Thursday, 24 August 2017

3 Talaq / தலாக்.... ஷயரா பானு போல் ஹிந்து / கிருஸ்தவ பெண்களும் அடிப்படை சுதந்திரத்திற்காக இனி போராடவேண்டும்

Shalin Mariya Lawrence : தலாக் ...தலாக்...தலாக் ....
இந்த முத்தலாக் என்கிற விஷயம் பற்றி எனக்கு முதலில் அறிமுகம் ஆனது 8 வருடத்திற்கு முன்னாள் .அதை அறிமுகப்படுத்தியவர் பெனாசீர் என்கிற ஒரு இஸ்லாமிய பெண் .அவருக்கு அப்பொழுது வயது 27 . அதற்கு மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் ஆகி ஒரே வாரத்தில் துபாய் போன கணவர் போனில் முத்தலாக் செய்து பாதிக்கப்பட்டவர் அவர்.
சிரித்து பேசி கலகலவென்று இருந்தாலும் தனிமையில் சோகம் சூழ்ந்தே இருக்கும் அவரின் முகத்தில் .ஆண்களையும் கொஞ்சம் வெறுக்கவே செய்தார் பாதிப்பு அப்படி .
இதற்கு பின்பு முத்தலாக் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.அதிர்ச்சியாக இருந்தது .
இதில் முக்கிய விஷயங்கள் மூன்று
1. இந்த முத்தலாக் முறை பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் இல்லை .
2. மதத்தின் பேரில் உண்டான பாகிஸ்தான் என்கிற நாடே இந்த முத்தலாக் முறையை 1961இல் முடிவுக்கு கொண்டுவந்தது .
3. குரானை பொறுத்தவரை முத்தலாக் பாவ செயல் இருந்தும் இந்த முறையை பெரும்பாலான இஸ்லாமியர்கள் பின்பற்றி வருகிறார்கள் .
இதில் இருந்து தெரியவருவது 'முத்தலாக் ' இஸ்லாமிய பெண்களுக்கெதிரான மிக பெரிய அநியாயம் .
நேற்று இந்த முத்தலாக் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மிக மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை அளித்திருக்கிறது அந்த தீர்ப்பு இந்த இந்திய ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது .
நிற்க ....
இந்த இடத்தில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய ஒரு விஷயம் .
தீர்ப்பு வெளியானதிலிருந்து சமூக வலைத்தளங்களிக்கும் போது வெளியிலும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் .அதில் பெரும்பாலானோர் இது இஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜகவின் சதி எனவும் , பாஜகவை திட்டுகிறேன் என்கிற பேரில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க பெண் அடக்குமுறைக்கு எதிரான ஒரு முக்கிய தீர்ப்பை பாராட்டாமல் ஒதுக்கி வைத்திருக்கின்றனர் .

உங்களுக்கான தேர்வுகளும், வாழ்க்கையும் ஏராளம். அதை நீங்கள் மட்டுமே முடிவு செய்யுங்கள்

donashok: இது நம்மூர் பெண்கள் எல்லோரும், ஆண்கள் சிலரும் அனுபவிக்கும் கலாச்சார மன அழுத்தம். நம் நாட்டில் பொதுவாகவே தனிமனித சுதந்திரத்திற்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கும் வழக்கம் என்பது முற்றிலும் கிடையாது. இந்தக் கேள்விக்கான பதிலை மிகவும் விரிவாகத்தான் எழுத முடியும். ஆனால் அது முகநூலில் முடியாது என்பதால், நான் சொல்லப்போகும் பல விஷயங்களில் பொதுச்சமூகத்தின் குரலாக இருக்கும் பலருக்கு உடன்பாடு இருக்காது என்றாலும் கூட, உங்கள் சூழலை மட்டும் மனதில் வைத்து சுருக்கமாக சில விஷயங்களைச் சொல்கிறேன். 1) கல்யாணம் என்பது 25 வயசாகிவிட்டது, 27 வயதாகிவிட்டதே என வயது என செய்வதல்ல. அப்படிச் செய்யவேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை. ஒரு துணையின்றி நம்மால் வாழவே முடியாது என்றாலோ, அல்லது இந்த துணைதான் நம்முடன் வாழவேண்டும் என்ற முடிவை மனம் சொன்னாலே மட்டுமே செய்யப்பட வேண்டியதுதான் திருமணம். முதலில் இதில் உறுதியாக இருங்கள். 2) பெற்று வளர்த்துவிட்டதாலே “உனக்கு நான் தான் உயிர் கொடுத்தேன். உனக்கு நன்றியே இல்லை. உனக்கு எல்லாமே பார்த்து, பார்த்து செஞ்ச எங்களுக்கு தெரியாதா உனக்கு என்ன செய்யணும்னு,” என்றெல்லாம் பேசும் பெற்றோர்கள் நிறைந்த நாடு இது. அதாவது குழந்தைகளிடம் அன்பைவிட விசுவாசத்தை எதிர்பார்க்கும் அறிவுகெட்டச் சமூகம். இதையெல்லாம் சொல்லிச் சொல்லி நம் மனதில் குற்ற உணர்ச்சியை விதைக்கப் பார்ப்பார்கள். நம் வாழ்க்கையின் முடிவுகளை எடுக்கும் ‘கமாண்டர்களாக’ இருப்பதில் அவர்களுக்கு ஒரு வீண்பெருமை. இதிலெல்லாம் துளியும் நியாயம் இல்லை. காமம் என்பது வலி நிறைந்த அனுபவமாக இருந்தால் இங்கே யாருமே அதில் ஈடுபடமாட்டார்கள். “குழந்தை பெற்றால்தான் நீ முழுமையான பெண் ஆகிறாய். குழந்தை பெற்றால்தான் நீ ஆண்மகன். குழந்தைதான் உன் சமூக அந்தஸ்தை நிர்மாணிக்கிறது,” என்றெல்லாம் இங்கே சமூகம் சொல்லவில்லையென்றால் பாதிபேர் குழந்தையே பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஆணாக மாறிய பெண்ணும் ... பெண்ணாக மாறிய ஆணும் தம்பதிகள் ஆயினர்

10884-2-7115af7a749cc30793aea8e0090141b4 பெண்ணாக மாறியவரும், ஆணாக மாறியவரும் இணைந்த தருணம்! சுவாரசியமான காதல் கதை..!! பெண்ணாக மாறியவரும், ஆணாக மாறியவரும் இணைந்த தருணம்! சுவாரசியமான காதல் கதை..!! 10884 2 7115af7a749cc30793aea8e0090141b4நாட்டில் LGBTQ (The Lesbian, Gay, Bisexual, Transgender, and Queer) சமுதாயத்தினரின் உரிமைகள் மறுக்கப்படுவதால், அவர்கள் சந்திக்கும் பாலின வேறுபாடுகளால் பல்வேறு போராட்டங்களை சந்தித்து வருகின்றனர்.< தங்களுடைய சொந்த உடல் அமைப்புகளால் மனரீதியாக பாதிக்கப்படும் அவர்களை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதால், அவர்களின் வாழ்க்கை இன்னும் கடினமாகிறது. திருநங்கைகளாக தாங்கள் அடையாளம் காணப்பட்டாலும் அதனை மறந்து சாதாரண வாழ்க்கை வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அப்படி ஒரு காதல் ஜோடி தான் ஆரவ்- சுகன்யா. கேரளாவில் பிந்து என்ற பெண்ணாக பிறந்துள்ளார் ஆரவ் அப்புகுட்டன். இவருக்கு 13 வயது இருக்கும்போது இவரது நீண்ட முடி மற்றும் வகுப்பறையில் சக பெண்களுடன் அமர்வதற்கு சங்கடப்பட்டுள்ளார். மேலும், தனது உடல் அமைப்பை பற்றி வெட்கப்பட்டுள்ளார். தான் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, பிற பெண்களை பார்க்கையில் ஈர்ப்பு ஏற்பட்டதால் இதுகுறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். அப்போது, பிந்துவை மருத்துவரிடம் அழைத்து சென்றபோது, அவர் பருவமடைந்த காலத்தில் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற காரணங்களால் இது நடக்கக்கூடும். எனவே, நாட்கள் செல்ல இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டால் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு செய்துகொள்ளலாம் என மருத்துவர் கூறியுள்ளார்.<

சட்டவிரோத பீடி அட்டன் பகுதியில் பிடிபட்டது

சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டதென சந்தேகிக்கப்படும் ஒருதொகை பீடியுடன் ஒருவர் கைது!
- க.கிஷாந்தன்
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டதென சந்தேகிக்கப்படும் ஒருதொகை பீடியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பீடிகளை கண்டி மாவனெல்ல பகுதியிலிருந்து கொண்டு வந்து அட்டன் நகர பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்யும் பொழுது, அட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய பகுதியில் அட்டன் பிரதான வீதியில் வைத்து கிடைத்த இரகசிய தகவலையடுத்து அட்டன் பொலிஸ் நிலைய உதவிபொலிஸ் பரிசோதகர் எம்.பிரதீப் தலைமையில் சாஜன் மகேஷ்வரன், ரதீஷன் ஆகியோர் கொண்ட குழு இவ்வாறு 23.08.2017 அன்று இரவு 7 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

மலையக இளைஞர்களை இழிவுபடுத்திய சக்தி தொலைக்காட்சி

உழைப்பால் உயர்ந்தவர்கள் மலையகத் தமிழர்!
மலையக இளைஞர்களை இழிவுபடுத்திய சக்தி தொலைக்காட்சி செய்தி குறித்து 
மலைய இளைஞனின் பகிரங்க மடல்!
சக்தி தொலைக்காட்சியில இன்று 23.08.2017 இரவு ஒளிபரப்பான பிரதான செய்திகளில் மலையக இளைஞர்கள் குறித்து சித்தரிக்கப்பட்ட செய்தியொன்று குறித்து மலையக இளைஞனின் பகிரங்க மடலாக இதனைப் பதிவிடுகிறோம்.
எமது சமூகத்தை யார் வேண்டுமானாலும் கீழ்த்தரமாகவும், ஏலனமாகவும் பேசலாம் என்ற நிலை வந்துவிட்டது. அரசியலுக்காக தேவையற்றவிதத்தில் விமர்சிப்பதை நாம் வன்மையாக கண்டிப்போம்.
சக்தி தொலைக்காட்சி 23.08.2017 வெளியிட்ட செய்தி, எமது சமூகத்தை கேவலமாக சித்தரிக்க முயற்சிக்கிறது.
மலையக இளைஞர்கள் தலைநகரில் தரம் தாழ்ந்த தொழிலில்களில் ஈடுபடுவதைப் போல் சித்தரிக்க அந்த தொலைக்காட்சி முயற்சிக்கிறது. ஏன் இப்படி எமது இனத்தை மட்டும் அவமானப்படுத்துகிறது?
கூலியாக இருந்த எத்தனையோ பேர் இன்று கொழும்பு தலைநகரில் பெரும் வர்த்தகர்களாக இருக்கிறார்கள். எமது சமுகத்தில் இருந்து, கற்று, உயர்ந்து, உலகின் பல நாடுகளிலும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இலங்கையிலும் பல முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள்.

விவேகம் ... படவிமர்சனம் ..சாருநிவேதா

Wednesday, 23 August 2017

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகள் ஐந்து (05), பன்னிரெண்டு (12) ஆகிறது.

mano.ganesan. முப்பது வருட அநீதியை, தமிழ் முற்போக்கு கூட்டணி, இன்று துடைத்து எறிகிறது> இந்த நொடியில் என் மனதில்…
வடகிழக்குக்கு வெளியே தமிழர் அதிகம் வாழும் ஐந்து (05), பன்னிரெண்டு (12) ஆகிறது.உள்ளன. இந்த தொகை முதற்கட்டமாக பன்னிரெண்டு (12) பிரதேச சபைகளாக உயர்த்தப்பட வேண்டும் என்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் அழுத்த கோரிக்கை இன்று நிறைவேறுகிறது.
இன்றுள்ள அம்பகமுவை பிரதேச சபை, நோர்வுட், மஸ்கெலியா, அம்பகமுவை என்ற மூன்று சபைகளாகவும், இன்றுள்ள நுவரெலியா பிரதேச சபை, தலவாக்கலை, அக்கரைபத்தனை, நுவரெலியா என்ற மூன்று சபைகளாகவும், இன்றுள்ள வலப்பனை பிரதேச சபை, நில்தாயின்னை, வலப்பனை என்ற இரண்டு சபைகளாகவும், இன்றுள்ள கொத்மலை பிரதேச சபை, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு என்ற இரண்டு சபைகளாகவும், இன்றுள்ள ஹங்குரன்கத்தை பிரதேச சபை, மதுரட்டை, ஹங்குரன்கத்தை என்ற இரண்டு சபைகளாகவும் மாறுகின்றன.< அதாவது, ஐந்து (05), பன்னிரெண்டு (12) ஆகிறது.
1987ம் வருடம் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட 13ம் திருத்தம் மூலமாக பிரதேச சபைகள் அமைக்கப்பட்டன. பிரதேச சபை என்பதுதான், அதிகாரப்பரவலாக்கலின் அடிப்படை அலகு. அவற்றை அவ்வந்த பிரதேச மக்கள் தம் சொந்த வாக்குகளால் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் மூலமாக நிர்வகிக்கும் அரசியல் அதிகார பகிர்வை பெறுகின்றார்கள்.
பிரதேச சபைகள் மூலமாகவே, அரசாங்கத்தின் நிதி வளங்கள், அபிவிருத்தி திட்டங்கள், சமோக நலத்திட்டங்கள் ஆகியன மக்களை, குறிப்பாக பின்தங்கிய கிராமிய பிரதேசங்களை சென்று அடைகின்றன.

சாத்தான் சிவத்தின் (சோக) கதை - இதையும் முழுமையாக படியுங்கள்!

Malayaga Kuruvi‎மலையக குருவி
அம்மாவே ''சாத்தான் '' என திட்டிய சிவத்தின் தாய்!
ஜெர்மனி நாட்டு ஜனநாயக சட்டத்தில் கருத்து சுதந்திரம் பெரிதும் மதிக்கப்படும். அங்கு ஐஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் பற்றி கூட பொது இடங்களில் பேசக்கூடிய அனுமதியுண்டு. பேசுபவர்களும் உண்டு. இந்த சட்டம் சிவத்திற்கு நன்று பரிச்சயம். எனவே, தான் முகநூலில் இனவாதம் பேசியதற்கு தன்னை கைதுசெய்ய முடியாது என்று அவர் நன்கு அறிந்துவைத்திருந்தார். இலங்கையில் தனக்கெதிராக முன்னெடுத்த முயற்சிகளையும் முறைப்பாடுகளையும் பார்த்து அவர் சிரித்தார். இதை அறிந்த நாம், இவரை மடக்க மூன்று முனைகளில் முனைந்தோம்.
1) இவரின் வேலை இடத்தில் முறையிடுவது. (ஜேர்மன் கம்பனிகள் தங்கள் பெயரில் ஒரு இனவாதி இருப்பதை விரும்ப மாட்டார்கள். அப்படி பேசுபவர்களை வேலையில் இருந்து விலக்கும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு.)
2) இவரின் குடும்பத்தை தொடர்பு கொள்வது
3) Facebook நிறுவனத்திடம் முறையிடுவது .
இதில் முதலில் உங்கள் எல்லோரின் உதவியுடனும் அவர் வேலை செய்ததாக சொன்ன விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டதில் அவர் அங்கு நேரடியாக வேலை செய்யவில்லை என தெரிந்து கொண்டோம். இருந்தாலும் விமான நிலையம் Facebook நிறுவனத்திற்கு முறைப்பாடு செய்தது. தங்கள் பெயரை அவதூறாக முகநூலில் பாவித்தமைக்கு சிவத்தை போலீஸிடமும் முறையிட்டது. இது முதல் வெற்றி. பின்னர் அவர் உண்மையாக வேலை செய்த Airbus நிறுவனதிடம் முறையிட்டோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக பதில் வந்தது. இரண்டவது வெற்றி.
நீங்கள் எல்லோரும் Facebook இடம் முறையிட்டதுடன், Airbus நிறுவனமும், விமான நிலையமும் முறையிட்டதை தொடர்ந்து, Facebook இவரை முடக்கியது. என்றாலும் இரண்டே நாட்களில் இன்னொரு ID திறந்து அவர் முகப்புத்தகம் வந்தது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அதை அறிந்து Facebook நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பர் மூலம் மீண்டும் முறையிட்டோம். அவர் அமெரிக்கர். அவர் சிவத்தின் IP address முதல் கொண்டு , அவரின் கம்ப்யூட்டரில் இருந்து Facebook பக்கமே வர விடாத வகையில் சிவத்தை தடை செய்தார். சிவம் வெலவெலத்து போனார்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற எண்ணிக்கை அதிகரிப்பு ,,,

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற எண்ணிக்கையை கூட்டுவதற்கான போராட்டம் வெற்றி என்கிறார் அமைச்சர் மனோ!
வெற்றி என்ற செய்திக்கு சபாஷ் சொல்லும் அதேவேளை, இது நடைமுறையில் வரும்வரை விழிப்பாக இருப்போம்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற எண்ணிக்கையை கூட்டுவதற்கான தமிழ் முற்போக்கு கூட்டணியின் போராட்டம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் அறிவித்துள்ளார்.
உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் அவரது அமைச்சில் இன்று (23) பிற்பகல் நடத்திய சந்திப்பின் போது இதற்கான உடன்பாடு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை நாடு திரும்பிய தன்னிடம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையை ஏற்று பிரதேச சபைகளின் எண்ணிக்கையை கூட்டும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அறிவுறுத்தியதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தன்னிடம் தெரிவித்ததாகவும் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பான விபரக்கோப்பை அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளித்துள்ளதாகவும் அவர் 

Tuesday, 22 August 2017

திட்டத்தின் பெயர் "சியவெர" இனி "சுயசக்தி" என்று அழைக்கப்படும்

Mano Ganesan : · இன்று பகல், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது சபையில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதி; நாடு முழுக்க இருக்கக் கூடிய எல்லா பெயர்ப் பலகைகளும் மூன்று மொழிகளிலும் தெளிவாக, எழுத்து பிழையியில்லாமல் இருக்க வேண்டும். சிங்களத்திலே பெரிதாக எழுதிவிட்டு, தமிழிலே சிறிதாக எழுத முடியாது. அப்படி எழுதப்படுமானால் தமிழர்களுக்கு மாத்திரம் நான் கண்ணாடி கொடுக்க வேண்டி வரும். அப்படி வழங்க முடியாது. அதற்கான சந்தர்ப்பம் கிடையாது நாடு முழுக்க சிங்களமும், தமிழும் சமமான ஆட்சி மொழிகள். ஆகவே அரசாங்க பெயர் பலகைகள் எழுதும் போது, வடக்கு, கிழக்கில் தமிழ், சிங்களம்,ஆங்கிலம் என்ற வரிசை பேணப்பட வேண்டும். ஏனைய மாகாணங்களில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்ற வரிசை பேணப்பட வேண்டும்.

அதேபோல், அரசாங்க திட்டங்களுக்கு, சிங்கள மொழியில் பெயர்களை வைத்து விட்டு, அது புரிந்தாலும் புரியாவிட்டாலும் கூட அப்படியே தமிழ் மொழியில் உச்சரிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அது சட்ட விரோதமானது, பிழையானது. இன்று காலை பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகாவின் ஒரு திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்து இருந்தது. அந்த திட்டத்தின் பெயர் "சியவெர" என்பதாகும்.

Monday, 21 August 2017

திகாம்பரம் : இனி வாக்கு கேட்டு வரமாட்டேன்

இனி வாக்கு கேட்டு வரமாட்டேன் என்கிறார் திகாம்பரம்! - Yoganathan Yoga Jeganathan எதிர்வரும் காலங்களில் வாக்கு கேட்டு மக்களிடத்தில் வரப்போவதில்லையென அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார். மாறாக தான் செய்யும் சேவையை பார்த்து நீங்களாகவே வாக்களியுங்கள் எனவும் அவர் கூறியுள்ளார். மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் அக்கரபத்தனை மொன்ராசி வைத்தியசாலைக்கு செல்லும் பாதைக்கான ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்து வைத்து உறையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் திகாம்பரம், தோட்டப்புற மக்களுக்கு எப்போதும் இல்லாதவாறு நல்லாட்சி அரசாங்கத்தால் பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்காக பாரியளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எமது மக்களின் பிரச்சினைகள் அறியப்பட்டு 2020 ஆண்டளவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்யக்கூடியதாக இருக்கும். எனவே எம்மைப் பலப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு மக்களாகிய உங்களின் பொறுப்பு. இனி நான் வாக்கு கேட்டு வரமாட்டேன். மாறாக நாம் செய்யும் சேவையை பார்த்து நீங்களாகவே வாக்களியுங்கள் என்று கூறினார்.<

ஜனாதிபதியின் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இருந்து மனோ கணேசன் வெளியேறினார்

mano.ganesan.  : சற்றுமுன் இரவு 9.30 மணிக்கு ஆரம்பித்து ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இருந்து இடைநடுவில் வெளியேறினேன் உள்ளூராட்சி சபை தேர்தல்கள், மாகாணசபை தேர்தல்கள், அரசியலைமைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில், உள்ளூராட்சி சபை தேர்தல் பற்றி பேசும்போது, தேர்தலுக்கு முன் புதிய உள்ளூராட்சி சபைகள் அமைக்க முடியாது என்ற பிரதமர் ரணில் கூறினார். நாடு முழுக்க புதிய சபைகள் அமைக்க வேண்டி கோரிக்கைகள் வந்துள்ளதால், அதை இப்போது செய்ய முடியாது என அவர் காரணம் கூறினார்.
 “நாட்டின் ஏனைய இடங்களில் புதிய சபைகளை பிறகு உருவாக்கலாம். ஆனால், நுவரெலியா மாவட்டத்துக்கு விசேட கரிசனை வேண்டும். அங்கே ஒவ்வொன்றும் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் இரண்டு சபைகள் இப்போது உள்ளன. ஒன்று, நுவரேலிய பிரதேச சபை, அடுத்து, அம்பகமுவ பிரதேச சபை. நாட்டின் ஏனைய இடங்களில் பத்தாயிரம் பேருக்கு ஒரு பிரதேச சபை இருக்கும் போது, நுவரேலியா மாவட்டத்தில், மட்டும் இப்படி இரண்டு இலட்சம் பேருக்கு ஒரு சபை என்ற கணக்கில் நான்கு இலட்சம் பேருக்கு இரண்டு சபைகள் இருப்பது மாபெரும் அநீதி.

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...