Shalin Mariya Lawrence : தலாக் ...தலாக்...தலாக் ....
இந்த முத்தலாக் என்கிற விஷயம் பற்றி எனக்கு முதலில் அறிமுகம் ஆனது 8 வருடத்திற்கு முன்னாள் .அதை அறிமுகப்படுத்தியவர் பெனாசீர் என்கிற ஒரு இஸ்லாமிய பெண் .அவருக்கு அப்பொழுது வயது 27 . அதற்கு மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் ஆகி ஒரே வாரத்தில் துபாய் போன கணவர் போனில் முத்தலாக் செய்து பாதிக்கப்பட்டவர் அவர்.
சிரித்து பேசி கலகலவென்று இருந்தாலும் தனிமையில் சோகம் சூழ்ந்தே இருக்கும் அவரின் முகத்தில் .ஆண்களையும் கொஞ்சம் வெறுக்கவே செய்தார் பாதிப்பு அப்படி .
சிரித்து பேசி கலகலவென்று இருந்தாலும் தனிமையில் சோகம் சூழ்ந்தே இருக்கும் அவரின் முகத்தில் .ஆண்களையும் கொஞ்சம் வெறுக்கவே செய்தார் பாதிப்பு அப்படி .
இதற்கு பின்பு முத்தலாக் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.அதிர்ச்சியாக இருந்தது .
இதில் முக்கிய விஷயங்கள் மூன்று
1. இந்த முத்தலாக் முறை பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் இல்லை .
2. மதத்தின் பேரில் உண்டான பாகிஸ்தான் என்கிற நாடே இந்த முத்தலாக் முறையை 1961இல் முடிவுக்கு கொண்டுவந்தது .
3. குரானை பொறுத்தவரை முத்தலாக் பாவ செயல் இருந்தும் இந்த முறையை பெரும்பாலான இஸ்லாமியர்கள் பின்பற்றி வருகிறார்கள் .
இதில் இருந்து தெரியவருவது 'முத்தலாக் ' இஸ்லாமிய பெண்களுக்கெதிரான மிக பெரிய அநியாயம் .
நேற்று இந்த முத்தலாக் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மிக மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை அளித்திருக்கிறது அந்த தீர்ப்பு இந்த இந்திய ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது .
நிற்க ....
இந்த இடத்தில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய ஒரு விஷயம் .
தீர்ப்பு வெளியானதிலிருந்து சமூக வலைத்தளங்களிக்கும் போது வெளியிலும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் .அதில் பெரும்பாலானோர் இது இஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜகவின் சதி எனவும் , பாஜகவை திட்டுகிறேன் என்கிற பேரில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க பெண் அடக்குமுறைக்கு எதிரான ஒரு முக்கிய தீர்ப்பை பாராட்டாமல் ஒதுக்கி வைத்திருக்கின்றனர் .