Saturday, 5 August 2017

நுவரெலியா கடும் பனிமூட்டம் .. வாகனங்கள் முன் விளக்குகளை ஒளிரவிட்டு கொண்டு செலுத்த வேண்டுகோள்

மு.இராச்சந்திரன், ஆ.ரமேஸ் நுவரெலியா பிரதேசத்தில் பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய மழையால் அப்பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான மார்க்கங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுவதால், சாரதிகள் வாகனங்களின் முன் விளக்குகளை ஒளிரவிட்டு, வாகனங்களைச் செலுத்துமாறு, பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், பிரதான வீதிகளில் வழுக்கல் தன்மையும் ஏற்பட்டுள்ளது. இப்பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்பட்டு, விபத்துகளைத் தவிர்த்துக்கொள்ளும்படி, நுவரெலியா பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ் மிர்ரர்

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...