Wednesday, 26 July 2017

புலிகளுக்கு ஆள்சேர்த்து கொடுத்த விரிவுரையாளருக்கு கண்ணதாசனுக்கு ஆயுள்தண்டனை!!

20246419_10213589333594848_7709476512306507594_n  புலிகள் இயக்கத்திற்கு ஆள்சேர்த்து  கொடுத்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளருக்கு ஆயுள்தண்டனை!! 20246419 10213589333594848 7709476512306507594 nவிடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆட்சேர்த்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியும், தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுபவருமான க.கண்ணதாஸிற்கு ஆயுள் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.அதேவேளை, கடத்திச் செல்லப்பட்ட குறித்த பெண் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளின் போது உயிரிழந்துள்ளதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காலப்பகுதியில் கிளிநொச்சியில் வைத்து விஜயபாலன் மஞ்சுளா என்ற பெண்ணை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆட்சேர்த்தாக 50 வயதுடைய கணெய்சுந்தரம் கண்ணதாஸ் என்ற முன்னாள் போராளிக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்ணின் தந்தையால் முறைப்பாடு செய்யப்பட்டது.இந்த முறைப்பாட்டுக்கு அமைவாக 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

 இந்தநிலையில் குறித்த சந்தேக நபருக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றில் வியபாலன் மஞ்சுளா என்ற பெண்ணை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாட்டுக்காக கடத்திய குற்றச்சாட்டுக்காக குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
2016 ஆண்டு மே மாதத்திலிருந்து குறித்த சந்தேக நபருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் இடம்பெற்று வந்தது. வழக்கு விசாரணைகளின் போது கடத்தப்பட்ட விஜயபாலன் மஞ்சுளா என்ற பெண்ணினுடைய தந்தை நாகரத்தினம் விஜயபாலன், தாய் விஜயபாலன் சாந்திமலர் ஆகியோர் சாட்சியமளித்திருந்தனர்.
இதன்போது தனது மகளை குறித்த நபர் வீட்டில் இருந்து இழுத்துச் சென்றதாக சாட்சியமளித்தனர்.
அத்துடன் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்களும் சாட்சியமளித்தனர். அதன் பின்னர் சந்தேக நபரும் சாட்சியமளித்திருந்தார்.
Untitled-11111  புலிகள் இயக்கத்திற்கு ஆள்சேர்த்து  கொடுத்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளருக்கு ஆயுள்தண்டனை!! Untitled 11111அவர் தனது சாட்சியத்தில் தான் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றி வருவதாகவும், தான் ஏற்கனவே விசேட புனர்வாழ்வு அளிக்கப்பட்ட நபர் எனவும் தெரிவித்திருந்தார்.
எதிர்தரப்பு விவாதம் முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் கடந்த 17ஆம் திகதி சந்தேக நபர் குற்றவாளியாக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனினால் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் தீர்ப்புக்கான குறித்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றவாளி ஏற்கனவே புனர்வாழ்வு பெற்றிருந்தாலும் அவருக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும் என கூறிய நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
வழக்கு விசாரணைகளை அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் நெறிப்படுத்தியிருந்தார்.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...