Sunday, 3 September 2017

லன்ச் சீட் , சொப்பிங் பை ,ரிஜிபோம் உணவு பொதியிடல் பெட்டி நாளை முதல் தடை

நாளை தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் லன்ச் சீட் , சொப்பிங் பை மற்றும் ரிஜிபோplasticம் உணவு பொதியிடல் பெட்டிகளின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பாவனை ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.    இந்த சட்டத்தை மீறுவோருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் மற்றும் இரண்டு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    பாவனைக்கு இலகுவாகவும் , மலிவாகவும ்கிடைக்கும் காரணத்தால் , அன்றாட வாழ்வில் பொலித்தீன் மற்றும் பிலாஸ்டிக் உற்பத்திகளை பயன்படுத்த அநேகமானோர் விரும்புகின்றனர். பொதுவாக நாளொன்றுக்கு ஒரு நபரால் 7 கிலோகிராம் பொலித்தீன் மற்றும் பிலாஸ்டிக் கழிவுப் பொருட்கள் அகற்றப்படுவதாக  மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.   அவற்றில் , லன்ச் சீட் மற்றும் சொப்பிங் பைகள் போன்ற உற்பத்திகளே பொதுமக்களிடம் இருந்து சூழலுக்கு அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நாட்டில் நாளொன்றுக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான லன்ச் சீட்டுக்கள் பாவனைக்கு உட்படுத்தப்படுகின்றன.    இவைகள் மக்கிப்போகாததால் சூழலுக்கு பாரியளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...