Tuesday, 8 August 2017

மலையக வீரரான பிரின்ஸ் அந்தனி ஆசிய கராத்தே சம்மேளன நடுவராக தெரிவு

மலையக வீரரான பிரின்ஸ் அந்தனி ஆசிய கராத்தே சம்மேளன நடுவராக தெரிவு....!!!!!! கேகாலையைச் சேர்ந்தவரும் தற்போது கொழும்பில் பிரபல தனியார் அச்சக நிறுவனத்தின் உரிமையாளருமான கராத்தே மாஸ்டரான பிரின்ஸ் அந்தனி அவர்கள் அண்மையில் ஆசிய கராத்தே சம்மேளன நடுவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவரான இவர் சிறு வயது முதல் கராத்தே கலையை முறையாக கற்று இதுவரை 4 ஆவது கறுப்பு பட்டியைப் பெற்றுள்ளார். மலையக இளைஞர்களுக்கு தம்மால் முடிந்தவகையில் காரத்தே கலையைக் கற்று கொடுப்பதே தமது எண்ணம் என்றும் அவர் சொன்னார். விரைவில் மலையகத்தில் கராத்தே கலை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வுகளை மேற்கொள்ள எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார். அவருக்கு மலையக குருவியின் வாழ்த்துக்கள்...!!

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...