
வருடங்களுக்கு மேல் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லை இதனால் இந்த பிரதேசத்தில் வாழும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இப்பிரதேசத்தில் பெரட்டாசிஇ கரகஸ்தலாவஇ எல்பொட போன்ற கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த ரஸ்புருக் தோட்டம்¸ பெரட்டாசி தோட்டம்¸ பூச்சிகொட தோட்டம்¸ பெரட்டாசி தொழிற்சலை பிரிவு தோட்டம்¸ மேரியல் தோட்டம்¸ அயரி தோட்டம்¸இ எல்பொட வடக்கு தோட்டம்¸இ மேமொழி தோட்டம்¸ காச்சாமலை தோட்டம்¸ கட்டகித்துல தோட்டம்இ வெதமுள்ள கெமினிதன் தோட்டம்¸ கந்தலா தோட்டம் போன்ற
காணப்படுகின்றனர். சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இந்த பாதையில் அரச போக்குவரத்து சேவை இருந்தது அதுவும் பாதை அவலம் காரணமாக இடை நிறுத்தபட்டுள்ளது. இப்பிரதேசத்தில் காணப்படும் 8 பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள்; பஸ் உரிய நேரத்திற்கு செல்லாததினால் காலை 9.00 மணிக்கே பாடசாலை செல்கின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி நிலையும் பாதித்து வருகின்றது.
தற்N;பாது சுமார் 9 தோட்டங்களுக்கும்; பொதுவாக ஒரு வைத்தியசாலை காணப்படுகின்றது. இங்கும் ஒரு வைத்தியரே காணப்படுகின்றார். இந்த வைத்தியசாலையில் இருந்நு அவசர தேவை ஏற்படும் போது நோயாளர்களை தோட்ட லொறிகள் மூலமாகவே புஸ்ஸலாவ பிரதேசத்தில் காணப்படும் வைத்திசாலைக்கு அனுப்பபடுகின்றனர். அம்புலன்ஸ் வசதியும் இல்லை. சிலர் முச்சக்கர வண்டிகளில் செல்கின்றனர். பாதையோ குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. லொறியிலும் முச்சக்கர வண்டியி;லும் செல்லும் போது குழந்தைகள் பாதையிலேயே கிடைத்தும் உள்ளது. சிலர் தகுந்த நேரத்தில் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படாததினால் பாதையிலேயே இறந்தும் உள்ளனர்.
இந்த பாதையின் ஒரு பகுதி முன்னைய அரசாங்க காலத்தில் 3.கி.மீ திருத்தபட்டது. அரசாங்க மாற்றத்தின் பின்னர் இந்த வேலைதிட்டம் தொடர்ந்து முன்னெடுக்கபடவில்லை. இடை நிருத்தபட்டு;ள்ளது. தற்போது இ;ந்த பாதையின் இரு மருங்கிலும் காணப்படும் தோட்ட நிறுவாகங்கள் பாதையை மண்¸ உட்பட புற்களை போட்டு செப்பனிட்டு வருகின்றது. இதனால் மழைக் காலங்களில் பாதை மிகவும் பாதிக்கபட்டு சேறாக காணப்படுகின்றது. பாதை அவலம் காரணமாக பல முறை பல வீபத்துகளும் இடம் பெற்று பலர் இறந்தும் உள்ளனர்.எனவே இந்த பாதையை உடனடியாக திருத்தி தறுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்த பாதையை செய்து தருவதாக மலையகத்தின் அரசியல் தலைமைகள் காலத்திற்கு காலம் தேர்தல் நேரங்களில் வாக்குறிதி அளித்தாலும் அவை நடைமுறைபடுத்துவதாக தெரியவில்லை. தேர்தல் காலங்களில் சென்றவர்களில் ஒரு சிலரை தவிரை பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அந்த பக்கம் வந்ததாக வரவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். balakirsuhan thirunganam
No comments:
Post a Comment