Monday, 17 July 2017

அமைச்சர் வே.இராதாக்கிருஷ்ணன் : வீட்டு வேலைக்கு மலையக மக்கள் என்ற நிலைய மாற்றுவோம்!

மலையக குருவி;மலையக மக்கள் என்றதும் வீட்டு வேலைக்கு ஆட்கள் எடுக்கலாம் என்ற நிலையை மாற்றுவோம் - கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் செய்தியாளர் - பா.திருஞானம் மலையக மக்கள் என்றதும் வீட்டு வேலைக்கு ஆட்கள் எடுக்கலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும் அதற்கு அனைவரும் கல்வி கற்க்க வேண்டும். அதனாலேயோ மயைக கல்வி அபிவிருத்திக்கு பல்வேறு செயற்திட்டங்கள முன்னெடுக்கபட்டு வருகின்றன. 2025 ஆம் ஆண்டு வரும் போது ஒரு வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவாக வேண்டும் என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை தவைவருமான வே.இராதாகிருஸ்ணன். தேசிய வீடமைப்பு அதிகார சபையுடன் இனைந்து பெருந்தோட்ட மக்களுக்கும் வீடமைப்புகளை மேற்க் கொள்ளும் பொருட்டு லிந்துல்ல பம்பரகல்ல தோட்டம் அப்பர்கிரன்லி பிரிவில் 30 வீடுகளை அமைப்பதற்க்கான அடிகல் நாட்டும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.


இந்நிகழ்விற்கு மத்திய மாகான சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம்¸ தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள்¸ தோட்ட முகாமையாளர்¸ மலையக தொழிலாளர் முன்னனியின் நிதி செயலாளர் எஸ்.விஸ்வநாதன்¸ மலையக மக்கள் முன்னனியின் நிர்வாக இயக்குனர் எஸ் அஜித்குமார்¸ பனிப்பளர். எம்.கணகராஜ்¸ தொழி உறவு அதிகாரிகள் உட்பட தோட்ட தலைவர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

தொடர்ந்து உரையாற்றுகையில், பெருந்தோட்ட மக்களின் வருமைக்கு காரணம் மக்களிடையே கல்வி அறிவு இன்மையே. இன்று கொழும்பு மற்றும் தன வந்தகர்களின் வீடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் என்றதும் மலையகத்தையே நாடுகின்றனர். காரணம் இவர்கள் படிக்கவில்லை வீட்டு வேலைக்கு வருவார்கள் என்று. நாங்கள் நன்கு படித்து இருந்திருந்தால் இந் நிலை ஏற்பட்டு இருக்குமா.?

அதனால் உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி நல்லா படிக்க வையுங்கள். அதற்கான வசதிகள் அனைத்தும் மேற்க் கொள்ளபட்டு வருகின்றோம். தற்போது 13 வருடம் கல்வி கட்டாய கல்வியாக மாற்றபட்டள்ளது. சாதாரண தரம் சித்தியெய்தாவிட்டாலும் உயர்தரத்தில் தொழில் வாய்ப்புக்கான கல்வியை தொடர முடியம். என்று கூறினார்.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...