Friday, 11 August 2017

பொது இடங்களில் குப்பைக் கொட்டிய 160 பேர் கைது

தமிழ் மிரர் : கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்தப் பகுதிகளில், பொது இடங்களில் குப்பை கொட்டிய 160 பேரை கடந்த இரு தினங்களில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இராணுவத்தினருடன் இணைந்து பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போதே மேற்படி 160 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கமைவாக, நுகேகொடயில் 40 பேரும் கொழும்பு மத்தி 34, கொழும்பு வடக்கில் 20 பேர்; கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கம்பஹா பகுதியில் 18 பேரும், களனி பிரதேசத்தில் 13 பேரும், கொழும்பு தெற்கில் 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த நபர்களுக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...