Sunday, 30 July 2017

அமைச்சர் மனோ கணேசன்: இவர் ஒரு மனநோயாளி! உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!

பொறுத்திருங்கள்!!! அமைச்சர் மனோ கணேசன் மலையக சமூகத்தை மிகக் கீழ்த்தரமாக பேசி முகநூலில் பதிவிட்டுள்ள கச்சா சிவம் என்ற நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் பதிவிட்டுள்ளார். கச்சா சிவம் என்ற நபர் பதிவிட்டுள்ள காணொளி குறித்து நண்பர் ஒருவர் முகநூலில் எழுப்பிய கேள்விக்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார். அமைச்சரின் முகநூல் பதிவு பின்வருமாறு : //இவர் ஒரு தனிமனித மனநோயாளி. இவர் எந்த ஒரு சமூகத்தையும், இனத்தையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. இவரது கருத்து பொது வெளியில் வெளியாகியுள்ளதுதான் இங்கு பிரச்சினை. இது தவறான முன்னுதாரணத்தை தந்துவிடலாம். அது இன்னும் பலசில மனநோயாளிகளை உருவாக்கிவிடலாம். இவர் மீது முகநூல் சார்ந்த மற்றும் இவர் வாழும் நாடு சார்ந்த சட்ட நடவடிக்கை எடுக்கலாம். அத்தகைய உரிய நடவடிக்கை இவர் மீது எடுக்கப்படும். பொறுத்திருங்கள்.//

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...