Wednesday, 19 July 2017
கொட்டகல .. வேன் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து
வேன் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து கடும்காயங்களுக்குள்ளான நபர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி – சாரதி கைது
- க.கிஷாந்தன்
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பகுதியில் 19.07.2017 அன்று காலை 8.10 மணியளவில் வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கடும்காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் சாரதி கொட்டகலை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதன் பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் - நுவரெலியா ஏ -7 பிரதான வீதியில் கொட்டகலை பகுதியிலிருந்து பத்தனை நோக்கிச் சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் ஒன்றும் பத்தனையிலிருந்து கொட்டகலை கொமர்ஷல் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டர் சைக்களும் கொட்டகலை ரொசிட்டா நகர் பகுதியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார்சைக்கிளை செலுத்தி சென்ற சாரதியே கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், வேன் சாரதி லொறி ஒன்றினை முந்திச் செல்ல முற்பட்ட போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்துடன் தொடர்புடைய வேன், லொறி, மோட்டார் சைக்கிள் ஆகியன பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலையக குருவி
Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment