Thavamudhalvan Davan :
காந்திகிராம பல்கலைக்கழகம்
ஆஸ்திரேலியா தமிழ்
சங்கம்
மலையக எழுத்தாளர் மன்றம்
ஆகியவை இணைந்து மிகவும் பொருத்தமான வேளையில் நடத்திய "இலங்கை மலையகத்தமிழ் இலக்கியமும் கலைபண்பாட்டு வடிவங்களும் " - பன்னாட்டு் கருத்தரங்க
நிகழ்வு மிகவும் மகிழ்வான நிகழ்வுகளிலொன்று! ஆயிரத்து எண்ணூற்று பதினைந்து ஆண்டுகளில் தொடங்கிய மலையகத்தமிழர் புலம்பெயர்வின் இருநூறு ஆண்டுகளைக் கடக்கும் நடப்பாண்டுகளில் இந்த நிகழ்வு வளமானதாகவும், உழைக்கும் மக்களுக்கு நெருக்கமானதாகவும், பாசாங்குகளற்ற மக்கள் இலக்கியமாக திகழும் மலையக இலக்கியத்தின் செழுமைகளைப் பேசவும் , இனியும் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்தும் பரிசீலிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த நிகழ்வை ஒழுங்கு செய்த அனைவருக்கும் நாம் நன்றிசொல்ல கடமை பட்டுள்ளோம்
முடிந்தவரை நிகழ்வுகளை எல்லோருக்கும் பயனுள்ளதாக்க படங்களாக, ஒளிப்படங்களாக, ஒலிக்குரலாக பதிவு செய்திருக்கிறேன்.ஒவ்வொன்றாக பதிவிடுகிறேன்.
மகிழ்ச்சி அன்பின் உறவுகளே!


No comments:
Post a Comment