வளர்க்கும்போது இயற்கை தரும் ஒட்டுதலில் பாசமாக இருப்பதெல்லாம் சரிதான். இதற்காக ஒட்டுமொத்த வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை எல்லாம் நாங்கள்தான் எடுப்போம் என்றால் இவர்களை நம்மை பிள்ளைகளாக பார்க்கிறார்களா, அடிமைகளாகப் பார்க்கிறார்களா என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டும். அவர்களுக்கு எவ்வளவு விளக்கினாலும் இதெல்லாம் புரியாது என்பதையும் நாம் புரிந்துகொண்டு, குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல் இந்தப் பிரச்சினைகளை சந்திப்பது அவசியம்.
3) உன் தங்கச்சி வாழ்க்கை என்னாவது, உன் அக்கா புருஷன் தப்பா நினைப்பாரு, தம்பி வாழ்க்கை நாசமா போயிரும் என்பார்களே தவிர நம் விருப்பத்தையோ, உரிமையையோ பற்றி நினைக்கவே மாட்டார்கள். அதனால் இந்த புலம்பல்களையெல்லாம் நாம் கண்டுகொள்ள வேண்டியதுமில்லை, குற்ற உணர்ச்சியாக கருதவும் வேண்டியதில்லை. முட்டாள்கள் முட்டாள்த்தனமாக அடுத்தவனின் தனிப்பட்ட விருப்பத்தில், தேர்வில்தான் தங்கள் வாழ்க்கை ஒளிந்து இருக்கிறது என நினைத்தார்களானால் அதற்கு நாம் பொறுப்பில்லை. அது அண்ணன் என்றாலும், தங்கை என்றாலும் யாராக இருந்தாலும்.
4). நீங்கள் உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழைத்து, "அக்காவுக்கு திருமணமாகாமல் எத்தனையோ வீட்டில் தங்கைகளுக்கு திருமணம் ஆகியுள்ளது. எனவே இதெல்லாம் பிரச்சினை இல்லை. எனக்கு எப்போது விருப்பமோ அப்போதுதான் திருமணம் செய்துகொள்ளமுடியும்,” என சொல்லிவிடுங்கள். அழுவார்கள், ஒப்பாரி வைப்பார்கள், மிரட்டுவார்கள், சாகிறோம் என்பார்கள். கண்டுகொள்ளாதீர்கள். விவாதத்தை வளர்க்காதீர்கள். இந்திய குடும்பங்களில் விவாதங்களால் பயனே கிடையாது. ஏனென்றால் என்னதான் நீங்கள் பெரிய நிறுவனத்தில் பெரிய வேலையில் இருந்தாலும் நீங்கள் பெண் என்பதாலேயே உங்களுக்கு எதுவுமே தெரியாது என உங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் உறுதியாக நம்பும். அமைதியாக, நிதானத்தை இழக்காமல், வார்த்தைகளை விடாமல் உங்கள் முடிவை கறாராக சொல்லிவிடுங்கள். உறுதியாக இருங்கள்.
5) நாத்திகம் பேசுவதனாலேயே ஒரு ஆண் உரிமைகளை மதிப்பவன் என்றாகாது. நாத்தீகம் மட்டும் வக்கனையாக பேசிக்கொண்டு மனைவியின் சுதந்திரத்தில் தலையிட்டுக்கொண்டே இருக்கும் எத்தனையோ ஆட்களை நான் பார்த்திருக்கிறேன். அதேநேரம் தீவிரமான பக்தராக இருந்தும் மனைவியின் உரிமைகளை மதிக்கும் ஆட்களையும் நான் பார்த்திருக்கிறேன். எனவே இதற்கெல்லாம் அப்பாற்பட்டு உங்களுக்கு பிடிக்கிறதா, உங்களுக்கு compatibleஆக இருக்கிறாரா என்பதை மட்டுமே பாருங்கள்.
6) கடைசிவரை காதலிக்க சரியான ஆளே கிடைக்கவில்லை என்றால் உங்கள் விருப்பங்களை மேட்ரிமோனியல் சைட்டில் போட்டு அதேபோன்ற விருப்பமுள்ளவர்கள் இருக்கிறார்களா எனப் பாருங்கள். பிடித்திருந்தால் பேசிப்பாருங்கள். அடுத்த கட்டத்திற்கு போகத் தோன்றினால் மனம் சொல்வதைக் கேளுங்கள். மேட்ரிமோனியல் சைட் என்றவுடன் திகைக்காதீர்கள். வெளிநாட்டு டேட்டிங் சைட்டுகளைதான் இந்த கலாச்சார வெண்ணைகள் matrimonial siteகளாக மாற்றிவைத்திருக்கின்றன. அதாவது ஒரு பெண் அவளுக்கான துணையை தேடினால் அது dating site. ஒரு பெண்ணுக்கான துணையை குடும்பமே சேர்ந்து தேடினால் அது matrimonial site. நாம் நம் வசதிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
நான் இறுதியாகச் சொல்வது இதுதான். கலாச்சாரம், குடும்பக் கட்டுமானம் என்ற பெயரில் மிகப்பெரிய மனித உரிமை மீறல் இந்தியாவில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஆண்களும், பெண்களும் சரிசமமாகவே பாதிக்கப்பட்டாலும் இதில் பெண்கள் சந்திக்கும் மன அழுத்தமும், அவர்கள் மீது திணிக்கப்படும் குற்ற உணர்ச்சியும் மிக மிக மிக அதிகம். இதற்கெல்லாம் ஆட்படாதீர்கள். குடும்பம் எனும் கூட்டை விட்டு வானத்தைப் பாருங்கள். உலகம் இந்த போலிக்கலாச்சாரம், பாரம்பரியத்தையெல்லாம் விட மிகமிகப் பெரியது. அதில் உங்களுக்கான தேர்வுகளும், வாழ்க்கையும் ஏராளம். அதை நீங்கள் மட்டுமே முடிவு செய்யுங்கள். சாகும்போது , “தப்போ ரைட்டோ என் வாழ்க்கையின் ஒவ்வொரு வரியையும், பக்கத்தையும் நான் தான் எழுதினேன்,” என்கிற திருப்தி வந்தால்தான் நாம் மனிதர்களாகப் பிறந்ததற்கான அர்த்தம். வாழ்த்துகள். 

P.s. Sorry for late reply. Wanted to answer in detail.
-டான் அசோக்
No comments:
Post a Comment