Tuesday, 8 August 2017

டிக்கோயாவில்கே ரள கஞ்சா .. நால்வர் கைது அட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் ..

இருவேறு பகுதிகளில் 75000 ஆயிரம் மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது - நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன் இருவேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா வைத்திருந்த நால்வரை அட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 07.08.2017 மாலை டியோயா நகரப்பகுதியில் விற்பனை செய்யவிருந்த நிலையில் ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனைத்தவிர திம்புள்ள பிரதேசத்தில் வெயாகொட பகுதியிலிருந்து நுவரெலியா சென்ற வேன் ஒன்றிலிருந்து ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்ப்பட்டுள்னர். சுற்றிவளைப்பின் போது 75000 ஆயிரம் மில்லி கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட நால்வரையும் 08.08.2017. அட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிகை எடுத்துள்ளதாகவும் அட்டன் மதுவரிதிணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். மலையாக குருவி

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...