Tuesday, 22 August 2017

திட்டத்தின் பெயர் "சியவெர" இனி "சுயசக்தி" என்று அழைக்கப்படும்

Mano Ganesan : · இன்று பகல், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது சபையில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதி; நாடு முழுக்க இருக்கக் கூடிய எல்லா பெயர்ப் பலகைகளும் மூன்று மொழிகளிலும் தெளிவாக, எழுத்து பிழையியில்லாமல் இருக்க வேண்டும். சிங்களத்திலே பெரிதாக எழுதிவிட்டு, தமிழிலே சிறிதாக எழுத முடியாது. அப்படி எழுதப்படுமானால் தமிழர்களுக்கு மாத்திரம் நான் கண்ணாடி கொடுக்க வேண்டி வரும். அப்படி வழங்க முடியாது. அதற்கான சந்தர்ப்பம் கிடையாது நாடு முழுக்க சிங்களமும், தமிழும் சமமான ஆட்சி மொழிகள். ஆகவே அரசாங்க பெயர் பலகைகள் எழுதும் போது, வடக்கு, கிழக்கில் தமிழ், சிங்களம்,ஆங்கிலம் என்ற வரிசை பேணப்பட வேண்டும். ஏனைய மாகாணங்களில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்ற வரிசை பேணப்பட வேண்டும்.

அதேபோல், அரசாங்க திட்டங்களுக்கு, சிங்கள மொழியில் பெயர்களை வைத்து விட்டு, அது புரிந்தாலும் புரியாவிட்டாலும் கூட அப்படியே தமிழ் மொழியில் உச்சரிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அது சட்ட விரோதமானது, பிழையானது. இன்று காலை பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகாவின் ஒரு திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்து இருந்தது. அந்த திட்டத்தின் பெயர் "சியவெர" என்பதாகும்.


இதற்கு நான் "சுயசக்தி" என்ற தமிழ் பெயரை இங்கே சூட்டுகிறேன். இதோ இப்போது சபையில் இருக்கும் அமைச்சர் பொன்சேகாவுக்கு காலையிலேயே இதை நான் அறிவித்து விட்டேன். இனிமேல் இது தொடர்பில் என் அமைச்சின் மொழியுரிமை பிரிவு கவனம் செலுத்தும். என் திட்டங்களை படிப்படியாக அமுல் செய்ய எனக்கு கால அவகாசம் தாருங்கள். என்னை நம்புங்கள். நான் இவற்றை செய்து முடிப்பேன்.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...