Tuesday, 12 September 2017

ஒலிரூட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

-Tamil Mirror : எஸ்.கணேசன், ஆ.ரமேஷ், எஸ்.சுஜிதா< தலவாக்கலை ஒலிரூட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக 150 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று(12) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட நிர்வாகம் 18 கிலோவுக்கு அதிகமான தேயிலை கொழுந்தினை பறிக்குமாறும் வழியுறுத்துவதனால் ஏற்பட்ட முறுகள் நிலை காரணமாக  இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேயிலை மலைகள் காடுகளாக காணப்படுகின்றமையால் கொழுந்து பறிப்பதில் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தேயிலைக்காணிகள் பல நல்ல தேயிலை விளைச்சலை தரக்கூடியவையாக உள்ளப்போதிலும், தோட்ட நிர்வாகம் இந்த தேயிலை மலைகளை சுத்தம் செய்து கொடுபதில் அக்கரை காட்டுவதில்லை என தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் நாளொன்றுக்கு 18 கிலோவுக்கு அதிகமாக தோட்ட நிர்வாக அதிகாரி தேயிலை கொழுந்தை பறிக்குமாறு வழியுறுத்துவதனால் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இந்த விடயத்தில் தொழிற்சங்கங்கள் தீர்க்கமான முடிவினை பெற்றுத்தர முன்வர வேண்டும் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒலிரூட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...