தினக்குரல்,உதயசூரியன்,சூரியகாந்தி,தினகரன்,தமிழ்மிரர்,சுடரொளி,மற்றும் சக்தி,சூரியன்,வசந்தம்,இவ்வாறு ஒவ்வோரு ஊடகத்திலும் எனக்கு கற்று தந்தவர்கள்,நண்பர்கள் என நிச்சயமாக யாரோ ஒருவர் இருக்கிறார்கள்.
ஆகவே என்னை ஏற்றுக் கொண்டு இந்த எழுத்துக்களை மலையகத்தின் வேண்டுகோளாக எடுத்துக் கொள்ளவும்.
08.08.2017 இன்றைய வீரகேசரி,தினகுரல்,தமிழ்மிரர் மற்றும் தினகரன் பத்திரிகைகளை முழுவதுமாக படித்ததில் வடக்கு கிழக்கு மற்றும் இந்திய செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மலையகத்திற்கு வழங்காததன் காரணம் யாதென அறிந்து கொள்ள பிரியப்படுகின்றேன்.
ஒவ்வோரு பத்திரிகையும் 7,8,9,6 என்கிற அடிப்படையில்தான் செய்திகளை மலையகத்திற்கென ஒதுக்கியிருக்கிறது.ஆனால் இதனை விடவும் இந்திய செய்திகள் இரு மடங்காக வெளிவந்திருப்பது வேதனையளிக்கிறது.மேலும் இந்த எண்ணிக்கையில் மலையக அரசியல் தலைவர்களின் அறிக்கைகைள்,செய்திகள்தான குறிப்பிட்டு சொல்லக் கூடியதாகவும் இருக்கிறது.
இதற்கு பத்திரிகை ஆசிரியர்கள்,நிர்வாகம்; மட்டுமல்ல பிரதேச ஊடகவியலாளர்களும்,நிருபர்களும் என்பது தொடர்பாகவும் நாம் அறிவோம்.
ஆனால் பிரதான ஆசிரியர்கள் கவனம் செலுத்தும் பட்சத்தில் மலையகத்தில் கட்டாயமாக எழுத வேண்டிய,காட்சிப்படுத்தபட வேண்டிய,தீர்க்கப்படவேண்டிய, அடையாளப்படுத்தப்படவேண்டிய ஏன் கொண்டாடவேண்டிய பல்லாயிரக்கணக்கான செய்திகள் புதைந்து கிடக்கின்றது.
செய்தித் தாள்களின் நியமிக்கப்பட்ட குழுக்களை அனுப்புவதன் மூலமும்,மலையகத்தின் மீது அக்கரையும்,உணர்வும் கொண்ட பிரதேச ஊடகவியலாளர்களை உருவாக்குவதன் ஊடாகவும்,சமூக ஊடககங்களின் மூலமாகவும் மலையகத்தை அப்படியே படம் பிடித்து பதிவு செய்வது நிச்சயமாக சாத்தியமாகும்.
அதே போன்று தொலைக்காட்சிகள்,வானொலிகள் கொப்பி பேஸ்ட் ஊடகங்களாக மாறி வருவது மிக்க கவலையாக இருக்கிறது.
ஏற்கனவே டிஸ்டீவி மயத்தால் இந்தியாவின் தமிழகமாக உருவெடுத்து வரும் மலையகத்தின் சில பகுதிகளில் இலங்கையின் செய்திகளை விடவும் தமிழ்நாட்டு செய்திகள்தான் அதிகம் அறிந்திருக்கிறார்கள்,
அதையும் தாண்டி இலங்கை தமிழ் தொலைக்காட்சிகள் வானொலிகள் இந்தியாவின் பிராந்திய அலைகளாக பாவித்து தமக்கான பாணியை மறந்து தழுவி நிற்பது ஊடக வரலாற்றுக்கே ஆரோக்கிமற்றதாகும்.
தென்னிந்தியாவிற்கு அறிவிப்பாளர்களை அனுப்பி வைத்தவர்கள் நாம்.நம்நாட்டில் புதிதான பாணிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்,செய்தியாளர்கள்,ஊடக துறையினரை உருவாக்குவதுதான் நமக்கான பெருமை.தேவையும் கூட.
நம்மை சர்வதேசத்திற்கு அடையாளப்படுத்த வேண்டுமாயின் நாம் மற்றவர்களுடைய ஜெராக்சாக இருந்தால் இயலாது என்பது எனது வாதம்.
ஆகவே என் கருத்துக்களில் தவறிருந்தால் உங்கள் மாணவனாக கருதி மன்னிக்க வேண்டுகிறேன்.
நிச்சயமாக நமது ஊடகங்கள் கெத்தாக நிற்பதைதான் நாங்கள் விரும்புகிறோம்.
அதற்கு நிறைய அர்பணிக்கவேண்டும் என்பது உள்ளர்த்தம்.
- அருன் வெங்கடேஷ்
No comments:
Post a Comment