Tuesday, 18 July 2017
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் வி. பாலகிருஷ்ணன் இலங்கை வருகை
சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
ஐந்து நாட்கள் இலங்கையில் தங்கி இருக்கவுள்ள அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளார்.
அத்துடன் அவர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவையும் சந்திக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் மறுசீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பான இரண்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டு வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரையும் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளும், சிங்கபூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். தினகரன்
Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment