Sunday, 29 October 2017

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாடசாலையின் பெண் அதிபர் பாடசாலையை விட்டு கர்ப்பமுற்றிருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் பாடசாலையை விட்டு விலத்தியுள்ளார்.இதனால் இதுவரை பிள்ளை பாடசாலை செல்லவில்லை. மனித உரிமை அணைக்குழு நாளையத்தினம் அவர்களை கொழும்புக்கு வருமாறு அழைத்துள்ளது ஆனால் இந்த ஏழைக்குடும்பத்துக்கு கொழும்பு செல்லவும் பணமில்லை கடன் வாங்கித்தான் ஆணைக்குழுவுக்கு செல்லவேண்டும். ஆணைக்குழு இவர்களின் நிலைமையைப்பாராது விசாராணைக்காக மட்டும் அழைத்துள்ளது நான் நேற்றைய தினம் ஆணையாளருடன் தொடர்புக்கொள்ள முனைந்தப்போதும் முடியவில்லை. 1940 ம் ஆண்டுக்குப்பின்னர் இந்தப்பிள்ளையின் தந்தை கொழும்புக்கே போனதில்லை பிள்ளையின் தாயார் வாழ்நாளிலே கொழும்பு போகவில்லை இவர்களால் நாலிவுற்ற இவ் ஏழைகளால் எப்படி கொழும்பை அடைவது இந்த மனிதஉரிமை அலுவலகத்தை தேடிக் கண்டுபிடிப்பது சாத்தியாமா??

இவ்விடத்தீல்தான் ஜோக்கர் படத்தின் சில வசனங்கள் ஞாபகத்துக்கு வருகின்றது.பாதிக்கப்பட்ட பிள்ளை இன்னும் பாடசாலை சேரவில்லை.வறுமையும் சமூகத்தின் சமத்துவற்ற நிலையுமே இந்த அதிபரின் செயற்பாட்டுக்குக் காரணம் பெண் என்பவள் தாய்தானே இந்த அதிபர் ஒரு பெண் .வயதில் சிந்தனையில் முதிர்ச்சி அடைந்த இவர் வாந்தி எடுப்பது கர்ப்பத்துக்குத்தானே என்ற அடிநிலை சிந்தையுடன் இருந்துள்ளார்.மாணவியின் குடும்பம் பல அசெளகரியத்தை சந்திக்கிறது இவர்களுக்கு குடிநீர் வசதி இல்லை அடுத்த வீட்டில்தான் கிணற்றில் தண்ணீர் எடுக்கிறார்கள் குளிக்க 1 Kmநடந்துப்போகவேண்டும் .வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டு வறுமைக்கோட்டை முகத்தீலே சுமக்கிறார்கள் வயதுப்போன பெற்றோர் அன்றன்று கூலி வேலைக்குப்போகிறார்கள் சரீயாக முடித்துக்கொடுக்காத அரைகுறை சமூர்த்தி வீட்டீலே வசிக்கிறார்கள். அதிபரின் செயலால் பிள்ளையின் கற்றலும் மிகவும் ஏழ்மையானக் குடும்பமும் மன உளைச்சலை சந்தித்துள்ளனர்.இது தொடர்பில் உயர்மட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள் அதிபருக்கு எதீராக வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
"புத்தர் சொன்னது போல் தனக்கு வரும்வரைத்தான் எல்லாம் வேடிக்கை "என்றாகிவிட்டது.அதிகாரம் படைத்த வசதிப்படைத்த சமூகத்தில் இந்த அதிபர் ஒரூ பிள்ளைக்கு எதிராக உடனடியாக இப்படியொரு முடிவை எடூத்து அதன் பின் விளைவு தெரியாது பாடசலையை விட்டு நீக்குவாரா?இதை தனது மகளாக இருப்பின் செய்வாரா??
பிள்ளைக்கு கல்வி தொடர்ந்து கிட்டவேண்டும் அவர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும்
நிச்சயம் அவை நடக்கும்!!
ஒரு முள் கூட காலில் குத்தி தான் முள் இருக்கிறேன் என்பதை சொல்ல முனைகிறது நாம் அதை விட சொல்ல முனைய வேண்டும்!!
இவ் வீட்டிற்க்கு எம்மை சேர்த்த Kanchana Kumaraபத்திரிகையாளருக்கும் மிகவும நலிவுற்றவர்களின் துன்பத்தை இனம்கண்டமைக்கும் தொடர்ந்து வேலை செய்தமைக்கும்நன்றிகளும் வாழ்த்துக்களும்சேரட்டும்!!

1 comment:

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...