Wednesday, 12 July 2017
அங்கத்துவ பணம் வாங்கும் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒரு மனதாக துரோகம் இழைக்கின்றனவா?
Sinnapalaniandy Sachidanandam
தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக பெருந்தோட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தொழிலாளர்களின் நாட்சம்பளம் மற்றும் உரிமைகள் பற்றி முடிவு செய்ய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் 18 சிறு தொழிற் சங்களின் பிரதிநிதிகள் சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப் பட வேண்டியதில்லை எனவும் தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய நிலுவைச் சம்பளம் எதுவும் தேவையில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவு செய்துள்ளார்கள். இதுவரை எந்த ஒரு தொழிற் சங்கமும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அறிவிப்புக்கு எதிராக எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை. எனவே பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட அனைத்து தொழிற் சங்கங்களும் ஏற்கனவே ஒன்று கூடி பேசி எடுத்த முடிவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது தெளிவாகிறது. அதாவது தோட்டத் தொழிலாளர்களிடம் மாதா மாதம் அங்கத்துவப் பணம் (சந்தா) வாங்கி வாழும் அனைத்து தொழிற் சங்கங்களும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒருமனதாக துரோகம் செய்துள்ளார்கள். இப்படியான தொழிற் சங்கங்களுக்குத் தொடர்ந்தும் மக்கள் அங்கத்துவப் பணம் கொடுப்பார்களேயாயின் குற்றவாளிகள் தொழிற் சங்கங்கள் அல்ல, அங்கத்துவப் பணம் கொடுக்கும் தொழிலாளர்களே என்பது எனது எண்ணம்.
Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment