Tuesday, 25 July 2017

மாலைதீவின் பாராளுமன்றம் இராணுவத்தால் அதிரடி சுற்றிவளைப்பு

வீரகேசரி : Gnanaprabu மாலைதீவின் பாராளுமன்றம் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த நடவடிக்கை அந்த நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமினின் உத்தரவிற்கமைய எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாலை தீவு சபாநாயகர் அப்துல்லா மஸிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என அந்நாட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை, மாலைதீவில் ஜனாதிபதி ஆட்சி இடம்பெறுகின்ற நிலையில், சபாநாயகருக்கொதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையே குறித்த முற்றுகைக்கு காரணம் என தொிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...