நிர்வாக ஜனாதிபதி முறைமை குறைந்த அதிகாரங்களுடன் தொடர வேண்டும்.
அதுவே 'சிறுபான்மை' மக்களின் வாக்குகளுக்கு குறைந்தபட்ச பெறுமதியை தரும். அதேவேளை 'சிங்களவர்'ஒருவர் ஜனாதிபதியாக இருக்கும் போது, 'ஈழத்தமிழர், முஸ்லிம், மலையகத்தமிழர்' ஒருவர் உபஜனாதிபதியாக, மாறி மாறி வரிசைப்படி பதவி வகிக்க வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளை சார்ந்த 19 எம்பிக்கள் (பாராளுமன்றத்தில் நான்காவது பெரிய அணி) சார்பாக அரசியலமைப்புக்கு முன் வைக்கப்பட்டுள்ள பல யோசனைகளில், இவை இரண்டு யோசனைகள்.
Mano Ganesan இங்கே தொடர்ச்சியாக, "உங்கள் யோசனைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வகிபாகம் இல்லையா? ஏன் இங்கே கூட்டமைப்பை காணோம்?" என்று கேள்வி எழுப்புகின்றவர்கள், அக்கேள்விகளை கூட்டமைப்பிடம்தான் கேட்க வேண்டும்.
10/07/17 கூட்டமைப்பு பௌத்த மகாநாயக்கர்களிடமும், தமிழ் மக்களிடமும் உண்மையை கூறட்டும்> இந்த நொடியில் என் மனதில்....
த.தே.கூட்டமைப்பு, பௌத்த மகாநாயக்கர்களை சந்திக்க உள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது. இதை செய்யுங்கள் என்று நான் பல மாதங்களுக்கு முன்னமேயே திரு. சம்பந்தனிடம் சொன்னேன்.
உண்மையில், மகாநாயக்கர்களிடம் பேசி, சம்மதம் பெறுவது என்ற எதிர்பார்ப்பு, அரசியல் அமைப்பு நியாயங்களுக்கு அப்பாற்பட்ட மேலாதிக்கவாத மேம்போக்கு. இதற்கான எந்தவித சட்ட அவசியங்களும் இல்லை. எனினும், விடயங்களை நிதானத்துடன் கையாண்டு, அனைத்து வழி ஒழுங்கைகளிலும் பயணித்து பார்க்க வேண்டிய யதார்த்தம் கண்ணெதிரே சுவரில் எழுதப்பட்டுள்ளது. ஆகவே மகாநாயக்கர்களை சந்திக்க, திரு. சம்பந்தன் செய்துள்ள முடிவை வரவேற்கிறேன்.
மேடைகளில் உரை நிகழ்த்தியும், ஊடக அரங்குகளில் கலந்துரையாடியும், அறிக்கை-கட்டுரைகளை எழுதியும், வழங்கப்படும் பங்களிப்புகளை விட, நடைமுறை அரசியலில் ‘ஒருயொரு அடி’ முன்னோக்கி நகருவது என்பது காத்திரமானது, கஷ்டமானது என எனக்கு தெரியும்.
உண்மையில் திரு. சம்பந்தன் முழு நாட்டுக்கும் எதிர்கட்சி தலைவர் அல்ல. அந்த பங்களிப்பை அவர் வழங்கவில்லை. ஆனால், இந்த சம்பிரதாயங்களை தாண்டி அவரது இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைமை பதவி ஏற்பு, சிங்களத்துக்கு இரண்டு நல்ல செய்திகளை தந்தது.
ஒன்று, நாம் இலங்கை என்னும் ‘ஒரே நாடு’ என்ற வரையறைக்குள் வந்து விட்டோம் என்ற செய்தி.
அடுத்தது, எதிர்க்கட்சி தலைவர் திரு. அமிர்தலிங்கம், ஆயுத பாதைக்கு இடம் கொடுத்து அன்று பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறிய பின், இன்று மீண்டும், திரு. சம்பந்தன் அப்பதவியை பெற்றதன் மூலம் வடகிழக்கில் தமிழர், அதிகாரப்பூர்வமாக பாராளுமன்ற பாதைக்கு திரும்பியுள்ளனர் என்ற செய்தி.
ஆகவே, ‘இந்த தீவில் தனியொரு தமிழ் நாட்டை உருவாக்கும் கொள்கையையும், ஆயுதப்போரையும் கைவிட்டு இவ்வளவு தூரம் நாம் இறங்கி வந்திருக்கின்றோம். அதற்கு பதிலாக நீங்கள் எங்களுக்கு என்ன தரப்போகின்றீர்கள்’ என, மகாநாயக்கர்களின் முகங்களுக்கு நேரே, இருபது மாதங்களுக்கு முன்பு, அன்றே கேள்வி எழுப்பி இருக்க வேண்டும்.
இந்த காத்திரமான நல்ல செய்திகள், சிங்கள மக்களுக்கு நன்றாக காதில் ஏறும் விதமாக காத்திரமாக சொல்லப்பட வேண்டுமென நான் விரும்பினேன். அதனால்தான் ‘அப்போதே’ செல்லுங்கள் என்று சொன்னேன். இதுதொடர்பில், ‘நீங்கள் விரும்பும் ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளேன்’ என்றும் கூறினேன். தம் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை எதிர்க்கட்சி தலைவர் அறிய வேண்டும் எனவும் விரும்பினேன்.
ஏனெனில் இந்த பதவியை ஏற்றுக்கொண்டமைக்காக, திரு. சம்பந்தன், தீவிர தமிழ் தரப்பினால் விமர்சிக்கப்படுகிறார். தீவிர சிங்கள தரப்பினாலும் திட்டி தீர்க்கப்படுகிறார். இதற்கு மத்தியில்தான் அவர் அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவில் ஒரு தீர்வை நோக்கி கடுமையாக போராடுகிறார். ஆகவே அத்துணை விலை கொடுத்து பெற்ற அந்த எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்த்து தருகின்ற முற்போக்கு செய்திகளை காத்திரமாக தாமதமில்லாமல் இருபது மாதங்களுக்கு முன்பே பயன்படுத்தி இருக்க வேண்டும்.
ஏனெனில் அப்போது இந்த அரசியலமைப்பு என்ற கோஷம் முழுமையாக அரங்குக்கு வந்திருக்கவில்லை. இன்று, வடக்கு-கிழக்கு இணைப்பு, சமஷ்டி முறைமை, மத சார்பின்மை போன்ற தலைப்புகளை அரங்குக்கு கொண்டுவந்து, மகிந்த ராஜபக்ஸ அணி, மகாநாயக்கர்களை சூடேற்றி வைத்துள்ளது. தங்களுக்கு உரிய எதிர்கட்சி தலைவர் பதவியை திரு. சம்பந்தன் பறித்து கொண்டதை போன்ற சித்திரத்தை நாட்டில் இவர்கள் தீட்டி வருகிறார்கள்.
இந்த தலைப்புகள் பற்றிய எனது தனிப்பட்ட அடிப்படை நிலைப்பாடுகளை இந்நாட்டு தமிழர்கள் அறிவார்கள். திரு. சம்பந்தனின் அடிப்படை நிலைப்பாடுகளையும் நாடறியும். ஆனால், திரு. சம்பந்தனும், நானும் இடம்பெறும் அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவின் உள்ளே நிலவும் யதார்த்தம், இந்த விடயங்களை நிராகரிக்கின்றன. இதைதான் நான் உரக்க பேசுகிறேன். ஏனெனில் தமிழ் மக்களிடம் உண்மையை எடுத்து கூறி அவர்களை தயார் செய்திட வேண்டும். நான் உண்மையை உரக்க பேசுவதில், எவருக்கும் அதிருப்தி ஏற்படுமானால் அதுபற்றி நான் அலட்டிக்கொள்வதில்லை. அது எனது பிரச்சினை அல்ல.
ஆகவே இன்று தாமதித்தாவது, த.தே.கூட்டமைப்பு மகாநாயக்கர்களை சந்தித்து உண்மைகளை பேசுவது நல்லதே. அதுபோல், இதுதான் இங்கே இன்று நிலவும் யதார்த்தம், என்ற உண்மையை வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும் திரு. சம்பந்தன் எடுத்து கூறவேண்டும். மக்கள் புரிந்துக்கொள்வார்கள். ஏனெனில், ஒரு தரப்பு மகாநாயக்கர்கள் என்றால், அடுத்த தரப்பு (வடகிழக்கு) தமிழ் மக்கள்.
த.தே.கூட்டமைப்பு, பௌத்த மகாநாயக்கர்களை சந்திக்க உள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது. இதை செய்யுங்கள் என்று நான் பல மாதங்களுக்கு முன்னமேயே திரு. சம்பந்தனிடம் சொன்னேன்.
உண்மையில், மகாநாயக்கர்களிடம் பேசி, சம்மதம் பெறுவது என்ற எதிர்பார்ப்பு, அரசியல் அமைப்பு நியாயங்களுக்கு அப்பாற்பட்ட மேலாதிக்கவாத மேம்போக்கு. இதற்கான எந்தவித சட்ட அவசியங்களும் இல்லை. எனினும், விடயங்களை நிதானத்துடன் கையாண்டு, அனைத்து வழி ஒழுங்கைகளிலும் பயணித்து பார்க்க வேண்டிய யதார்த்தம் கண்ணெதிரே சுவரில் எழுதப்பட்டுள்ளது. ஆகவே மகாநாயக்கர்களை சந்திக்க, திரு. சம்பந்தன் செய்துள்ள முடிவை வரவேற்கிறேன்.
மேடைகளில் உரை நிகழ்த்தியும், ஊடக அரங்குகளில் கலந்துரையாடியும், அறிக்கை-கட்டுரைகளை எழுதியும், வழங்கப்படும் பங்களிப்புகளை விட, நடைமுறை அரசியலில் ‘ஒருயொரு அடி’ முன்னோக்கி நகருவது என்பது காத்திரமானது, கஷ்டமானது என எனக்கு தெரியும்.
உண்மையில் திரு. சம்பந்தன் முழு நாட்டுக்கும் எதிர்கட்சி தலைவர் அல்ல. அந்த பங்களிப்பை அவர் வழங்கவில்லை. ஆனால், இந்த சம்பிரதாயங்களை தாண்டி அவரது இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைமை பதவி ஏற்பு, சிங்களத்துக்கு இரண்டு நல்ல செய்திகளை தந்தது.
ஒன்று, நாம் இலங்கை என்னும் ‘ஒரே நாடு’ என்ற வரையறைக்குள் வந்து விட்டோம் என்ற செய்தி.
அடுத்தது, எதிர்க்கட்சி தலைவர் திரு. அமிர்தலிங்கம், ஆயுத பாதைக்கு இடம் கொடுத்து அன்று பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறிய பின், இன்று மீண்டும், திரு. சம்பந்தன் அப்பதவியை பெற்றதன் மூலம் வடகிழக்கில் தமிழர், அதிகாரப்பூர்வமாக பாராளுமன்ற பாதைக்கு திரும்பியுள்ளனர் என்ற செய்தி.
ஆகவே, ‘இந்த தீவில் தனியொரு தமிழ் நாட்டை உருவாக்கும் கொள்கையையும், ஆயுதப்போரையும் கைவிட்டு இவ்வளவு தூரம் நாம் இறங்கி வந்திருக்கின்றோம். அதற்கு பதிலாக நீங்கள் எங்களுக்கு என்ன தரப்போகின்றீர்கள்’ என, மகாநாயக்கர்களின் முகங்களுக்கு நேரே, இருபது மாதங்களுக்கு முன்பு, அன்றே கேள்வி எழுப்பி இருக்க வேண்டும்.
இந்த காத்திரமான நல்ல செய்திகள், சிங்கள மக்களுக்கு நன்றாக காதில் ஏறும் விதமாக காத்திரமாக சொல்லப்பட வேண்டுமென நான் விரும்பினேன். அதனால்தான் ‘அப்போதே’ செல்லுங்கள் என்று சொன்னேன். இதுதொடர்பில், ‘நீங்கள் விரும்பும் ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளேன்’ என்றும் கூறினேன். தம் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை எதிர்க்கட்சி தலைவர் அறிய வேண்டும் எனவும் விரும்பினேன்.
ஏனெனில் இந்த பதவியை ஏற்றுக்கொண்டமைக்காக, திரு. சம்பந்தன், தீவிர தமிழ் தரப்பினால் விமர்சிக்கப்படுகிறார். தீவிர சிங்கள தரப்பினாலும் திட்டி தீர்க்கப்படுகிறார். இதற்கு மத்தியில்தான் அவர் அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவில் ஒரு தீர்வை நோக்கி கடுமையாக போராடுகிறார். ஆகவே அத்துணை விலை கொடுத்து பெற்ற அந்த எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்த்து தருகின்ற முற்போக்கு செய்திகளை காத்திரமாக தாமதமில்லாமல் இருபது மாதங்களுக்கு முன்பே பயன்படுத்தி இருக்க வேண்டும்.
ஏனெனில் அப்போது இந்த அரசியலமைப்பு என்ற கோஷம் முழுமையாக அரங்குக்கு வந்திருக்கவில்லை. இன்று, வடக்கு-கிழக்கு இணைப்பு, சமஷ்டி முறைமை, மத சார்பின்மை போன்ற தலைப்புகளை அரங்குக்கு கொண்டுவந்து, மகிந்த ராஜபக்ஸ அணி, மகாநாயக்கர்களை சூடேற்றி வைத்துள்ளது. தங்களுக்கு உரிய எதிர்கட்சி தலைவர் பதவியை திரு. சம்பந்தன் பறித்து கொண்டதை போன்ற சித்திரத்தை நாட்டில் இவர்கள் தீட்டி வருகிறார்கள்.
இந்த தலைப்புகள் பற்றிய எனது தனிப்பட்ட அடிப்படை நிலைப்பாடுகளை இந்நாட்டு தமிழர்கள் அறிவார்கள். திரு. சம்பந்தனின் அடிப்படை நிலைப்பாடுகளையும் நாடறியும். ஆனால், திரு. சம்பந்தனும், நானும் இடம்பெறும் அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவின் உள்ளே நிலவும் யதார்த்தம், இந்த விடயங்களை நிராகரிக்கின்றன. இதைதான் நான் உரக்க பேசுகிறேன். ஏனெனில் தமிழ் மக்களிடம் உண்மையை எடுத்து கூறி அவர்களை தயார் செய்திட வேண்டும். நான் உண்மையை உரக்க பேசுவதில், எவருக்கும் அதிருப்தி ஏற்படுமானால் அதுபற்றி நான் அலட்டிக்கொள்வதில்லை. அது எனது பிரச்சினை அல்ல.
ஆகவே இன்று தாமதித்தாவது, த.தே.கூட்டமைப்பு மகாநாயக்கர்களை சந்தித்து உண்மைகளை பேசுவது நல்லதே. அதுபோல், இதுதான் இங்கே இன்று நிலவும் யதார்த்தம், என்ற உண்மையை வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும் திரு. சம்பந்தன் எடுத்து கூறவேண்டும். மக்கள் புரிந்துக்கொள்வார்கள். ஏனெனில், ஒரு தரப்பு மகாநாயக்கர்கள் என்றால், அடுத்த தரப்பு (வடகிழக்கு) தமிழ் மக்கள்.
No comments:
Post a Comment