Saturday, 9 September 2017

வாகரை ... ஆதிவாசிகள் என்பதில் நாம் பெருமை கொள்கிறோம் ,,, ஆதிவாசிகள் தலைவர் வேலாயுதம்!

வாகரையிலிருந்து குஞ்ஞான் குளத்துக்கு செல்லும் பயணம் மிகவும் ஆபத்து நிறைந்தது. பாதையின் இருபுறமும் அடர்ந்த காடு இருட்டில் காட்டின் தன்மை என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை. மழைக்காலத்தில் இப் பாதையில் பயணம் செய்வது எவ்வளவு சிரமம் என்பதை எமது வாகனத்தின் ஒளியில் முன்னே உள்ள குழிகளின் நீள அகலத்தை காண முடியாததிலிருந்து புரிந்து கொண்டோம். பல மாதங்களாக மழை காணாத பூமி வரண்டு கிடந்தது. அந்த இரவிலும் மேலெழும்பிய புழுதி எம்மை மூச்சு முட்டச் செய்தது. எப்போது எமது பாதையில் யானைகள் குறுக்கீடு செய்யும் என்ற பயத்துடனேயே பயணம் செய்தோம். ஆனால்,அந்த இரவிலும் அங்கு பயணம் செய்யும் இராணுவ வீரர்கள் எம்மை தைரியப்படுத்தினார்கள். யானைகளைக் கண்டால் நாம் உடனடியாக வாகனங்களை நிறுத்தி விட்டு அவை அவ்விடத்தி லிருந்து அகலும் வரை நாம் அமைதியாக காத்திருப்போம். அவற்றிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை யென தெரிந்தவுடன் அவை அவ்விடத்தை விட்டு அகன்று விடும். இவ்வாறு யானைகளைப் பற்றி மட்டுமல்ல பலவித மிருகங்களைப் பற்றிய விபரங்களை செவிமடுத்துக் கொண்டே எமது பயணத்தை தொடர்ந்தோம்.

நாங்கள் வாகரையிலிருந்து இருபது கிலோ மீற்றர் பயணித்திருந்தோம். இறுதியில் நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைந்தோம். தலைவரின் வீடு இங்குதான் இருக்கின்றது. எனக் கூறிக் கொண்டு ஒரு பெரிய மரத்தின் கீழ் வாகனத்தை நிறுத்தினார். இருட்டில் எதுவும் தெரியவில்லை. தீடிரென காட்டைக் கிழித்துக் கொண்டு பெரிய சத்தமொன்று கேட்டது. அதனோடு மேள சத்தமும் கேட்கக் தொடங்கியது.

'இன்று இங்கு சங்கதி பூஜை' என்று கூறியவாறு எம்மை ஆதி வாசிகளின் தலைவர் வேலாயுதம் வரவேற்றார்.

மத்திய அதிவேக பாதை பணிகள் சட்ட திட்டங்களுடன் முன்னெடுப்பு

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் உரிய சட்டங்களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் சில ஊடகங்கள் விஷம பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று விசேட உரையாற்றிய பிரதமர், மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் குறித்து கடந்த சில வாரங்களாக ஊடகவலையமைப்பொன்றினால் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிடப்பட்ட சேறுபூசும் பிரசாரம் தொடர்பில் விளக்கமளித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தொடர்ந்தும் பேசுகையில், மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கி நிறுவனம் ஆரம்பத்தில் முன்வைத்த தொகையைவிடவும் 25 பில்லியன் ரூபா குறைவாக இந்த திட்டத்தை வழங்குவதற்கு எம்மால் முடிந்திருந்தது. இலங்கை அரசும் ஜப்பான் அரசும் தலையிட்டிருந்தமையால் இந்தத் திட்டம் தொடர்பில் சாதகமான மாற்றங்கள் பலவற்றை ஏற்படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அதற்கமைய ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்த 'டயிசேயி' நிறுவனத்துடன் பேசி, 25 பில்லியன் ரூபா செலவை குறைத்துக் கொள்ள இலங்கை அரசாங்கத்துக்கு முடிந்திருந்தது.

25 பில்லியன் ரூபா செலவை குறைத்ததையிட்டு இந்த ஊடக வலையமைப்புக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு 25 ஆயிரம் பில்லியன் ரூபா என்ற தொகையை சேமித்துக் கொடுத்தமைக்காக இந்த நிறுவனம் எமக்கு அவமதிப்புக்களை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்லாது இதன் நிமித்தம் அவர்கள் பொய்யான பல்வேறு தகவல்களையும் கூறுகின்றனர். இந்த நிர்மாண ஒப்பந்தம் வழங்கப்பட்ட டயிசேயி நிறுவனம் ஆரம்பத்தில் 159 பில்லியன் ரூபாவிலான விலை கோரலையே முன்வைத்திருந்தது.

"உடைத்து எறிய சொன்னேன்" அதிரடி பணியில் அமைச்சர் மனோ கணேசன்!


கொழும்பு - அளுத்மாவத வீதி 854ஆம் தோட்டத்திலுள்ள மக்கள் பிரச்சினைக்குத் தீர்வுகாண அமைச்சர் மனோ கணேசன் அதிரடியாக களமிறங்கி எடுத்த நடவடிக்கையினால் அந்தப் பிரதேச மக்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர். இதுகுறித்து அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ''கொழும்பு - அளுத்மாவத வீதி 854ஆம் தோட்டத்தை அடுத்த காணியில் தொழிற்சாலை அமைத்துள்ள தொழில் அதிபர், சட்ட விரோதமாக கழிவு நீர் கால்வாயை அடைத்து விட, அப்பாவி குழந்தைகள் உட்பட ஏழை பாமர மக்கள் பல நாட்களாக அழுக்கு நீரில் மூழ்கியுள்ள வீடுகளில் பரிதவிப்பதை அறிந்து ஸ்தலத்துக்கு விரைந்தேன். பணக்கார செல்வாக்கு விளையாடியுள்ள விபரங்களை அறிந்தேன். மாநகர முதன்மை பொறியியலாளர், பிரதேச பொறியியலாளர், முகத்துவார பொலிஸ் பொறுப்பதிகாரி, வலய கிராமசேவகர் ஆகியோரை ஸ்தலத்துக்கு அழைத்தேன். சட்டவிரோத கட்டுமானத்தை உடைத்தெறிய பணிப்புரை வழங்கினேன். ஏழை பிள்ளைகள் வாழ்த்தினார்கள். இன்னும் பகலுணவு சாப்பிடவில்லை. ஆனாலும் மனது நிறைந்தது.'' முதல்ல சாப்பிடுங்க அமைச்சரே! அப்போ தான் அடுத்த வேட்டைக்கு தெம்பா தயாராகலாம்.

தமிழகத்தில் பூவரசி விருது பெற்ற மலையக ஊடகவியலாளர் ஜீவா சதாசிவம்!

தமிழக பூவரசி விருதைப் பெற்றுக்கொண்ட மலையக ஊடகவியலாளர் ஜீவா சதாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! தமிழகத்தில் ஆண்டு தோறும் பூவசரி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு வரும் சிறந்த ஆளுமைகளுக்கான விருதுகளில் இம்முறை இலங்கை ஊடகத்துறையில் 2016/2017 ஆம் ஆண்டுக்கான பெண் ஆளுமை விருது ஜீவா சதாசிவத்திற்கு வழங்கப்பட்டது. கடந்த 6ஆம் திகதி சென்னையில் நடந்த
நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது. மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜீவா சதாசிவம் 2007ஆம் ஆண்டு முதல் தேசிய பத்திரிகையான தினக்குரல் பத்திரிகையின் உதவி பயிற்சி ஆசிரியராக அறிமுகமானவர். தற்போது வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றிவரும் இவர், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளராகவும் இருந்து வருகிறார். வீரகேசரி பத்திரிகையில் நீண்டகாலமாக பணியாற்றிவரும் ஜீவா சதாசிவம்

இயக்குனர் ரஞ்சித் பேச்சு .... பல அபத்தங்களை கொண்டிருக்கிறது .. சாதி சங்கங்களிடம் கேட்க வேண்டியதை ....

Vallialagappan Alagappan : இயக்குநர் பா.ரஞ்சித்தின் உணர்வுகளோடு ஒன்றுபடுகிறேன். ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்தவர் என்கிற அடிப்படையில் அவர் ஒடுக்கப்படுவதாக உணரும் அதே தன்மையை என்னால் முழுமையாக உணரமுடியாவிட்டாலும், பல்வேறு களங்களில் வெவ்வேறு விதமான ஒடுக்குமுறைகளை சந்தித்திருப்பவன்/சந்தித்துக் கொண்டிருப்பவன் என்கிற முறையில் ரஞ்சித்தின் குமுறல்களை புரிந்துக்கொள்ள இயலுகிறது.
அதே நேரம், அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசிய இந்த பதினைந்து நிமிடப் பேச்சு எவ்வளவு அபத்தமான வெளிப்பாடு கொண்டிருக்கிறது என்பதையும் அவர் புரிந்துக்கொள்ள வேண்டும். அவரது இந்தப் பேச்சை கேட்டுவிட்டுதான் அவருக்கான ஏகோபித்த ஆதரவுக்குரல் இணையத்தில் எழுந்திருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. யாரோ கோர்வையாக பத்து நிமிடம் ‘சித்தாந்தம்’ மாதிரி பேசிவிட்டால் சிந்திக்காமலேயே கைத்தட்டும் போக்குதான் இது. முன்பு ஈழப்பிரச்சினையில் சீமான், தமிழருவி போன்ற அரைவேக்காடுகளை ஊடகங்கள் தேவதூதர்களாக சித்தரித்ததும் இதேமாதிரி சூழலில்தான்.
1. தமிழகத்தில் சாதி இருக்கிறது என்பது ரஞ்சித்தின் கண்டுப்பிடிப்பு அல்ல. அது அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனால்- அந்த சாதிமுறையை எதிர்ப்பவர்களும் இந்தியாவிலேயே கணிசமாக தமிழகத்தில்தான் இருக்கிறார்கள்.

Friday, 8 September 2017

இரத்தினபுரி மாவட்டத்தில் 1,911 குடும்பங்களை சேர்ந்த 7,590 பேர் பாதிப்பு

சிவாணி ஸ்ரீ: இரத்தினபுரி மாவட்டத்தில், கடந்த புதன்கிழமை(6) முதல்
தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால், வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக, இதுவரை 1911 குடும்பங்களை சேர்ந்த 7,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.< மேற்படி மாவட்டத்தில் இரத்தினபுரி, கிரியெல்ல, எஹலியகொடை, அயகம, எலபாத்த, குருவிட்ட, நிவித்திகல ஆகிய ஏழு பிரதேச செயலகப்பிரிவுகளிளேயே இவ்வாறு வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக 1911 குடும்பங்களை சோந்த 7,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 196 குடும்பங்களை சேர்ந்த 721 பேர் 18 பொது இடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 304 குடும்பங்களை சேர்ந்த 1420 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று பொது இடங்களில் 22 குடும்பங்களை சேர்ந்த 88 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கிரியெல்ல பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 596 குடும்பங்களை சேர்ந்த 2,425 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று பொது இடங்களில் 11 குடும்பங்களை சேர்ந்த 48 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
எஹலியகொடை பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் 531 குடும்பங்களை சேர்ந்த 2119 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன,; ஆறு பொது இடங்களில் 90 குடும்பங்களை சேர்ந்த 343 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Thursday, 7 September 2017

படப்பிடிப்புக்கென பொய் கூறி ஆடுகள் திருட்டு .. வவனியாவில் கைவரிசை

virakesari.lk வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் சூட்சுமமான முறையில் ஆட்டுப்பண்ணை உரிமயாளரை ஏமாற்றி 15 ஆடுகள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியா பொலிஸில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
ஹயஸ் ரக வாகனமொன்றில் வந்த நபரொருவர் படப்பிடிப்பு நடாத்துவதற்கு ஆடுகளை தருமாறு கேட்க ஆட்டுப்பண்ணை உரிமையாளரும் சம்மதித்துள்ளார்.
உரிமையாளரிடம் இருபதினாயிரம் ரூபாவை கொடுத்துவிட்டு படப்பிடிப்பு நடக்கும் ஸ்தலத்திற்கு ஆடுகளை கொண்டு செல்ல வேண்டும் எனக் கூறி உரிமையாளரையும் தன்னோடு அழைத்துக்கொண்டு வவுனியா நோக்கி சென்றுள்ளார்.
செல்லும் வழியில் பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு அருகிலுள்ள இராணுவ உணவுச் சாலைக்கு முன்னால் வாகனத்தை நிறுத்திய குறித்த நபர் உரிமையாளரிடம் 200 ரூபாவை கொடுத்து தனக்கு குளிர்பானம் வாங்கி வருமாறு கூறி வாகனத்தை விட்டு இறக்கியுள்ளார்.

மண்சரிவு, வெள்ளம் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, மண்சரிவு மற்றும் வெள்ள நிலைமைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம் கோரியுள்ளது. குறிப்பாக, தேசிய கட்டட ஆய்வு மையம் மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ள பகுதிகளிலுள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட, அயகம, கிரிஉல்ல மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், காலி மாவட்டத்தின் நாகொடை பிரதேச செயலாளர் பிரிவிலும் களுத்துறை மாவட்டத்தின் பாலின்தனுவர, வலல்லாவிட மற்றும் அகலவத்தை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. dhinakural

Wednesday, 6 September 2017

காலியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

ந.ஜெயகாந்தன் தெற்கில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையால்
காலி மாவட்டத்தில் தாழ் நில பிரதேசங்கள் பலவும் வெள்ளத்தில மூழ்கியுள்ளன. நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு முதல் தென்மாகாணத்தில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவிவருகிறது. இதன்படி நேற்று அதிகாலை வரை அந்த மாகாணத்தின் பல இடங்களிலும் 100 முதல் 200 மில்லி மீற்றர் வரையான மழை பெய்துள்ளதாக வானிலை அவதான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, காலி மாவட்டத்தில் நாகொட மற்றும் யட்டலமத்த ஆகிய பிரதேசங்களில் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் காலி மாவட்டத்தில் தாழ்நில பிரதேசங்களும் வீதிகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன. இவ்வாறாக காலி நகரம் , கராபிட்டிய , மாபலாகம, பத்தேகம, நெலுவ , தங்கெதர உள்ளிட்ட பிரதேசங்களில் தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

 இதேவேளை இந்தப் பிரசேங்களில் வீடுகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளதுடன், இந்த வீடுகளில் வசித்தோரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த பிரதேசங்களில் பிரதான வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் இந்த வீதிகளினூடான வாகனப் போக்குவரத்துகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இந்தப் பிரதேசங்களில் ஆறுகளும் ஓடைகளும் பெருக்கெடுத்தமையினாலேயே அங்கு வெள்ள நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

Tuesday, 5 September 2017

எந்திரன் 2.0 கருப்பு பண நடிகனும் கருப்பு பண இயக்குனரும் கருப்பு பணத்தில் கருப்பு பணத்துக்கு எதிராக படம் எடுக்கிராக


SHANKARvinavu.com :ஷங்கரின் இயக்கத்தில் வெளியான எந்திரனின் இரண்டாவது பாகம் 2017 தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இது 2.0 என்ற பெயரில் அழைக்கப்படும் அத்திரைப்படத்தின் முதல் பார்வை விழா. எந்திரனுக்கு சன் குழுமத்தின் கலாநிதி மாறன் சுமார் 130 கோடி ரூபாய் செலவழித்தார். இரண்டாவது பாகத்திற்கு இலண்டன் வாழ் லைக்கா மொபைலின் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா சுமார் 350 கோடி ரூபாயை செலவழிக்கிறார்.

எந்திரனில் எழுந்த ரோபாவான சிட்டி, இரண்டாவது பாகத்தில் இன்னும் அதிக வீரியத்துடன் செதுக்கப்பட்டு ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மானுடன் இந்தி நடிகர் அக்ஷய் குமாருடன் 3 டி படமாக வெளிவருகிறது. முதல் பாகத்தின் இரு பரிமாணத்தை விட இரண்டாம் பாகத்தின் முப்பரிமாணம் தரத்திலும், செலவிலும், நுட்பத்திலும் பிரம்மாண்டமாகத்தான் இருந்தாக வேண்டும். அதிகம் குவிந்திருப்பதால் மட்டுமே பணம் தனது பளபளப்பை பராமரிக்க இயலாது. மேலும் மேலும் தன்னைப் பெருக்கிக் கொள்வதே நிதிக்கலையால் மிளிரும் பணத்தின் ஆகச்சிறந்த அழகு.

முதல் பாகத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் சிரமம் இருந்தது என்றால் இரண்டாம் பாகத்தில் தோளில் எவரெஸ்ட் சிகரத்தை சுமந்து கொண்டு உச்சியில் ஏறும் மீப்பெரும் சிரமமும் பொறுப்பும் இருப்பதாக இயக்குநர் ஷங்கர் விழாவில் தெரிவித்தார். வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் பாமரருக்கு விருப்பப்பட்டு பாரம் சுமக்கும் திரைக்கலைஞனின் வலி தெரியாதாம்.

கடவுளும் மருந்தும் விலை உயர்ந்த பிராண்டுகள்....? இந்த இரண்டையும் விட நீங்கள் உயர்ந்தவர் ! நிமிர்ந்து நில்லுங்கள் !



நவீன வாழ்க்கை வட்டம் ஏனோ தெரியவில்லை பயத்தின் அடிப்படையிலேயே பெரிதும் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இந்த பய உணர்வு மனிதர்களின் இயல்பான ஆனந்தத்தை விழுங்கியே விட்டது.
இந்த வாழ்வு ரசித்து ரசித்து அனுபவிக்க வேண்டிய ஒன்றல்லவா?

 அடிமனதில் தோன்றிய பயத்தின் காரணமாக மனதளவில் ஒழித்து வாழ்ந்து பழகி விட்டார்கள்.;
எதுவித காணரங்களும் இன்றியே பயந்து பயந்து ஒழிக்க இடம் தேடுகின்றனர்.
பயத்தின் காரணமாக சுயமாக சிந்திக்கும் பழக்கத்தை மனிதர்கள் பெரிதும் இழந்து விட்டார்கள். பயம் சிந்திக்கும் ஆற்றலை  கிள்ளி எறிந்துவிட்டது 
இந்த உலகை நேருக்கு நேர் பார்க்க பயந்து போய் ஒழித்து வாழ கண்டுபிடித்த முதல் பங்கர் குகைதான் சமயங்கள் அல்லது கடவுள்கள் என்பது.

அந்த குகைகள் தங்களது பாதுகாப்பு தொட்டில் என்று கருதுகின்றனர்.

அது தரும் தாலாட்டில் கண்ணை மூடிக்கொண்டு வாழ முயற்சிக்கின்றனர்.  இது சரியான வழி அல்லது பிழையான வழி என்று ஒருவித அபிப்பிராயத்தையும் நான் திணிக்க வரவில்லை. அது என் வேலை அல்ல.


மனதளவில் அந்த நிலக்கீழ் குகை வாழ்க்கையில் இருந்து பழகி விட்டார்கள்.
அதை விட்டு வெளியே வந்து பார்க்க பயந்த சமுதாயமாகி விட்டது.

 கற்பனைக்கு எட்டாத அற்புதங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபஞ்சம்  பற்றிய எந்தவித கருத்தும் இல்லாமல் பெருவாரியான மனிதர்கள்  வெறும் அடியவர்கள் ஆகிவிட்டனர்,
ஒரு போதும் உண்மையை  பார்க்க முடியாத அளவு  எங்கோ ஒரு தூரத்தில் இருக்கிறார்கள் .
மனதில் எந்த விதமான சந்தேகம் தோன்றினாலும் கைவசம் பதில்  வைத்திருக்கும் போலி மருந்துகள் சமய வியாபாரத்தில்  தாராளமாக  உண்டு.


அவற்றை மீண்டும் மீண்டும் உருப்போட்டு மனனம் செய்து ஒருவித போதையில் அல்லது அடிக்சனில்   காலத்தை  விரயம் செய்கின்றனர்.

சமயம் கடவுள் போன்ற போதைகளைத்தான்  மருந்து வைத்தியம் ஆரோக்கியம் போன்றவையும் தருகிறது.
கடவுள் வியாபாரம் போன்றே   வைத்திய வியாபாரமும்  விபரீத வளர்ச்சி அடைந்து  மனிதர்களை இருட்டு அறையில் அடைத்து விட்டது.
வைத்திய துறையும் ஏறக்குறைய சமயத்துறை போலவே மக்களை பயங்காட்டி பணம் பறிக்கும் காரியத்தையே செய்கிறது.
மனித உடலின் அற்புத சக்திகளை பற்றி ஆய்வதை விடுத்து சதா எதாவது ஒரு மருந்து மாத்திரைகளை வாங்குங்கள் காசை அள்ளி வீசுங்கள் என்பதே இன்றைய மருத்துவமாகி விட்டது.
ஏராளமான உடல் நோய்கள் மனிதர்களின் தவறான வாழ்க்கை முறையினால் உண்டாகுபவையே. மருத்துவ வியாபாரம் அதைபற்றி அவ்வளவாக அலட்டி கொள்வதில்லை.
வந்து விட்ட நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் காட்டப்படும் அக்கறை நோய்வராமல் வாழும் வாழ்க்கை முறைக்கு அளிக்க்கப்படுவதில்லை. அதில் பணம் வராதே?   
 இந்த இரண்டு வியாபாரிகளிடமும் நாம் வாடிக்கையாளர்களாக இல்லாவிடில்  எமக்கு வாழ்வே இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டது மனித சமுதாயம்.
இந்த நிலை பல நூற்றண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. இப்போது திடீரென்று ஞானோதயம் பெற்று வெளியே எப்படி வரமுடியும் என்று நீங்கள் எண்ணக்கூடும்.
முதலில் உங்கள் சிந்தனைகள் பங்கர் குகைகளில் இருந்து வெளியே வரவேண்டும்.
பிரபஞ்சத்தையும் இந்த உயிர்த்துடிப்புள்ள வாழ்க்கையையும் உங்கள் சொந்த கண்களால் பார்க்கவேண்டும்.
கடவுளின் கண்கொண்டும் நிபுணர்களின் கண்கொண்டும் இந்த உலகை பார்த்தது போதும்.சொந்த கண்களால் பாருங்கள்.
உங்களை விட சிறந்த கடவுளோ சிறந்த நிபுணரோ கிடையாது.    

தமிழகமெங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம் ... ஓயாது ஓயாது ஒடித்து எறியும்வரை ஓயாது



பெரும்  கனவுடன் மருத்துவப் படிப்புக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இன்று காலை திடீரென லயோலா கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். நடிகை ரோகிணி, திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், கவுதமன் ஆகியோர் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.
நந்தனம் ஆடவர் கலைக் கல்லுரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநில கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள், தியாகராயா கலைக்கல்லூரி மாணவர்கள், மீனம்பாக்கம் ஏஎம் ஜெயின் கலைக் கல்லூரி மாணவர்கள், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் என சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வை தமிழகம் மட்டும் இவ்வளவு கடுமையாக எதிர்ப்பது ஏன் தெரியுமா?….


எந்த மாநிலமும் எதிர்க்காத ’நீட்’ தேர்வினை தமிழ்நாடு மட்டும் தனியாக எதிர்ப்பதும்-விலக்கு கோருவதும் ஏன்? என்பது முதல் கேள்வி.  மற்ற கல்விமுறைகளுடன் போட்டியிடும் வகையில் மாநிலக் கல்விமுறை தரமாக உள்ளதா? நீட் தேர்வில் ஒரு  முறை தோற்றாலும் மூன்று முறை எழுத முடியுமே? மருத்துவக் கல்வியைத் தவிர வேறு படிப்பே இல்லையா? உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது சரிதானா? என்று அடுத்தடுத்த கேள்விகளும் பாய்கின்றன. முதல் கேள்விக்கான விடையை விரிவாகத் தேடினால் அடுத்தடுத்த கேள்விகளுக்கான விடைகள் அதற்குள்ளேயே கிடைக்கும்.
சமூக நீதியில்-கல்வி முறையில்-சமூக நலத்திட்டங்களில் தமிழகம் எப்போதுமே முன்னோடியாக விளங்கி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் சுதந்திரத்திற்குப் பிறகும்கூட இம்மூன்றும் சரியாகக் கிடைக்காத நிலை உள்ளது. தமிழகத்திலோ, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வாய்த்த, குறைந்த அதிகாரம் கொண்ட-இரட்டை ஆட்சி முறையில் 1920ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தை ஆளும் வாய்ப்பு பெற்ற நீதிக்கட்சி இந்த மூன்று துறையிலும் தனித்துவமான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

Monday, 4 September 2017

கடன்பட்டு திணறிக்கொண்டிருக்கும் தொழிலாளர்கள் காப்பற்றப்படுவார்களா? தோட்டங்களில் இடை தரகர்கள் ..

“கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” அஞ்சா நெஞ்சமும் மலையையே அசைக்கும் உடல் வலிமையும் கொண்ட இராவணனின் மனம் கடன்பட்டவர் போல காயப்பட்டதை அறிந்துள்ளோம். கடன் என்பது வலிமையான மனிதனையும் வலுவிழக்க செய்யும் ஒன்று என்பதனை இதன் மூலம் புரிகிறது. கடன் வாங்குவதும் கொடுப்பதும் எல்லா சமூகத்திற்கும் பொதுவான ஓர் விடயமாக இருந்தாலும், மலையகத்தில் இன்று அன்றாட பசியை போக்குவதற்கும், ஜீவனோ பாயத்திற்கும் கடனுக்கு மேல் கடன் வாங்கும் நிலை உருவாகியுள்ளதை தாராளமாக காணலாம்.

கடன் பெற்று வாழ்வை வளமாக்கும் ஒரு தரப்பினர் இருக்க, இவர்கள் கடன் பெற்று தமது வாழ்வை அன்றாடம் கேள்விக் குறியாக்கி வருகின்றனர். தோட்டத்தொழில்களில் எதிர்பார்த்த ஊதியம் கிடைக்காத நிலையில், பெறும் சிறு தொகை சம்பளத்தையும் வாசலிலேயே கடன் கொடுத்தோர் பிடுங்கி செல்லும் நிலை தொடர்கிறது. சுமார் 2 வருடங்களாக தமது அன்றாட சாதாரண தேவைகளை பூர்த்தி செய்யக்கூட மாதச்சம்பளம் கிடைக்காமல் போனமையும், இதனை ஈடுசெய்ய வேறு வருமான வழிகள் இன்று காணப்படாமையுமே கடன் எனும் கடலுக்குள் இவர்கள் மூழ்க முக்கிய காரணமாய் அமைந்தது எனலாம்.

வடஇந்திய மாநிலங்களில் பரீட்சைகள் நேர்மையாக நடப்பதில்லை ...?

பொதுவாக வடஇந்திய மாநிலங்களில் பள்ளி இறுதித்தேர்வுகள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடப்பதில்லை.. காப்பியடிக்க உதவுவது ஒரு மாபியா போல.. பெற்றோர் ஆசிரியர் அரசியல்வாதிகள் அலுவலர்கள் அனைவரையும் உள்ளடக்கிய வலைப்பின்னல்.. எனவே இவர்களின் மதிப்பெண்கள் நம்பகமானவை அல்ல.. கடந்த ஆண்டு பீகாரில் மாநிலத்தின் முதல் மாணவர் காப்பியடித்து வெற்றி பெற்றது கண்டறியப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.. எனவே இவர்களில் திறன்வாய்ந்தவர்களை வடிகட்ட மத்திய அரசின் பொது நுழைவுத்தேர்வு ஒன்றை கொண்டுவருவது பற்றி இந்திய மருத்துவகவுன்சில் முடிவெடுக்கிறது.. காப்பியடிக்கும் மாபியாக்களை கட்டுப்படுத்த இயலாமல் இப்படியாவது நடக்கட்டும் என பல மாநிலங்கள் ஒப்புக்கொண்டன. காங்கிரஸ் அரசு அதில் தலையிட்டு விரும்பாத மாநிலங்கள் தங்கள் வழக்கமான சேர்க்கை முறைகளை பின்பற்றிக்கொள்ளலாம் என்கிற வாய்ப்பை உருவாக்கி சேர்த்தது.. அதனால்தான் காங்கிரஸ் ஆட்சி முடியும்வரை இதில் பிரச்சனையேயில்லை.. இவர்கள் எல்லா மாநிலங்கள் மீதும் திணிப்பதே பிரச்சனை..
- Muruganantham Ramasamy

மூன்றில் இரண்டு பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காது – ரணில்!

20ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் உத்தேச தேர்தல் முறை திருத்தத்தில் எந்த கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று ஆட்சிக்கு வருவது தடுக்கப்படும். இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருணாகல் மகுருஓய பிரதேசத்தில் புதிய பாடசாலை ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது- ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று தனக்கு தேவையான வகையில் செயற்படுவதை தடுப்பதே இதன் நோக்கம். தொகுதி மற்றும் விகிதாசாரம் ஆகிய இரண்டும் கொண்ட கலப்பு தேர்தல் முறையே நமக்கு தேவை. அப்படியான விகிதாசாரம் இருந்தால், எந்த கட்சியாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற முடியாது.< இந்த புதிய தேர்தல் முறையை மாகாண சபைகளுக்கு கொண்டு வரும் தேவை உள்ளது.< புதிய திருத்தச்சட்டம் மூலம் ஒரே தினத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்- என்றார்.  உதயன்

32 வருடங்களின் பின்னர் யாழில் மாட்டு சவாரி

-ரொமேஸ் மதுசங்க
பாம்பரிய கிராமிய விளையாட்டுகளில் ஒன்றான “மாட்டு சவாரி” போட்டி 32 வருடங்களின் பின்னர் யாழ். ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்றது.
ஊர்காவற்துறை - புதுவேலி மைதானத்தில் நேற்று (03) நடைபெற்ற இந்தப் போட்டியில், 32 மாடுகள் சவாரியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், அவை ஒவ்வொன்றும் சுமார் 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடையவை எனவும் அவற்றின் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் மிரர் 

தமிழக பாடத்திட்டம் இந்திய பாடத்திட்டத்தை விட சிறந்தது .. வரலாறு கூறுகிறது

அசைவ உணவைவிட சைவ உணவுதான் புனிதமானது.
8கோடி மக்கள் பேசும் தமிழைவிட, சில ஆயிரம் பார்ப்பனர்கள் அறிந்துவைத்திருக்கும் சமஸ்கிருதம்தான் புனிதமானது.
இந்த மண்ணின் மைந்தர்களான திராவிடர்களின் கறுப்பு நிறத்தைவிட, வந்தேறி ஆரியர்களின் சிவப்பு நிறம்தான் உயர்வானது.

எளிய மக்கள் வழிப்படும் மதுரைவீரன், மாடன், சுடலை முத்துமாரி போன்றவர்கள் சிறுதெய்வங்கள். பார்ப்பனர் கற்பித்த ராமன், கிருஷ்ணன் பிள்ளையார் போன்றவைதான் பெருதெய்வங்கள்!
காட்டிலிருந்த ஒரு முனிவரின் மனைவியை கற்பழித்த இந்திரனை தேவர்களின் தலைவன் என்பான். கவர்ந்துச் சென்ற சீதையை கற்போடு விட்ட ராவனனை அரக்கர்களின் தலைவன் என்பான். (அவன் எழுதிய கதைப்படியே!)
எங்கள் உணர்வோடு கலந்துவிட்ட பறை-இசை இழிவானது. கர்நாடக இசைதான் புனிதமானது.
எங்கள் பெண்களை தேவதாசிகளாக ஆக்கிவிட்டு, அவர்கள் ஆடிய சதிராட்டம் இழிவானது என்பான். அதே ஆட்டத்தின் பார்ப்பன வடிவமான 'பரத நாட்டியம்' புனிதமானது என்பான்.
பார்ப்பனர்கள் குவித்துவைத்திருந்த நிலங்களை கையகப்படுத்தி அதை உழைக்கிற மக்களுக்கு பிரித்தளித்த 'களப்பரர்களின் காலம் இருண்டகாலம்'. ஊரான் சொத்துக்களை எடுத்து பார்ப்பனர்களுக்கு காணிக்கை செய்த 'குப்தர்களின் காலம் பொற்காலம்'.

மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.. களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கே

நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு
மாவட்டங்ளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியேறுமாறும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில்அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.  வீரகேசரி

தேயிலைத் தோட்டங்களை முறையாக பராமரிக்காவிட்டார் தனியார்மயப்படுத்திவிடுவார்கள்!

மலயக குருவி : ளனிவெலி முகாமைத்துவப் பணிப்பாளர் ரொஷான் இராஜதுரை
செய்தி : டி. சந்ரு
தேயிலை தோட்டங்களை முறையாக பராமரிக்காவிட்டால் தனியார்மயபடுத்திவிடுவார்கள். நான் இருக்கும் வரையில் அவ்வாறான நிலை வருவதற்கு இடம் கொடுக்கமாட்டேன். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் தேயிலை செடிகளை நம்பி வாழும் தொழிலாளர்களின் நிலை என்னவாகும்? எனக் கூறுகிறார் களனிவெலி பெருந்தோட்ட முகாமைத்துவ பணிப்பாளர் ரொஷான் இராஜதுரை.
04.09.2017 அன்று ஹட்டன் பிரின்சஸ் விடுதியில் இடம்பெற்ற 2016ஃ2017 ம் ஆண்டுக்கான சிறந்த கொழுந்து பறித்தவர்கள், சிறந்த தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சமூகமளித்தவர், சிறந்த முறையில் சம்பளங்கள் பெற்றுக்கொண்டவர்.
களனிவெலி பெருந்தோட்டத்திற்கு சொந்தமான 16 தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்கள் 314 தொழிலாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டதோடு பல பரிசில்களும் வழங்கப்பட்டன.
இதன்போது மேலும் உரையாடிய ரொஷான் இராஜதுரை தேயிலை உற்பத்திக்கு முன்பதாக கோப்பி உற்பத்தி தான் மலையகத்தில் அதிகமாக காணப்பட்டது.

Sunday, 3 September 2017

லன்ச் சீட் , சொப்பிங் பை ,ரிஜிபோம் உணவு பொதியிடல் பெட்டி நாளை முதல் தடை

நாளை தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் லன்ச் சீட் , சொப்பிங் பை மற்றும் ரிஜிபோplasticம் உணவு பொதியிடல் பெட்டிகளின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பாவனை ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.    இந்த சட்டத்தை மீறுவோருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் மற்றும் இரண்டு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    பாவனைக்கு இலகுவாகவும் , மலிவாகவும ்கிடைக்கும் காரணத்தால் , அன்றாட வாழ்வில் பொலித்தீன் மற்றும் பிலாஸ்டிக் உற்பத்திகளை பயன்படுத்த அநேகமானோர் விரும்புகின்றனர். பொதுவாக நாளொன்றுக்கு ஒரு நபரால் 7 கிலோகிராம் பொலித்தீன் மற்றும் பிலாஸ்டிக் கழிவுப் பொருட்கள் அகற்றப்படுவதாக  மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.   அவற்றில் , லன்ச் சீட் மற்றும் சொப்பிங் பைகள் போன்ற உற்பத்திகளே பொதுமக்களிடம் இருந்து சூழலுக்கு அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நாட்டில் நாளொன்றுக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான லன்ச் சீட்டுக்கள் பாவனைக்கு உட்படுத்தப்படுகின்றன.    இவைகள் மக்கிப்போகாததால் சூழலுக்கு பாரியளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.

நீர் ஏன் இங்கு வந்தீர் என்று எவரும் கேட்க முடியாது நான் எவருக்கும் பயமில்லை : மட்டக்களப்பில் மனோ

வீரகேசரி  Vijithaa : தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சினால்
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடமாடும் சேவையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சர் மனோ கணேஷன் தலைமையில் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் மனோ கணேஷன் கருத்து தெரிவிக்கையில், " பெரியகல்லாறு வைத்தியசாலையை தரமுயர்த்தி தருவேன் என்றும், நான் சொன்னால் செய்வேன், நீர் ஏன் இங்கு வந்தீர் என்று எவரும் கேட்க முடியாது, நான் அமைச்சர், நான் எவருக்கும் பயமில்லை, இம்மாவட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன, அவற்றை தீர்த்து வைப்பேன், எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக செயற்பட உள்ளேன் . இப்பிரதேசத்தின் பல மக்கள் பிரதிநிதிகளுக்கு சிங்கள மொழி தெரியாது, ஆங்கிலம் தெரியாது, பாராளுமன்றத்தில் இனவாதம் பேசி காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள் " இந் நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், எஸ்.வியாழேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Mano Ganesan :இந்த ‘கள்ளத்தோணி பறத்தமிழ்’ அமைச்சனின் பொதுமக்கள் சந்திப்பு...!

இந்த ‘கள்ளத்தோணி பறத்தமிழ்’ அமைச்சனின் பொதுமக்கள் சந்திப்பு...!> இந்த நொடியில் என் மனதில்...01/09/17
கொழும்பு புறநகர் ஜயவர்தனபுர கோட்டே பகுதி. ஒரு பின்தங்கிய தோட்டம். பத்து ஏழை தமிழ் குடும்பங்கள். பெரும்பாலும் பெண்கள். அங்கே அவர்களுக்கு தண்ணீர் பெற ஒரு கிணறும், அதற்கு முன் ஒரு சிறு முற்றமும் உள்ளது.
ஒரு பெரும்பான்மை இனத்து மனிதன், அடாத்தாக தோட்டத்துக்குள் நுழைகிறான். முதல்நாள், முற்றத்தை ஆக்கிரமித்து, கூடாரம் கட்டி குடியேறுகிறான். இரண்டாம் நாள், கிணற்றையும், கொன்கிரீட்டால் மூடி, அந்த இடத்தையும் ஆக்கிரமிக்க முயல்கிறான்.
அந்த அப்பாவி பத்து தமிழ் குடும்ப பெண்கள் கோட்டே ஜயவர்தனபுர மாநகரசபை, பொலிஸ் என்று அதிகாரிகளின் பின்னால் இரண்டு வாரம் ஓடித்திருந்து களைத்து விட்டார்கள். வேறுவழியில்லாமல், அவர்களில் ஒரு சிலர், அந்த ஆக்கிரமிப்பு பெரும்பான்மை இனத்தவனிடம் கேள்வி கேட்ட போது, தூஷணமும் பேசி, “கள்ளத்தோணி, பறத்தமிழ் பெட்டை நாய்கள், மண்டைகளை உடைப்பேன். முடிந்தால் போ, போய் அந்த கள்ளத்தோணி பறத்தமிழ் அமைச்சனிடம் சொல்” என்று கல்லெறிந்து விரட்டுகிறான்.
ஆகவே, நேற்று வியாழக்கிழமை பொதுமக்கள் தினத்தன்று என்னை பார்க்க என் அமைச்சுக்கு அப்பெண்கள் பரிதாபமாக வந்து காத்து நின்றார்கள். விஷயத்தை புரிந்துக்கொண்டவுடன், கோட்டே ஜயவர்தனபுர மாநகரசபை ஆணையாளரையும், அப்பகுதி பொலிஸ் பொறுப்பதிகாரியையும் என் அமைச்சு அலுவலகத்துக்கு உடன் வரச்சொல்லி பணித்தேன். அரைமணியில் ஓடி வந்து விட்டார்கள்.

டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு 40 தாதியர்¸ 25 வைத்தியர்கள் நியமனம்!

மலையககுருவி : தாதியர் இன்றி ஸ்தம்பிதம் அடைந்திருந்த டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு 40 தாதியர்¸ 25 வைத்தியர்கள் நியமனம்!
மேலும் 150 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி
- கல்வி இராஜாங்க அமைச்சர வே.இராதாகிருஸ்ணனின் நடவடிக்கை
செய்தி : பா.திருஞானம்
அட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலை அன்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கபட்டு சகல வசதிகளும் கொண்ட ஒரு வைத்தியசாலையாக இயங்கி வருகின்ற போதும் தற்போது அதிதீவிர கிகிச்சை பிரிவு உட்பட பல பிரிவுகள் தாதியர் போதாமை காரணமாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
104 தாதியர்கள் தேவையான நிலையில் 60 தாதியர்களே காணப்படுகின்றனர். 44 தாதியர்களின் பற்றாக்குறை காணப்பட்டுகின்றது. இந்நிலையில் நிலமையினை வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி வைத்தியர் எஸ்.விஜேதுங்க கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தவைவருமான் வே.இராதாகிருஸ்ணனின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மலையக உள்ளுராட்சி மன்றங்களை மலையக இளைஞர்கள் கைப்பற்றவேண்டும்!

மலையக குருவி: மலையக உள்ளுராட்சி மன்றங்களை மலையக இளைஞர்கள் கைப்பற்றவேண்டும்! மலையக இளைஞனின் வேண்டுகோள்! எமது நாட்டின் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய தேர்தலான உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் வெகு விரைவில் இடம்பெற உள்ள நிலையில் மலையகத்தின் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் பெரும்பாலும் இளைஞர்கள் தலைமையேற்க முன்வர வேண்டும். புதிய தேர்தல் முறைக்கமைய தொகுதிவாரியானதும்,விகிதாசார ரீதியில் இடம்பெற உள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கடந்த காலத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களை விட அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டு அதிகளவான உறுப்பினர்கள் தெரிவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. எனவே இச்சந்தர்பபத்தினை பயன்படுத்திக்கொள்ள மலையக இளைஞர்,யுவதிகள் முன்வந்து செயற்பட்டு எதிர்கால மலையகத்தின் தலைமைகளாக உருவாக வேண்டும். கடந்த காலங்களிள் தம் சுயதேவைகளை பூர்த்திசெய்துக்கொள்ளவும்,தமது தொழில்களை பாதுகாத்துகொள்ளவும்,அரசியல் ஊடாக இலபம் தேடிக்கொள்ளவும் பலர் அரசியலில் கால்பதித்தனர்.அவ்வாறானவர்கள் உள்ளுராட்சி மன்றங்கள்,மாகாணசபை,பாராளுமன்றம் என சென்று மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளார்களா என்று நடதேடிபார்த்தால் பூச்சியம் தான்.

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...