Saturday, 5 August 2017

அவுஸ்ரேலியாலில் இருந்து 13 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

அவுஸ்ரேலியாவிலிருந்து 13 இலங்கையர்கள் விசேட விமானமூலம் நாடுகடத்தப்பட்டனர். இவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக விமான நிலைய பொலிசார் தெரிவித்தனர். குறித்த 13 பேரும் நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் கடந்த 2012ம் ஆண்டு இலங்கையில் நீர்கொழும்பு , சிலாபம் போன்ற கடல் பகுதிகளில் இருந்தும் மற்றும் விமானமூலம் இந்தியாவிற்குச் சென்று அங்கிருந்தும் படகுமூலம் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் சென்றுள்ளனர். இவர்களை அவுஸ்ரேலியா பொலிசார் தடுப்பு முகாமில் தடுத்துவைத்துள்ள நிலையில் விசேட விமான மூலம் இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதா பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. தினக்குரல்

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...