ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்ற பாடசாலை எப்படி இரண்டு விதமாக மாகாண உறுப்பினர் ராஜா ராமின் சந்தேகம்!
- பா.திருஞானம்
தற்பொழுது இலங்கையின் நல்லாட்சியில் அனைத்து தரப்பினரும் சமனாக மதிக்கப்படுகின்றார்கள் என்று அரசாங்கமும் அமைச்சர்களும் கூறினாலும் அதற்கு எதிர்மாறாக மத்திய மாகாண முதலமைச்சரும் மத்திய மாகாண கல்வி அமைச்சும் செயல்படுகின்றதோ என்ற சந்தேகம் எனக்கு எழுகின்றது என மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஹட்டன் கெப்ரியல் பெண்கள் பாடசாலையின் தமிழ் பிரிவிற்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்ட பின்பே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இந்த பாடசாலையின் பெரும்பான்மையினர் கல்வி கற்கின்ற பகுதி மிகவும் அழகாகவும் அனைத்து வசதிகளுடனும் இயங்குகின்றது. ஆனால் இதன் தமிழ் பகுதி மிகவும் மோசமாகவும் மாட்டுக் குடிலை போலவும் இருக்கின்றது. இங்கிருக்கின்ற வகுப்பறைகளில் இருந்து கல்வி கற்கின்ற மாணவிகளுக்கு நிச்சயமாக பாராட்டு தெரிவிக்க வேண்டும். வகுப்பறைகளில் துர்நாற்றம் வீசுகின்றது.
ஏலி, பாம்பு, நாய் எச்சங்கள் வகுப்பறைகளில் இருக்கின்றது. தற்பொழுது நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகின்றது. இங்கிருக்கின்ற மாணவிகளுக்கு மிக விரைவில் பரவுகின்ற அபாயமான ஒரு நிலை இருக்கின்றது. இங்கு கல்வி பயில்கின்ற மாணவிகள் தமிழர்கள் என்பதால் இவ்வாறு பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்களோ என்று என்னத் தோன்றுகிறது.















