் ஆசிரியர் அரசியல்வாதிகள் அலுவலர்கள் அனைவரையும் உள்ளடக்கிய
வலைப்பின்னல்.. எனவே இவர்களின் மதிப்பெண்கள் நம்பகமானவை அல்ல.. கடந்த ஆண்டு
பீகாரில் மாநிலத்தின் முதல் மாணவர் காப்பியடித்து வெற்றி பெற்றது
கண்டறியப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.. எனவே இவர்களில்
திறன்வாய்ந்தவர்களை வடிகட்ட மத்திய அரசின் பொது நுழைவுத்தேர்வு ஒன்றை
கொண்டுவருவது பற்றி இந்திய
மருத்துவகவுன்சில் முடிவெடுக்கிறது.. காப்பியடிக்கும் மாபியாக்களை
கட்டுப்படுத்த இயலாமல் இப்படியாவது நடக்கட்டும் என பல மாநிலங்கள்
ஒப்புக்கொண்டன. காங்கிரஸ் அரசு அதில் தலையிட்டு விரும்பாத மாநிலங்கள்
தங்கள் வழக்கமான சேர்க்கை முறைகளை பின்பற்றிக்கொள்ளலாம் என்கிற வாய்ப்பை
உருவாக்கி சேர்த்தது.. அதனால்தான் காங்கிரஸ் ஆட்சி முடியும்வரை இதில்
பிரச்சனையேயில்லை.. இவர்கள் எல்லா மாநிலங்கள் மீதும் திணிப்பதே பிரச்சனை..
- Muruganantham Ramasamy
மூன்றில் இரண்டு பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காது – ரணில்!
20ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் உத்தேச தேர்தல் முறை திருத்தத்தில் எந்த கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று ஆட்சிக்கு வருவது தடுக்கப்படும்.
இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருணாகல் மகுருஓய பிரதேசத்தில் புதிய பாடசாலை ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்தாவது-
ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று தனக்கு தேவையான வகையில் செயற்படுவதை தடுப்பதே இதன் நோக்கம்.
தொகுதி மற்றும் விகிதாசாரம் ஆகிய இரண்டும் கொண்ட கலப்பு தேர்தல் முறையே நமக்கு தேவை. அப்படியான விகிதாசாரம் இருந்தால், எந்த கட்சியாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற முடியாது.<
இந்த புதிய தேர்தல் முறையை மாகாண சபைகளுக்கு கொண்டு வரும் தேவை உள்ளது.<
புதிய திருத்தச்சட்டம் மூலம் ஒரே தினத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்- என்றார். உதயன்
32 வருடங்களின் பின்னர் யாழில் மாட்டு சவாரி
-ரொமேஸ் மதுசங்க
பாம்பரிய கிராமிய விளையாட்டுகளில் ஒன்றான “மாட்டு சவாரி” போட்டி 32 வருடங்களின் பின்னர் யாழ். ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்றது.
ஊர்காவற்துறை - புதுவேலி மைதானத்தில் நேற்று (03) நடைபெற்ற இந்தப் போட்டியில், 32 மாடுகள் சவாரியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், அவை ஒவ்வொன்றும் சுமார் 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடையவை எனவும் அவற்றின் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் மிரர்
தமிழக பாடத்திட்டம் இந்திய பாடத்திட்டத்தை விட சிறந்தது .. வரலாறு கூறுகிறது
அசைவ உணவைவிட சைவ உணவுதான் புனிதமானது.
8கோடி மக்கள் பேசும் தமிழைவிட, சில ஆயிரம் பார்ப்பனர்கள் அறிந்துவைத்திருக்கும் சமஸ்கிருதம்தான் புனிதமானது.
இந்த மண்ணின் மைந்தர்களான திராவிடர்களின் கறுப்பு நிறத்தைவிட, வந்தேறி ஆரியர்களின் சிவப்பு நிறம்தான் உயர்வானது.
8கோடி மக்கள் பேசும் தமிழைவிட, சில ஆயிரம் பார்ப்பனர்கள் அறிந்துவைத்திருக்கும் சமஸ்கிருதம்தான் புனிதமானது.
இந்த மண்ணின் மைந்தர்களான திராவிடர்களின் கறுப்பு நிறத்தைவிட, வந்தேறி ஆரியர்களின் சிவப்பு நிறம்தான் உயர்வானது.
எளிய மக்கள் வழிப்படும் மதுரைவீரன், மாடன், சுடலை முத்துமாரி போன்றவர்கள்
சிறுதெய்வங்கள். பார்ப்பனர் கற்பித்த ராமன், கிருஷ்ணன் பிள்ளையார்
போன்றவைதான் பெருதெய்வங்கள்!
காட்டிலிருந்த ஒரு முனிவரின் மனைவியை கற்பழித்த இந்திரனை தேவர்களின் தலைவன் என்பான். கவர்ந்துச் சென்ற சீதையை கற்போடு விட்ட ராவனனை அரக்கர்களின் தலைவன் என்பான். (அவன் எழுதிய கதைப்படியே!)
எங்கள் உணர்வோடு கலந்துவிட்ட பறை-இசை இழிவானது. கர்நாடக இசைதான் புனிதமானது.
எங்கள் பெண்களை தேவதாசிகளாக ஆக்கிவிட்டு, அவர்கள் ஆடிய சதிராட்டம் இழிவானது என்பான். அதே ஆட்டத்தின் பார்ப்பன வடிவமான 'பரத நாட்டியம்' புனிதமானது என்பான்.
பார்ப்பனர்கள் குவித்துவைத்திருந்த நிலங்களை கையகப்படுத்தி அதை உழைக்கிற மக்களுக்கு பிரித்தளித்த 'களப்பரர்களின் காலம் இருண்டகாலம்'. ஊரான் சொத்துக்களை எடுத்து பார்ப்பனர்களுக்கு காணிக்கை செய்த 'குப்தர்களின் காலம் பொற்காலம்'.
காட்டிலிருந்த ஒரு முனிவரின் மனைவியை கற்பழித்த இந்திரனை தேவர்களின் தலைவன் என்பான். கவர்ந்துச் சென்ற சீதையை கற்போடு விட்ட ராவனனை அரக்கர்களின் தலைவன் என்பான். (அவன் எழுதிய கதைப்படியே!)
எங்கள் உணர்வோடு கலந்துவிட்ட பறை-இசை இழிவானது. கர்நாடக இசைதான் புனிதமானது.
எங்கள் பெண்களை தேவதாசிகளாக ஆக்கிவிட்டு, அவர்கள் ஆடிய சதிராட்டம் இழிவானது என்பான். அதே ஆட்டத்தின் பார்ப்பன வடிவமான 'பரத நாட்டியம்' புனிதமானது என்பான்.
பார்ப்பனர்கள் குவித்துவைத்திருந்த நிலங்களை கையகப்படுத்தி அதை உழைக்கிற மக்களுக்கு பிரித்தளித்த 'களப்பரர்களின் காலம் இருண்டகாலம்'. ஊரான் சொத்துக்களை எடுத்து பார்ப்பனர்களுக்கு காணிக்கை செய்த 'குப்தர்களின் காலம் பொற்காலம்'.
மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.. களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கே
நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு
மாவட்டங்ளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியேறுமாறும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில்அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. வீரகேசரி
மாவட்டங்ளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியேறுமாறும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில்அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. வீரகேசரி
தேயிலைத் தோட்டங்களை முறையாக பராமரிக்காவிட்டார் தனியார்மயப்படுத்திவிடுவார்கள்!
மலயக குருவி : ளனிவெலி முகாமைத்துவப் பணிப்பாளர் ரொஷான் இராஜதுரை
செய்தி : டி. சந்ரு
தேயிலை தோட்டங்களை முறையாக பராமரிக்காவிட்டால் தனியார்மயபடுத்திவிடுவார்கள். நான் இருக்கும் வரையில் அவ்வாறான நிலை வருவதற்கு இடம் கொடுக்கமாட்டேன். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் தேயிலை செடிகளை நம்பி வாழும் தொழிலாளர்களின் நிலை என்னவாகும்? எனக் கூறுகிறார் களனிவெலி பெருந்தோட்ட முகாமைத்துவ பணிப்பாளர் ரொஷான் இராஜதுரை.
04.09.2017 அன்று ஹட்டன் பிரின்சஸ் விடுதியில் இடம்பெற்ற 2016ஃ2017 ம் ஆண்டுக்கான சிறந்த கொழுந்து பறித்தவர்கள், சிறந்த தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சமூகமளித்தவர், சிறந்த முறையில் சம்பளங்கள் பெற்றுக்கொண்டவர்.
களனிவெலி பெருந்தோட்டத்திற்கு சொந்தமான 16 தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்கள் 314 தொழிலாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டதோடு பல பரிசில்களும் வழங்கப்பட்டன.
இதன்போது மேலும் உரையாடிய ரொஷான் இராஜதுரை தேயிலை உற்பத்திக்கு முன்பதாக கோப்பி உற்பத்தி தான் மலையகத்தில் அதிகமாக காணப்பட்டது.
Sunday, 3 September 2017
லன்ச் சீட் , சொப்பிங் பை ,ரிஜிபோம் உணவு பொதியிடல் பெட்டி நாளை முதல் தடை
நாளை தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் லன்ச் சீட் , சொப்பிங் பை மற்றும் ரிஜிபோம் உணவு பொதியிடல் பெட்டிகளின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பாவனை ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டத்தை மீறுவோருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் மற்றும் இரண்டு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாவனைக்கு இலகுவாகவும் , மலிவாகவும ்கிடைக்கும் காரணத்தால் , அன்றாட வாழ்வில் பொலித்தீன் மற்றும் பிலாஸ்டிக் உற்பத்திகளை பயன்படுத்த அநேகமானோர் விரும்புகின்றனர். பொதுவாக நாளொன்றுக்கு ஒரு நபரால் 7 கிலோகிராம் பொலித்தீன் மற்றும் பிலாஸ்டிக் கழிவுப் பொருட்கள் அகற்றப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவற்றில் , லன்ச் சீட் மற்றும் சொப்பிங் பைகள் போன்ற உற்பத்திகளே பொதுமக்களிடம் இருந்து சூழலுக்கு அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நாட்டில் நாளொன்றுக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான லன்ச் சீட்டுக்கள் பாவனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இவைகள் மக்கிப்போகாததால் சூழலுக்கு பாரியளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.
நீர் ஏன் இங்கு வந்தீர் என்று எவரும் கேட்க முடியாது நான் எவருக்கும் பயமில்லை : மட்டக்களப்பில் மனோ
வீரகேசரி Vijithaa : தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சினால்
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடமாடும் சேவையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சர் மனோ கணேஷன் தலைமையில் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் மனோ கணேஷன் கருத்து தெரிவிக்கையில், " பெரியகல்லாறு வைத்தியசாலையை தரமுயர்த்தி தருவேன் என்றும், நான் சொன்னால் செய்வேன், நீர் ஏன் இங்கு வந்தீர் என்று எவரும் கேட்க முடியாது, நான் அமைச்சர், நான் எவருக்கும் பயமில்லை, இம்மாவட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன, அவற்றை தீர்த்து வைப்பேன், எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக செயற்பட உள்ளேன் . இப்பிரதேசத்தின் பல மக்கள் பிரதிநிதிகளுக்கு சிங்கள மொழி தெரியாது, ஆங்கிலம் தெரியாது, பாராளுமன்றத்தில் இனவாதம் பேசி காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள் " இந் நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், எஸ்.வியாழேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடமாடும் சேவையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சர் மனோ கணேஷன் தலைமையில் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் மனோ கணேஷன் கருத்து தெரிவிக்கையில், " பெரியகல்லாறு வைத்தியசாலையை தரமுயர்த்தி தருவேன் என்றும், நான் சொன்னால் செய்வேன், நீர் ஏன் இங்கு வந்தீர் என்று எவரும் கேட்க முடியாது, நான் அமைச்சர், நான் எவருக்கும் பயமில்லை, இம்மாவட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன, அவற்றை தீர்த்து வைப்பேன், எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக செயற்பட உள்ளேன் . இப்பிரதேசத்தின் பல மக்கள் பிரதிநிதிகளுக்கு சிங்கள மொழி தெரியாது, ஆங்கிலம் தெரியாது, பாராளுமன்றத்தில் இனவாதம் பேசி காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள் " இந் நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், எஸ்.வியாழேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...