தமது தொழிற்சங்கத்தில் அங்கத்தவராக சோ;ந்தால் மாத்திரமே வீடமைப்பு திட்டத்தில் பெயர் சேர்த்துக் கொள்ளப்படுமெனக் கூறி அதிகார துஸ்பிரயோகம் செய்யப்படுகிறது.
பல தோட்டங்களில் ஒரு குறிப்பிட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அத்துடன் ஏற்கனவே வீடமைப்பு திட்டங்களின் மூலம் வீடுகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு தமது தொழிற்சங்க அங்கத்தவர் என்ற தகுதியை மாத்திரம் கருத்திற்கொண்டு வீட்டிற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
பல தோட்டங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகள் எவ்வளவு காலத்திற்கு தாக்குப்பிடிக்கும் என்பது பெருத்த கேள்விக்குறியாக இருக்கிறது. கட்டி முடிக்க முன்னரே அடித்தளம், சுவர்களில் பாரிய வெடிப்புக்கள் காணப்படுகின்றன. இந்த நிலையை இல்லை என்று எவராவது மறுப்பார்களானால் அவர்களை என்னோடு அழைத்து சென்று உண்மை நிலைமையை காட்டுவதற்கு முடியும்.
இந்த வீடமைப்பு திட்டத்திற்கு ஒரு பகுதி நிதி தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியை பிணையாக வைத்து வட்டிக்கு வழங்கப்பட்ட கடன் மூலம் பயன்படுத்தப்படுகிறது. அதனால் தரமற்ற வீடுகளை வழங்கி தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்ற இடமளிக்க முடியாது.
இந்த உண்மைகளை வெளியிடுகின்ற போது சிலர் காட்புணர்ச்சி செல்லுவதாக தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டரை வருடகாலமாக நாம் தேவையான அவகாசத்தை வழங்கி வேலைத்திட்டங்களை அவதானித்துக் கொண்டிருந்தோம்.
ஆனால் மலையக மக்கள் அப்பட்டமாக ஏமாற்றப்படுவதை அறிந்தும் அமைதியாக இருக்க முடியுமா? வீடமைப்பு திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகின்ற கட்டடப்பொருட்கள் அரச தர கட்டுப்பாட்டு பணியகத்தினால் அங்கீகரிக்கப்படனவா?
தரமற்ற கட்டடப்பொருட்கள் மூலம் நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளினால் எதிர்காலத்தில் பாதிக்கப்படப் போவது அதில் குடியிருக்கப்போகின்ற தோட்டத்தொழிலாளர்களே. இந்த நிலையில் உண்மையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது எமது கடமையாகும் எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment