மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு...பெருந்திரளாக கூடிய
இளைஞர்கள்!
நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு இன்று (16.09.2017) கொட்டகலை சித்தி விநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
காலை 11.00 மணியளவில் கொட்டகலை ரொசிட்டா சந்தியில் இருந்து மலையக கலை கலாச்சார நிகழ்வுகளுடன் ஊர்வலம் ஆரம்பமாகி பிரதான மண்டபத்தை வந்தடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
முதல் நிகழ்வாக மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமான அமரர் சந்திரசேகரன் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது. மலையக குருவி
Saturday, 16 September 2017
Friday, 15 September 2017
தனுஷ்கோடி மக்கள் வாழ தகுதியான நகரமா?
1964ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழகத்தின் முக்கிய வணிகப்பகுதியாகவும்,
துறைமுக பகுதியாகவும் இருந்த தனுஷ்கோடி பயங்கர புயல் காரணமாக மொத்தமாக சிதைந்தது. தற்போது எஞ்சியிருப்பது பழைய ரயில் நிலையம், சிதைந்துப் போன தேவாலயம், பள்ளிக்கூடம், வீடுகள் என இடிந்த கட்டிட கூடுகள் மட்டுமே இந்த பகுதி அரசாலும், பொதுமக்களாலும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கைவிடப்பட்ட நிலையில் கடந்த ஜூலை 27 முதல் மிச்சமிருக்கும் நிலப்பரப்பும் தார் சாலை மூலம் இணைக்கப்பட்டது. சிறப்புப் பேருந்துகள் வசதியுடன் பழைய தனுஷ்கோடி நகரும் அரிச்சல் முனையும் சுற்றுலாத் தலமாக தற்போது உருப்பெற்றிருக்கிறது. இருப்பினும் இந்த பகுதி மனிதர்கள் வாழ தகுதியுடையதா என்று ஆராய பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்த நிலையில் தனுஷ்கோடி நகரம் மக்கள் வாழத் தகுதியானதா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேர் வருகிற செப்டம்பர் 17-ம் திகதி தனுஷ்கோடிக்குச் செல்ல உள்ளனர். அவர்கள் கொடுக்கும் அறிக்கையை பொறுத்தே தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகி தினகரன்
துறைமுக பகுதியாகவும் இருந்த தனுஷ்கோடி பயங்கர புயல் காரணமாக மொத்தமாக சிதைந்தது. தற்போது எஞ்சியிருப்பது பழைய ரயில் நிலையம், சிதைந்துப் போன தேவாலயம், பள்ளிக்கூடம், வீடுகள் என இடிந்த கட்டிட கூடுகள் மட்டுமே இந்த பகுதி அரசாலும், பொதுமக்களாலும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கைவிடப்பட்ட நிலையில் கடந்த ஜூலை 27 முதல் மிச்சமிருக்கும் நிலப்பரப்பும் தார் சாலை மூலம் இணைக்கப்பட்டது. சிறப்புப் பேருந்துகள் வசதியுடன் பழைய தனுஷ்கோடி நகரும் அரிச்சல் முனையும் சுற்றுலாத் தலமாக தற்போது உருப்பெற்றிருக்கிறது. இருப்பினும் இந்த பகுதி மனிதர்கள் வாழ தகுதியுடையதா என்று ஆராய பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்த நிலையில் தனுஷ்கோடி நகரம் மக்கள் வாழத் தகுதியானதா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேர் வருகிற செப்டம்பர் 17-ம் திகதி தனுஷ்கோடிக்குச் செல்ல உள்ளனர். அவர்கள் கொடுக்கும் அறிக்கையை பொறுத்தே தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகி தினகரன்
அமைச்சர் திகாம்பரத்திற்கு எதிரான வழக்கு; தொழிலாளர்கள் வெற்றி
Malayaga Kuruviமலையக குருவி : யாபார்க் போராட்டத்தில் பங்கேற்றதாலேயே
வீடுகள் வழங்கப்படவில்லை" - தொழிலாளர்கள் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சினால் வீடுகள் வழங்க மறுக்கப்பட்ட மஸ்கெலிய பிரவுன்ஸ்விக் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகள் கிடைத்தமையானது தொழிலாளர்களுக்கு சட்ட ரீதியாக கிடைத்த வெற்றியென பயனாளர்கள் தெரிவிக்கின்றனர். மஸ்கெலிய பிரவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த லயன் வீடுகளின் 16 காம்பிராக்கள், 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி மின்சார கோளாறினால் தீக்கிரையாக்கப்பட்டது. 16 லயன் வீடுகளில் வாழ்ந்த, 21 குடும்பங்கள் அப்பகுதி பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சு இத்தொழிலாளர்களுக்கு 23 வீடுகளை அமைத்ததோடு, 2017 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி அமைச்சினால் வீடுகள் தொழிலாளர்களுக்கு கையளிக்கப்பட்டன. செங்கடி சங்கத்தின் தோட்டத் தலைவர் உள்ளிட்ட இரு தொழிலாளர்களுக்கு வீடுகளை வழங்க அமைச்சு மறுப்புத் தெரிவித்திருந்தது. இது தொடர்பில் அமைச்சிடம் தொழிலாளர்கள் வினவியபோது “எயாபார்க் போராட்டத்தில் பங்கேற்றதாலேயே வீடுகள் வழங்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
வீடுகள் வழங்கப்படவில்லை" - தொழிலாளர்கள் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சினால் வீடுகள் வழங்க மறுக்கப்பட்ட மஸ்கெலிய பிரவுன்ஸ்விக் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகள் கிடைத்தமையானது தொழிலாளர்களுக்கு சட்ட ரீதியாக கிடைத்த வெற்றியென பயனாளர்கள் தெரிவிக்கின்றனர். மஸ்கெலிய பிரவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த லயன் வீடுகளின் 16 காம்பிராக்கள், 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி மின்சார கோளாறினால் தீக்கிரையாக்கப்பட்டது. 16 லயன் வீடுகளில் வாழ்ந்த, 21 குடும்பங்கள் அப்பகுதி பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சு இத்தொழிலாளர்களுக்கு 23 வீடுகளை அமைத்ததோடு, 2017 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி அமைச்சினால் வீடுகள் தொழிலாளர்களுக்கு கையளிக்கப்பட்டன. செங்கடி சங்கத்தின் தோட்டத் தலைவர் உள்ளிட்ட இரு தொழிலாளர்களுக்கு வீடுகளை வழங்க அமைச்சு மறுப்புத் தெரிவித்திருந்தது. இது தொடர்பில் அமைச்சிடம் தொழிலாளர்கள் வினவியபோது “எயாபார்க் போராட்டத்தில் பங்கேற்றதாலேயே வீடுகள் வழங்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
04.04.1922- தென்னிந்தியாவில் இருந்து மலையகத்துக்கு கூலியாக அழைத்து வரும்போது கொடுத்த வாக்குறுகள்
Wednesday, 13 September 2017
ஏழு எதிரிகளின் குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு அப்பால் நிரூபணம்
தினகரன்: புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் 1ஆம் எதிரி மற்றும் 7 ஆம் எதிரிகள் சார்பாக சாட்சியங்கள் எதுவுமில்லை. 2, 3, 4,5,6,8,9 ஆம் எதிரிகளின் குற்றச்சாட்டுக்கள், சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக, ரயல் அட் பார் நீதிபதிகள் முன்னிலையில் பிரதி சொலிசிட்டர் குமார் ரட்ணம் தெரிவித்தார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கூட்டுவன்புணர்வு படுகொலை வழக்கின் விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய ரயல் அட் பார் முன்னிலையில் கடந்த 3 மாதங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.விசாரணையின் இறுதியாக சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக ரயல் அட்பார் நேற்று (12) கூடியது.
முதலில் வழக்குத் தொடுநர் சார்பாக பிரதி சொலிசிட்டர் குமார் ரட்ணம் தனது சமர்பணத்தினை ஆரம்பித்தார்.
மலையக பெருந்தோட்டங்களின் 30 வருட அநீதி இல்லாதொழிக்கப்பட்டது!
பெருந்தோட்ட பிரதேசங்களின் அபிவிருத்திகளுக்கு, பிரதேச சபைகள்
நிதியுதவி வழங்க முடியாதென்ற 1987ஆம் ஆண்டின் பிரதேச சபை சட்டத்தில், திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதியுதவி வழங்க முடியாதென்ற 1987ஆம் ஆண்டின் பிரதேச சபை சட்டத்தில், திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் வலியுறுத்தலின்படி உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதற்கான ஆலோசனையை நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.
இதன் மூலம் 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 33ஆம் பிரிவு திருத்தப்படுவதுடன், வர்த்தமானியில் இது அறிவிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியதாவது,
நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கொழும்பு, காலி, மாத்தறை, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெருந்தோட்ட புறங்களில் வாழும் மலையக தமிழ் மக்கள் பிரதேச சபை தேர்தல்களில் வாக்களித்து உறுப்பினர்களை தெரிவு செய்யலாம். எனினும் பெருந்தோட்டங்களின் அபிவிருத்திகளுக்கு பிரதேச சபைகள் நிதியொதுக்க முடியாதவாறு 1987 ஆம் ஆண்டின் சட்டம் தடுத்தி ருந்தது.
Mano Ganesan: நான் கையில் தூக்கி வைத்திருக்கும் மட்டக்களப்பு குழந்தைக்கும் என்னை பிடிக்குதே!
Mano Ganesan :கிழக்கு
மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் இன
உறவுகள் சீரற்றுள்ளன. குறிப்பாக தமிழ் மக்கள் தம்மை அரசியல் அனாதைகளாக உணர்கின்றனர். இது நல்லதல்ல. இதை பாராளுமன்ற, மாகாணசபை பொறுப்புகளிலுள்ள அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டும்” என சமீபத்தில் மட்டக்களப்புக்கு வந்தபோது நான் சொன்னேன்.
இப்போது, கிருஷ்ணபிள்ளை என்ற ஒரு கிழக்கு மாகாணசபை உறுப்பினர், “மனோ கணேசன், தமிழ் எழுத்து பிழைகளை கவனித்துக்கொண்டு கொழும்பிலேயே இருக்க வேண்டும். மட்டக்களப்பு பக்கம் வரக்கூடாது” என்ற அர்த்தத்தில் சொன்னதை ஒரு ஊடகத்தில் கேட்டேன்.
உறவுகள் சீரற்றுள்ளன. குறிப்பாக தமிழ் மக்கள் தம்மை அரசியல் அனாதைகளாக உணர்கின்றனர். இது நல்லதல்ல. இதை பாராளுமன்ற, மாகாணசபை பொறுப்புகளிலுள்ள அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டும்” என சமீபத்தில் மட்டக்களப்புக்கு வந்தபோது நான் சொன்னேன்.
இப்போது, கிருஷ்ணபிள்ளை என்ற ஒரு கிழக்கு மாகாணசபை உறுப்பினர், “மனோ கணேசன், தமிழ் எழுத்து பிழைகளை கவனித்துக்கொண்டு கொழும்பிலேயே இருக்க வேண்டும். மட்டக்களப்பு பக்கம் வரக்கூடாது” என்ற அர்த்தத்தில் சொன்னதை ஒரு ஊடகத்தில் கேட்டேன்.
இந்த “சிரிப்பு பிள்ளை” கொஞ்ச நாள் எம்பியாகவும் இருந்தபோது, அவரை நான்
தனிப்பட்ட முறையில் அறிவேன். ஆகவேதான் இக்குறிப்பை எழுதுகிறேன். (1) நான்
ஒரு கபினட் அமைச்சர். நாடு முழுக்க பொறுப்பும், அதிகாரமும் எனக்குண்டு. (2)
இவர் ஒருமுறை தன் சொந்த ஊரோ எதுவோ, காணிக்கு போக முடியாமல், (2007ம்
ஆண்டு) கோட்டாபயவின் ராணுவத்துக்கு அஞ்சி தவித்திருந்த போது, நான்தான்
கொழும்பில் இருந்து அங்கு போய் அவரை அழைத்து சென்றேன்.
Tuesday, 12 September 2017
ஒலிரூட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
-Tamil Mirror : எஸ்.கணேசன், ஆ.ரமேஷ், எஸ்.சுஜிதா<
தலவாக்கலை ஒலிரூட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக 150 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று(12) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட நிர்வாகம் 18 கிலோவுக்கு அதிகமான தேயிலை கொழுந்தினை பறிக்குமாறும் வழியுறுத்துவதனால் ஏற்பட்ட முறுகள் நிலை காரணமாக இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேயிலை மலைகள் காடுகளாக காணப்படுகின்றமையால் கொழுந்து பறிப்பதில் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தேயிலைக்காணிகள் பல நல்ல தேயிலை விளைச்சலை தரக்கூடியவையாக உள்ளப்போதிலும், தோட்ட நிர்வாகம் இந்த தேயிலை மலைகளை சுத்தம் செய்து கொடுபதில் அக்கரை காட்டுவதில்லை என தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Monday, 11 September 2017
இங்கிருந்து ..மலையக மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு வெளிவருகிறது
Malayaga Kuruvi
மலையக மக்களின் யதார்த்தங்களை நேர்மையுடன் எடுத்துக்காட்டும் திரைப்படம் என்ற கருவுடன் சுமதியின் ''இங்கிருந்து''
மலையக மக்களின் வாழ்வியலை மையப்படுத்தும் கதையாக இருக்கின்றது.
மலையக மக்களின் வாழ்வியலை நேர்மையாக காட்டுகிறதா என்பதை நீங்களும் பார்க்கலாம்!
டிசம்பர் 20ஆம் திகதி முதல் ஹட்டன் - விஜித, கொழும்பு - சினிசிற்றி திரையரங்குகளில்...
- Shaan Sathees
இலங்கை மலையகத்தமிழ் இலக்கியமும் கலைபண்பாட்டு வடிவங்களும் " - பன்னாட்டு் கருத்தரங்க நிகழ்வு
Thavamudhalvan Davan :
காந்திகிராம பல்கலைக்கழகம்
ஆஸ்திரேலியா தமிழ்
சங்கம் மலையக எழுத்தாளர் மன்றம் ஆகியவை இணைந்து மிகவும் பொருத்தமான வேளையில் நடத்திய "இலங்கை மலையகத்தமிழ் இலக்கியமும் கலைபண்பாட்டு வடிவங்களும் " - பன்னாட்டு் கருத்தரங்க நிகழ்வு மிகவும் மகிழ்வான நிகழ்வுகளிலொன்று! ஆயிரத்து எண்ணூற்று பதினைந்து ஆண்டுகளில் தொடங்கிய மலையகத்தமிழர் புலம்பெயர்வின் இருநூறு ஆண்டுகளைக் கடக்கும் நடப்பாண்டுகளில் இந்த நிகழ்வு வளமானதாகவும், உழைக்கும் மக்களுக்கு நெருக்கமானதாகவும், பாசாங்குகளற்ற மக்கள் இலக்கியமாக திகழும் மலையக இலக்கியத்தின் செழுமைகளைப் பேசவும் , இனியும் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்தும் பரிசீலிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த நிகழ்வை ஒழுங்கு செய்த அனைவருக்கும் நாம் நன்றிசொல்ல கடமை பட்டுள்ளோம் முடிந்தவரை நிகழ்வுகளை எல்லோருக்கும் பயனுள்ளதாக்க படங்களாக, ஒளிப்படங்களாக, ஒலிக்குரலாக பதிவு செய்திருக்கிறேன்.ஒவ்வொன்றாக பதிவிடுகிறேன். மகிழ்ச்சி அன்பின் உறவுகளே!
சங்கம் மலையக எழுத்தாளர் மன்றம் ஆகியவை இணைந்து மிகவும் பொருத்தமான வேளையில் நடத்திய "இலங்கை மலையகத்தமிழ் இலக்கியமும் கலைபண்பாட்டு வடிவங்களும் " - பன்னாட்டு் கருத்தரங்க நிகழ்வு மிகவும் மகிழ்வான நிகழ்வுகளிலொன்று! ஆயிரத்து எண்ணூற்று பதினைந்து ஆண்டுகளில் தொடங்கிய மலையகத்தமிழர் புலம்பெயர்வின் இருநூறு ஆண்டுகளைக் கடக்கும் நடப்பாண்டுகளில் இந்த நிகழ்வு வளமானதாகவும், உழைக்கும் மக்களுக்கு நெருக்கமானதாகவும், பாசாங்குகளற்ற மக்கள் இலக்கியமாக திகழும் மலையக இலக்கியத்தின் செழுமைகளைப் பேசவும் , இனியும் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்தும் பரிசீலிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த நிகழ்வை ஒழுங்கு செய்த அனைவருக்கும் நாம் நன்றிசொல்ல கடமை பட்டுள்ளோம் முடிந்தவரை நிகழ்வுகளை எல்லோருக்கும் பயனுள்ளதாக்க படங்களாக, ஒளிப்படங்களாக, ஒலிக்குரலாக பதிவு செய்திருக்கிறேன்.ஒவ்வொன்றாக பதிவிடுகிறேன். மகிழ்ச்சி அன்பின் உறவுகளே!
மனோ கணேசன்: தமிழ் முற்போக்கு கூட்டணியின் இன்னொரு வெற்றி>
தமிழ் முற்போக்கு கூட்டணியின் இன்னொரு வெற்றி>
பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள், பிரதேச சபைகளுக்கு வாக்களிக்க முடியும்; ஆனால், பிரதேச சபைகளால், தோட்ட பிரதேசங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணியாற்ற முடியாது என்ற 30 வருட பழமை சட்டம், திருத்தப்படுகிறது.
நமது வலியுறுத்தலின்படி மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சர் நண்பர் பைசர் முஸ்தபா இதற்கான பத்திரத்தை நாளை (12/09/17) அமைச்சரவையில் சமர்பிக்கின்றார். 1987ம் வருடத்தின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 33ம் பிரிவு இதன் மூலம் திருத்தப்படுகிறது. இதையடுத்து இது வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி. முத்துலிங்கம் குழுவினரால் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு, இன்று கூட்டணியினால் அரசியல்ரீதியாக ஆளுமையுடன் முன்னேடுக்கப்பட்டுள்ள இவ்விவகாரம் எமது காத்திரமான முன்னெடுப்புகளில் ஒன்றாகும்.
Subscribe to:
Posts (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...