வணக்கம், பணிகின்றேன்....!!!!
ஊடகவியலாளர் Sanath Sudar எழுதிய கட்டுரை உங்களுக்காக
(இறுதிக்கட்டம்வரை வாசிக்கவும்)
ஒரு வழிப்போக்கனின் இழிச்செயலுக்கு- கருத்துக்கு எதிராக ஒட்டுமொத்த மலையகமும் கிளர்ந்தெழுந்து, எரிமலைகள் கொதிக்குழப்புகளை கக்குவதுபோல் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தி, கண்டனக் கணைகளைத் ஆவேசமாகத் தொடுத்திருந்தது.
மலையக மண்ணுக்கும், அங்குவாழும் பெண்ணுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் தொடுக்கப்பட்டிருந்த சொற்கணைகளுக்கு எதிரான இந்த எழுச்சி- ஒற்றுமை- அதிரடி நடவடிக்கை என்பன இருகரம்கூப்பி வரவேற்கப்படக்கூடியவை.
எனினும், அந்த வழிப்போக்கனை வைத்து சிலர் வாக்குவேட்டைக்கான பாய்ச்சலுக்கு ஆயத்தமானதும், மேலும் சிலர் தமக்கான மவுசை அதிகரித்துக்கொள்வதற்காக மிகவும் கீழ்த்தரமான முறையில் பிரதேச வாதம் பேசியதும் படுகேவலமான செயலாகும். (அசிங்கத்தையும் தமக்கான ஆபரணமாக மாற்றிக்கொள்ள முற்பட்டவர்களுக்கே இது பொருந்தும்)
சிவத்துக்கான பதிலடி என்ற போர்வையில் சில மலையக நண்பர்கள் முகநூலில் விடியோக்களை பதவிட்டிருந்தனர். அது அவர்களுக்குரிய உரிமை.
கருத்துச் சுதந்திரத்தில் தலையிட நான் விரும்பவில்லை. எனினும், ஒரு சிலர் பயன்படுத்திய வார்த்தைப்பிரயோகமானது படுமோசமாக இருந்தது. நாகரீகமற்ற சமூகம் என முன்வைக்கப்படும் விமர்சனத்துக்கு அது வலுசேர்த்ததே ஒழிய அந்த நபருக்கு எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
கருத்துச் சுதந்திரத்தில் தலையிட நான் விரும்பவில்லை. எனினும், ஒரு சிலர் பயன்படுத்திய வார்த்தைப்பிரயோகமானது படுமோசமாக இருந்தது. நாகரீகமற்ற சமூகம் என முன்வைக்கப்படும் விமர்சனத்துக்கு அது வலுசேர்த்ததே ஒழிய அந்த நபருக்கு எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
ஒரு தனிநபரின் கருத்தானது ஒட்டுமொத்த சமூகத்தினதும் நிலைப்பாட்டை பிரதிபதிப்பதில்லை. ஆகவே, அந்த தனி நபரின் கருத்தை ஏன் ஒட்டுமொத்த யாழ்ப்பாண மக்களின் ஏகோபித்த குரலாக- கருத்தாக நினைத்து அந்த சமூகத்தை திட்டித்தீர்க்கவேண்டும். இது தவறான செயல் என்பதுடன் தமிழர் என்ற ஒருமித்தக் கோட்பாட்டை சிதைக்கும் நடவடிக்கையாகும்.
சிவம் வெளிப்படையாக பேசிவிட்டார்: மற்றைய யாழ்ப்பாண மக்கள் மனதுக்குள் முணுமுணுக்கின்றனர்: அவர்களை மலையக மக்களை கேவலமாகவே பார்க்கின்றனர் என்றெல்லாம் தற்போது கருத்துகள் பரப்பட்டுவருகின்றன. இதன் நோக்கம்தான் என்ன? அவன் பிரதேச வாதம் பேசினான் என்பதற்காக நீங்களும் பேசுவதுதான் வீரமா?
அவனுக்காக வடக்கிலுள்ள எனது நண்பர்கள் பலர் வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டனர். அது தவறு எனவும் சுட்டிக்காட்டினர். எனவே, இனியும், இனியும் பிரதேச வாதம் பேசவேண்டாம். அது எமது சமூகத்துக்கே பாதிப்பாக அமையும் என்பது வெளிப்படை. அது எப்படி நடக்கும் என்பதை விவரிக்க வேண்டியதில்லை என நினைக்கின்றேன்.
இந்த விடயம் பற்ற எதையும் பேசக்கூடாது-எழுதக்கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால், வெளியிடப்படும் - முன்வைக்கப்படும் கருத்துகளானவை மலையக-வடக்கு உறவுப்பாலத்தை சிதைப்பதாகவே இருக்கின்றன. எனவேதான், இது பற்றி பதிவொன்றை இட்டேன்.
சரி. மலையக சமூகம் பற்றி கேவலமாக பேசப்படுவதற்கு என்ன காரணம்? அதை எப்படி சரி செய்யலாம் என்ற யோசனையை எவராவது முன்வைத்தீர்களா?
200 வருடங்களுக்கு மேலாக லயன் என்ற கல்லறைக்குள் நடமாடும் பிணங்களாகவே வாழ்ந்தோம். அடிடைகளுக்கான நிதி நிவாரணமாகவே எமது ஊழியப்படைக்கான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. மலசலகூடம் இல்லை. போக்குவரத்து இல்லை. வசதிகள் இல்லை. இதற்கு எதிராக ஒட்டுமொத்த சமூகமும் இப்படி ஓரணியில் திரண்டிருந்தால் மாற்றத்தைக் கண்டிருக்கலாம் அல்லவா?
உள்நாட்டில் செயலற்றவர்களாக இருந்துக்கொண்டு, வெளிநாட்டிலுள்ள ஒருவனுக்காக வீரனாக மாறுவதில் மாற்றம் வந்துவிடுமா?
மலையகத்திலுள்ள தொழிற்சங்க உறுப்பினர்களும் கருத்துகளை முன்வைத்திருந்தனர்.
இரத்தம் உறிஞ்சும் அட்டைக்கூட வயிறு நிரம்பியதும் தானாக இறங்கிச்சென்றுவிடும். ஆனால், தோட்டத்தொழிலாளர்களின் இரத்தத்தை இன்றும் உறிஞ்சிக்கொண்டிருக்கும் தொழிற்சங்கங்கள் எமது மக்களுக்காக உரிய வகையில் செயற்பட்டிருந்தால் இப்படி இழிவாக பேசுவதற்குரிய வாய்ப்பு உருவாகியிருக்குமா? என்ற கேள்வியை உங்கள் மனசாட்சியிடம் ஒருமுறை கேட்டுப்பார்த்துவிட்டு பொங்கி எழுங்கள்- அப்போது நாமும் போற்றி புகழ்வோம்.
சிவத்துக்காக சி.ஐ.டியின் வாசலுக்கேச் சென்றவர்கள், கம்பனிகளின் அட்டுழியங்கள்- அடக்குமுறைகளுக்கு எதிராக என்றாவது முறையிட்டிருப்பார்களா?
இன்று ஜேர்மன் குறித்தும், அங்குள்ள சட்டதிட்டங்கள் சம்பந்தமாகவும் கொக்கரிப்பவர்கள், மலையக மக்களை இங்கு அழைத்துவந்த பிரிட்டனிடமோ அனுப்பிவைத்த இந்தியாவிடமோ எம்மவர்களுக்கான உதவிகள் பற்றி பேசியிருப்பார்களா?
எமது பெண்கள் குறித்து சவம் மன்னிக்கவும் சிவம் பேசிய கருத்தை நான் நியாயப்படுத்த முற்படவில்லை. இதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஆனால், எமது பெண்சமூகம் இன்னும் எழுச்சிப்பெறவேண்டும்.
No comments:
Post a Comment