Monday, 21 August 2017

திகாம்பரம் : இனி வாக்கு கேட்டு வரமாட்டேன்

இனி வாக்கு கேட்டு வரமாட்டேன் என்கிறார் திகாம்பரம்! - Yoganathan Yoga Jeganathan எதிர்வரும் காலங்களில் வாக்கு கேட்டு மக்களிடத்தில் வரப்போவதில்லையென அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார். மாறாக தான் செய்யும் சேவையை பார்த்து நீங்களாகவே வாக்களியுங்கள் எனவும் அவர் கூறியுள்ளார். மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் அக்கரபத்தனை மொன்ராசி வைத்தியசாலைக்கு செல்லும் பாதைக்கான ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்து வைத்து உறையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் திகாம்பரம், தோட்டப்புற மக்களுக்கு எப்போதும் இல்லாதவாறு நல்லாட்சி அரசாங்கத்தால் பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்காக பாரியளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எமது மக்களின் பிரச்சினைகள் அறியப்பட்டு 2020 ஆண்டளவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்யக்கூடியதாக இருக்கும். எனவே எம்மைப் பலப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு மக்களாகிய உங்களின் பொறுப்பு. இனி நான் வாக்கு கேட்டு வரமாட்டேன். மாறாக நாம் செய்யும் சேவையை பார்த்து நீங்களாகவே வாக்களியுங்கள் என்று கூறினார்.<

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...